இலங்கை சிறையில் தூத்துக்குடி மீனவர்கள்; கண்ணீருடன் காத்திருக்கும் குடும்பங்கள்
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள தூத்துக்குடியை சேர்ந்த 22 மீனவர்கள் மற்றும் இரண்டு விசைப்படகுகளை மீட்க மத்திய மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்களின் குடும்பத்தினர் கண்ணீர் மல்க மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதியிடம் மனு அளித்துள்ளனர்.