Ajith Kumar : அதுக்குள்ள விடாமுயற்சி ஷூட்டிங் ஓவரா..? அஜர்பைஜானில் இருந்து சென்னை திரும்பிய அஜித்!
Actor Ajith Kumar Return Chennai : விடாமுயற்சி படப்பிடிப்புக்காக அஜர்பைஜான் சென்றிருந்த அஜித், திடீரென சென்னை திரும்பியுள்ளார்.
Actor Ajith Kumar Return Chennai : விடாமுயற்சி படப்பிடிப்புக்காக அஜர்பைஜான் சென்றிருந்த அஜித், திடீரென சென்னை திரும்பியுள்ளார்.
ஆக்ரோஷத்துக்கு பெயர்போன கெளதம் கம்பீர் அதிகமாக கோபப்பட கூடியவர். எதிலும் அதிரடியாக முடிவெடுக்க கூடியவர் என்பதால் அவருக்கும், இந்திய அணி வீரர்களுக்கும் ஒத்துப்போகுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
மாநிலக் கல்விக் கொள்கை அறிக்கையை டெல்லி நீதிமன்ற முன்னாள் நீதிபதி முருகேசன் தலைமையிலான குழு சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினிடம் தாக்கல் செய்தனர். அந்த அறிக்கையில்,மாணவர்களுக்கு 3, 5, 8ஆம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு கூடாது. மாணவர்களுக்கு நீட் தேர்வு கட்டாயம் இருக்கக்கூடாது என்பன உள்ளிட்ட பல அம்சங்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர் செல்பவர்களுக்கு ரயில் முன்பதிவு இன்று தொடங்கிய நிலையில் 2 நிமிடங்களில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்தது. சிறப்பு ரயில்கள் இயக்கினால் மட்டுமே தென் மாவட்டங்களுக்கு செல்ல முடியும் என்பது பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்ஸியஸ் ஆகவும், குறைந்த பட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவு அளித்தவர்களின் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சென்னை, கும்பகோணம், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 12 இடங்களில் இந்த சோதனை நடந்து வருகிறது.
கொடநாடு கொலை,கொள்ளை வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க இண்டர்போல் உதவியை நாட உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தலில் செய்கூலி, சேதாரமின்றி 40க்கு 40 வெற்றியை மக்கள் அளித்துள்ளனர். 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்றும் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதாவை முதலமைச்சர் ஸ்டாலின், தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அதன்படி, இனி தமிழ்நாட்டில் இனி கள்ளச்சாராயம் விற்றால் ஆயுள்தண்டனை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.கள்ளச்சாராயத்தை முற்றிலும் ஒழிக்க கடுமையான தண்டனை வழங்கும் வகையில் சட்டதிருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள பந்துவார்பட்டி கிராமத்தில் செயல்படும் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில்,தலா 3 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், நீலகிரி மாவட்டத்தில் மேலும் 2 நாட்கள் கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இன்று முதல் 1ஆம் தேதி வரை கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.