K U M U D A M   N E W S

காஷ்மீர் தேர்தல்... மோடி ஸ்ரீநகரில் பரப்புரை

ஜம்மு காஷ்மீரில் மூன்று கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. முதல்கட்ட தேர்தல் நடந்து முடிந்த நிலையில் இரண்டாம் கட்டமாக செப்டம்பர் 25ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையெட்டி பிரதமர் மோடி ஸ்ரீநகரில் 2ம் கட்ட தேர்தல் பரப்புரையை இன்று தொடங்கினார்

பாஜகவால் செய்ய முடியாது.. ஈகோவை மட்டும் திருப்திபடுத்தும் - ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து மு.க.ஸ்டாலின்

பாஜகவால் ஒரே ஒரே தேர்தல் திட்டத்தை ஒருபோதும் செயல்படுத்த முடியாது என்றும் இது திசை திருப்பல் தந்திரம் தான் என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

‘ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம்’ நடைமுறைக்கு சாத்தியமற்றது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு

‘ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம்’ நடைமுறைக்கு சாத்தியமற்றது. ஒரு கட்சியின் ஆசைக்காக ஜனநாயகத்தை வளைக்க முடியாது என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசை சாடியுள்ளார்.

EPS Case Update : தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கு.. இபிஎஸ் ஆஜராவதில் இருந்து விலக்கு

Dayanidhi Maran Defamation Case on EPS : எடப்பாடி பழனிச்சாமிக்க்கு நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்கப்பதில் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் தயாநிதி மாறன் மனு தாக்கல் செய்துள்ளார்.

மகாவிஷ்ணு விவகாரம்.. அதிகாரிகளுக்கு அன்பில் மகேஷ் எச்சரிக்கை

மகாவிஷ்ணு போன்ற சர்ச்சைக்குரிய நபர்களை பள்ளிக்கு அழைக்கக்கூடாது. தவறும் பட்சத்தில் சம்பத்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார் 

கேரளாவை அலறவிடும் நிபா.. பறிபோன உயிர்..

கேரளாவில் நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதைத்தொடர்ந்து தமிழக-கேரள எல்லைப்பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தாக்கப்படும் தமிழக மீனவர்கள்.. நிரந்தர தீர்வு காண வேண்டும் - பிரேமலதா விஜயகாந்த்

இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்து கோடிக்கணக்கில் அபராதம் விதிப்பது கண்டிக்கத்தக்கது என தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.சென்னையை அடுத்த அம்பத்தூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறினார்.

காக்கா தோப்பு பாலாஜி கூட்டாளி கைது.. கஞ்சா கடத்திய வழக்கில் போலீஸார் நடவடிக்கை

என்கவுன்டர் செய்யப்பட்ட காக்கா தோப்பு பாலாஜி உடன் சென்ற சத்தியமூர்த்தி கைது செய்யப்பட்ட நிலையில், அவர் மீது கஞ்சா கடத்திய வழக்கில் போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளது.

உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி? - "குடும்ப அரசியலின் உச்சம்.." - அதிமுக வைகைச் செல்வன்

உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி கொடுப்பது குடும்ப அரசியலின் உச்சம் என அதிமுகவை சேர்ந்த வைகைச் செல்வன் விமர்சனம்

IND vs BAN Test Match : சேப்பாக்கத்தில் டிக்கெட் வாங்க குவிந்த ரசிகர்கள்

இந்தியா, வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறுகிறது. இன்று முதல் வரும் 23 ஆம் தேதி வரை தினசரி டிக்கெட் விற்பனை காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெறும்