பிரம்மாண்டமாக நடைபெற்ற திமுக பவள விழா – பங்கேற்ற தலைவர்கள்
காஞ்சிபுரத்தில் திமுக பவள விழா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிரமாண்டமாக நடைபெற்றது.
காஞ்சிபுரத்தில் திமுக பவள விழா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிரமாண்டமாக நடைபெற்றது.
“திமுக, தி.க. என்னும் இரட்டை குழல் துப்பாக்கியோடு மூன்றாவது குழலாக விசிக என்றென்றும் இருக்கும். தொடர்ந்து சனாதன சக்திகளுக்கு எதிராக நாங்கள் முழங்குவோம்” என உறுதியளித்தார் விசிக தலைவர் திருமாவளவன்
திமுகவின் 100-வது ஆண்டில் உதயநிதி முதலமைச்சராக இருப்பார் என காஞ்சிபுரத்தில் நடைபெறும் பவள விழாவில் தெரிவித்துள்ளார் கருணாஸ்
காஞ்சிபுரத்தில் திமுக பவள விழா பொதுக்கூட்டம் தொடங்கியது. இதில் செல்வப்பெருந்தகை, வைகோ, கே.பாலகிருஷ்ணன், முத்தரசன், திருமாவளவன், கமல்ஹாசன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் உரையாற்ற உள்ளனர்.
காஞ்சிபுரத்திற்கு வருகை தரவுள்ள முதலமைச்சரை சந்தித்து போராட்ட குழுவினர் மனு அளிக்க இருந்த நிலையில் பரந்தூர் பசுமைவெளி விமான நிலைய திட்ட எதிர்ப்பு குழுவினரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 6 சதவீதம் வரை வரி உயர்த்த தீர்மானம் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் - திருவாடனை தாலுகா தொண்டியில் உள்ள தொடக்கப் பள்ளியை இடித்து அப்புறப்படுத்தக்கோரி உச்சநீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பள்ளி கட்டிடத்தை 12 வாரத்திற்குள் இடித்து அப்புறப்படுத்தி புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
ஜாமினில் வெளிவந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை, திமுக அமைச்சர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் சந்தித்து உரையாடினர்.
CM Siddaramaiah MUDA Case : ''முடா வழக்கு தொடர்பாக லோக் ஆயுக்தா போலீசாரின் விசாரணை நேர்மையாக இருக்காது; அவர்களால் பாரபட்சமின்றி விசாரணை நடத்த முடியாது''
TVK Maanadu : தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு அக்டோபர் 27ம் தேதி நடைபெறுகிறது. இதற்காக போலீஸார் தரப்பில் 33 நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தது. இதில் 17 நிபந்தனைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.