BREAKING | அமைச்சரவையில் உதயநிதிக்கு 3வது இடம்
தமிழக அமைச்சரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு 3-வது இடம் வழங்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அடுத்த இடமான 2-வது இடத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உள்ளார்
தமிழக அமைச்சரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு 3-வது இடம் வழங்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அடுத்த இடமான 2-வது இடத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உள்ளார்
மீண்டும் தமிழக அரசை குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார் விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா. அந்த பதிவில், “அறிவுசார் சமுதாயத்தை உருவாக்க மதுவை ஒழிப்போம், மனிதவளம் காப்போம் என X தளத்தில் ஆதவ் அர்ஜுனா பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசே முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டுமென விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா வலியுறுத்தல். அறிவுசார் சமுதாயத்தை உருவாக்க மதுவை ஒழிப்போம், மனிதவளம் காப்போம் என X தளத்தில் ஆதவ் அர்ஜுனா பதிவு
மூடா முறைகேடு வழக்கு தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்திருக்கிறது.
கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவுக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. மூடா நிறுவனம் மூலம் தனது மனைவிக்கு 14 வீட்டு மனைகள் ஒதுக்கீடு செய்ததாக சித்தராமையா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஜெயம் ரவி - ஆர்த்தி விவாகரத்து பிரச்சனை தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், தற்போது மீண்டும் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார் ஆர்த்தி.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் அக்டோபர் 10ம் தேதி ரிலீஸாகிறது. இந்தப் படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தன்னைச் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க சென்னைக்கு வருவதை தொண்டர்கள் தவிர்க்குமாறு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை சித்திலப்பாக்கம் பகுதியில் மனைவியை ஆள் வைத்து கடத்திய கணவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் 11 மாவட்டங்களில் இன்று (செப். 30) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.