K U M U D A M   N E W S

அடுத்த 2 நாட்களுக்கு வெயில் கொளுத்தப் போகுது... வானிலை ஆய்வு மையம் தகவல்!

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (செப். 19) இரவுக்குள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

BiggBoss: பிக் பாஸ் வீட்டில் என்ட்ரியாகும் ‘கவுண்டம்பாளையம்’ ரஞ்சித்..? பஞ்சாயத்து கன்ஃபார்ம்!

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கவுள்ளது உறுதியாகிவிட்டது. இந்த சீசனில் பங்கேற்கும் போட்டியாளர்கள் யார் என்பது குறித்து இதுவரை அறிவிப்புகள் வெளியாகவில்லை. இந்நிலையில், சர்ச்சைக்கு பெயர் போன நடிகர் ரஞ்சித் பிக் பாஸ் வீட்டில் என்ட்ரியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தாய் கையால் குழந்தைகளுக்கு விஷம்... தென்காசியில் நடந்த பயங்கரம்..

தென்காசி ஆழ்வார்குறிச்சி அருகே அரளி விதையை சாப்பிட்டு 3 குழந்தைகளுடன் தாய் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அதில் ஒரு சிறுவன் பலியான நிலையில் தாய் மற்றும் 2 சிறுவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

குரூப்-4 தேர்வு... திமுக அரசு மெத்தனப்போக்கு... சீமான் கண்டனம்!

குரூப்-4 தேர்வு மூலம் ஆண்டுதோறும் 30 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்தியாவில் இரண்டாவது குரங்கம்மை பாதிப்பு... அச்சத்தில் பொதுமக்கள்!

துபாயில் இருந்து கேரளாவிற்கு வந்த 38 வயதுடைய நபர் ஒருவருக்கு குரங்கம்மை இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

கல்வராயன் மலைப்பகுதி விவகாரம்... தலைமைச் செயலாளருக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

கல்வராயன் மலைப்பகுதி விவகாரத்தில் தலைமைச் செயலாளர் தனிப்பட்ட கவனம் செலுத்த வேண்டும். உத்தரவை செயல்படுத்தாவிட்டால் தலைமைச் செயலாளர் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சொந்த மண்ணில் கெத்து காட்டிய அஸ்வின்... சரிவிலிருந்து மீண்ட இந்திய அணி

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய வீரர் அஸ்வின் சதம் விளாசினார்.

Ind Vs BAN Test: சொந்த மண்ணில் மாஸ் காட்டிய தமிழன்.. அஸ்வின் அதிரடி சதம்.. சரிவில் இருந்து மீண்ட இந்தியா!

ஒருமுனையில் ஜடேஜா நிதானமாக விளையாடி பவுண்டரிகளை விரட்ட, மறுமுனையில் அஸ்வின் தனக்கே உரித்தான ஸ்டைலிஷ் ஷாட்களை விளையாடி பவுண்டரிகளாக விளாசித் தள்ளினார். வங்கதேச கேப்டன் 7 பவுலர்களை மாற்றி மாற்றி பயன்படுத்தியும் இந்த ஜோடியை பிரிக்க முடியவில்லை.

அமெரிக்காவில் டிரம்ப்பை சந்திக்கும் பிரதமர் மோடி?.. வெளியுறவுத்துறை சொல்வது என்ன?

கடந்த 2020ம் ஆண்டு அமெரிக்கா தேர்தல் நடந்தது. அப்போது ஜோ பைடனும், டொனால்ட் டிரம்ப்பும் போட்டியிட்டனர். அப்போது அமெரிக்கா சென்றிருந்த பிரதமர் மோடி, டிரம்ப்புக்கு ஆதரவாக இந்திய வம்சாவளியினர் மத்தியில் பிரசாரத்திலும் ஈடுபட்டார்.

திருவள்ளூரில் தொடரும் அவலம்.. தீண்டாமை வேலி அமைத்து ஒதுக்கப்படும் மக்கள்..

திருவள்ளூர் மாவட்டம் அம்மணம்பாக்கம் பகுதியில் மாற்று சமூகத்தை சேர்ந்த நபர் தீண்டாமை வேலி அமைத்ததால் பழங்குடியின, ஆதிதிராவிட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து தீண்டாமை வேலி அமைத்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.