K U M U D A M   N E W S

ஸ்டாலினுக்கு மட்டும்தான் தெரியும்.. எல்லாம் பாகப் பிரிவினை சண்டை - இ.பி.எஸ். தாக்கு

கோவை, நெல்லை மேயர்கள் ராஜினாமா செய்தது குறித்து திமுகவினருக்கு மட்டுமே தெரியும்.. எல்லாம் பாகம் பிரிப்பது குறித்த சண்டை என்று  நினைக்கிறேன் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும், ஆருத்ரா நிறுவனத்திற்கும் தொடர்பா? - செல்வபெருந்தகை வலியுறுத்தல்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கும் ஆரூத்ரா கோல்ட் நிறுவனத்திற்கும் தொடர்பு உள்ளாதா? என்ற கோணத்தில் விசாரிக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார்.

ரஷ்யா புறப்பட்டார் பிரதமர் மோடி... புதினுடன் சந்திப்பு... என்னென்ன விஷயங்கள் பேசப்படுகிறது?

ரஷ்யாவில் இருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வரும் இந்தியா, உக்ரைனுக்கு ஆதரவாக ஐநா நடத்திய வாக்கெடுப்பில் இருந்து பலமுறை பின்வாங்கியது. ரஷ்யாவின் மிக முக்கியமான கூட்டாளி நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளதால், மோடி-புதின் சந்திப்பை உலக நாடுகள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளன.

ஆம்ஸ்ட்ராங் உடல் நல்லடக்கம்; 'ஜெய்பீம்' முழக்கத்துடன் பிரியாவிடை கொடுத்த மக்கள்!

வழிநெடுக கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு பொதுமக்கள் மரியாதை செலுத்தினார்கள். 100க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள், கார்கள் சூழ ஆம்ஸ்ட்ராங்க் உடல் எடுத்து செல்லப்பட்டது.

அவர்கள் மீது நம்பிக்கை இல்லை - விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடாதது குறித்து பிரேமலதா விளக்கம்

தேர்தல் ஆணையத்தின் மீது நம்பிக்கை இல்லை அதனால் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தேமுதிக தொண்டர்கள் வாக்களிக்காமல் புறக்கணிப்பார்கள் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை... ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்திய மாயாவதி குற்றச்சாட்டு!

''தேசிய கட்சியின் மாநில தலைவருக்கே இந்த நிலை என்றால், நமக்கு என்ன நிலை ஏற்படும்? என எளிய மக்கள் அஞ்சுகின்றனர். ஆகேவ சட்டம் ஒழுங்கை சரி செய்வதில் தமிழ்நாடு அரசு கவனம் செலுத்த வேண்டும்''

ஆம்ஸ்ட்ராங் உடலை கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு... 2 முறை வழக்கு ஒத்திவைப்பு!

''அடக்கம் செய்யும் இடத்தில் மணிமண்டபம் கட்டும் போது பெரிய இடம் தேவைப்படும். ஆர்ம்ஸ்ட்ராங் மரணம் பெரிய இழப்பாக இருந்தாலும், சட்ட விதிகளை மீற முடியாது''

ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி... இன்று சென்னை வருகிறார் மாயாவதி... போலீசார் குவிப்பு!

ஆம்ஸ்ட்ராங் உடலை பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதி கோரி ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க பொறுப்பு தலைமை நீதிபதி அனுமதி வழங்கினார்.

ஆம்ஸ்ட்ராங் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு... மேலும் 3 பேரை கைது செய்த போலீசார்... தீவிர விசாரணை!

ஆம்ஸ்ட்ராங்கின் உடல் அயனாவரத்தில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்படுகிறது. அதன்பிறகு பெரம்பூர் பந்தர் கார்டன் பள்ளி வளாகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட உள்ளது.

ஆம்ஸ்ட்ராங் உடலை கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதி கோரி வழக்கு: நாளை காலை விசாரணை!

ஆம்ஸ்ட்ராங் உடலை பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதி கோரி ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு நாளை காலை 9 மணிக்கு காணொலி காட்சி மூலம் விசாரணைக்கு வருகிறது.