K U M U D A M   N E W S
Promotional Banner

Tamil

விக்கிரவாண்டி பள்ளி கழிவுநீர் தொட்டில் விழுந்து சிறுமி பலி.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

விக்கிரவாண்டியில் தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து சிறுமி பலியான சம்பவம் தொடர்பான வழக்கின் விசாரணையை சிபிஐ அல்லது சிபிசிஐடி- க்கு மாற்றக் கோரி சிறுமியின் தந்தை தாக்கல் செய்த மனு குறித்து தமிழக அரசு, சிபிஐ உள்ளிட்டோர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

அப்பாவி கிராம மக்களை விரட்டி விரட்டி வேட்டையாடுவதற்கு வெட்கமாக இல்லையா? சீமான் கண்டனம்

அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசியதற்காக அப்பாவி மக்களை கைது செய்ய காட்டும் வேகத்தை, வேங்கைவயலில் மலம் கலந்த குற்றவாளிகளை கைது செய்வதில் திமுக அரசு  ஏன் காட்டவில்லை? என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

திமுகவை அழிக்கும் வல்லமை யாருக்கும் இல்லை.. இனி ஒருவர் பிறந்து வந்தால் பார்க்கலாம்- சேகர் பாபு

திமுகவை அழிக்கும் வல்லமை இங்கிருக்கும் அரசியல் கட்சியில் யாருக்கும் இல்லை என்றும் இனி ஒருவர் பிறந்து வந்தால் பார்க்கலாம் என்றும் அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

திருக்குறள், தமிழ் கலாசாரம் மற்றும்  பாரம்பரியத்தின் சாரத்தைப்  பிரதிபலிக்கிறது- மோடி பெருமிதம்

திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள், தமிழ் கலாசாரம் மற்றும்  பாரம்பரியத்தின் சாரத்தைப்  பிரதிபலிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

காவி உடை தரித்த திருவள்ளுவர்.. மீண்டும் சர்ச்சையை கிளப்பிய ஆர்.என்.ரவி

திருவள்ளுவர் தினத்தையொட்டி காவி உடை தரித்த திருவள்ளுவர் உருவ படத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மலர் தூவி மரியாதை செலுத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்து வரும் 6 நாட்களுக்கு எங்கெல்லாம் மழை பெய்யும்.. வானிலை அப்டேட்

கிழக்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக அடுத்த ஆறு நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சீமான் விவகாரம்.. அசைவ கேள்விகள் என் உடம்பிற்கு ஆகாது என கூறி நழுவிய வைரமுத்து

பெரியார் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த சீமான் பற்றிய கேள்விக்கு "இன்று நான் சைவம் அசைவ கேள்விகள் என் உடம்பிற்கு ஆகாது" என்று கவிஞர் வைரமுத்து பதிலளித்தார்.

UGC NET 2024: மத்திய அரசிற்கு இதுவே வாடிக்கையாகிவிட்டது- மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

தமிழ்ப் பண்பாட்டுத் திருநாட்களின்போது முக்கியத் தேர்வுகள் நடைபெறும் என ஒன்றிய அரசு அறிவிப்பதும், மாநில அரசின் தலையீட்டுக்குப் பின்னர் அது ஒத்திவைக்கப் படுவதும் வாடிக்கையாகிவிட்டது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி  இடைத்தேர்தல்.. நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிவிப்பு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் குறித்த அறிவிப்பை அக்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ளார்.

பொங்கல் திருநாள்: சொந்த ஊர்களுக்கு படையெடுத்த மக்கள்.. வெறிச்சோடி காணப்பட்ட சாலைகள்

பொங்கல் திருநாளையொட்டி சென்னையில் வசிக்கும் பல்லாயிரக்கணக்கான மக்கள் சொந்த ஊர்களுக்கு சென்றதால் முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.

UGC NET 2024: ஜனவரி 15 நடைபெறவிருந்த தேர்வு ஒத்திவைப்பு.. தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

பொங்கல் அன்று நடத்தப்படும் பல்கலைக்கழக மானியக்குழுவின் நெட் தேர்வை மாற்றக்கோரி பல்வேறு தரப்பினரும் வலியுறுத்திய நிலையில் ஜனவரி 15-ஆம் தேதி நடைபெறவிருந்த தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

2026-ல்  நல்லாட்சி லட்சியம் நிறைவேற பொங்கட்டும் வெற்றிப் பொங்கல்- விஜய்

பொங்கல் திருநாளையொட்டி மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து சமூக வலைதளத்தில் பதிவு வெளியிட்டுள்ள தவெக தலைவர் விஜய் ‘நல்லாட்சி லட்சியம் நிறைவேற, அதற்கான முன்னோட்டமாய் 2025-ஆம் ஆண்டின் தைத்திருநாளில் பொங்கட்டும் வெற்றிப் பொங்கல்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

புதிய குற்றவியல் சட்டங்கள்.. 15 நாட்களில் மக்கள் கருத்துகளை தெரிவிக்க அறிவுறுத்தல்

புதிய குற்றவியல் சட்டங்கள் தொடர்பாக பொதுமக்கள் 15 நாட்களில் தங்களின் கருத்துகளை தெரிவிக்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி எம்.சத்யநாராயணன் தலைமையிலான  ஒருநபர் குழு அறிவித்துள்ளது. 

"சாதிய வேறுபாடுகள்.." - புதிய புயலை கிளப்பிய ஆளுநர்.. 

தமிழகத்தில் அதிகம் பேசப்படுவது சமூக நீதி, ஆனாலும் தலித்துகளை ஏற்ற தாழ்வோடு பார்க்கிறார்கள் - ஆளுநர்

காவலர்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசு - முதலமைச்சர் அதிரடி

காவல்துறை, சீருடை அலுவலர்கள், பணியாளர்களுக்கு பொங்கல் பதக்கங்கள் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.

அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் எழுதிய முக்கிய கடிதம்

இன்று காலை தமிழக மீனவர்கள் 8 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் முதலமைச்சர் கடிதம்.

இந்தியாவை தவிர்த்து விட்டு உலக நாடுகள் எந்த முடிவையும் எடுக்க முடியாது- ஆளுநர் ஆர்.என்.ரவி

உலகில் இந்தியாவை தவிர்த்து விட்டு உலக நாடுகள் எந்த முடிவையும் எடுக்க முடியாது.  இந்தியா முழுவதும் விவேகானந்தரின் அருளும் ஆசீர்வாதமும் நிறைந்துள்ளது என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

சூனாபானா கேரக்டர்தான்..  11 தோல்வி பழனிசாமி.. அமைச்சர் எ.வ.வேலு விமர்சனம்

‘கோபால் என்னை போல தைரியமான ஆளா… பயந்தவன் தானே. விரட்டி விரட்டி வெட்டினது எல்லாம் ஞாபகத்துக்கு வந்து போகும் இல்லையா’ என வடிவேலுவின் சூனாபானா கேரக்டர்தான் பழனிசாமி என்று அமைச்சர் எ.வ.வேலு கடுமையாக விமர்சித்துள்ளார்.

அதிமுகவை தொடர்ந்து புறக்கணித்து வரும் ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள்- அமைச்சர் சாமிநாதன்

ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் அதிமுகவை தொடர்ச்சியாக புறக்கணித்து வரும் நிலையில் இந்த தேர்தலிலும் புறக்கணித்து விடுவார்கள் என்பதால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிப்பதாக அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

விடிந்ததும் பகீர்..!! 8 பேர் அதிரடி கைது

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை.

அம்மாடியோவ் என்னா டான்ஸ்.. பொங்கல்னா இப்படி இருக்கணும்...

தனியார் பல்கலைக்கழகத்தில் சமத்துவ பொங்கல் விழா.

"அவருக்கு அருகதையே கிடையாது" - எகிறி அடித்த அமைச்சர் எ.வ. வேலு

இடைத்தேர்தலில் போட்டியிடாத ஈபிஎஸ் 2026 தேர்தலுக்காவது வருவாரா?

பொங்கல் தொகுப்போடு இரண்டாயிரம் வழங்க கோரிக்கை.. பாஜக மனுவை நிராகரித்த நீதிமன்றம்

பொங்கல் தொகுப்புடன் இரண்டாயிரம் ரூபாய் வழங்க கோரி பாஜக தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்று கூறி சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்தது.

பெண்கள் பாதுகாப்பிற்கான சட்டதிருத்த மசோதா.. தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றம்

பெண்கள் பாதுகாப்பிற்கான சட்ட திருத்த மசோதா இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தாக்கல் செய்யப்பட்டு பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

தண்டனையை அதிகரிக்கும் சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றம் 

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு தண்டனையை அதிகரிக்கும் சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றம்.