K U M U D A M   N E W S
Advertisement

உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் பிஎஸ்என்எல் 4ஜி: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

பிஎஸ்என்எல் (BSNL)-ன் 4ஜி நெட்வொர்க் சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.

சென்னை ஐஐடி-யும், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனமும் ஒப்பந்தம்.. மின்சார வாகனத் தொழில்நுட்பத்தில் ஊழியர்களுக்குச் சிறப்புப் பயிற்சி!

மின்சார வாகனத் தொழில்நுட்பம், ஆராய்ச்சி மற்றும் ஊழியர் திறன் மேம்பாட்டை ஊக்குவிக்க, சென்னை ஐஐடி மற்றும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

ஏஐ தொழில்நுட்ப தாக்கம்: பெண்களுக்கு அதிக பாதிப்பு- ஐ.நா. ஆய்வு தகவல்

உலகெங்கிலும் உள்ள பெண் ஊழியர்களில் சுமார் 28% பேரின் வேலைவாய்ப்பு பாதிக்கப்படக்கூடும் என்று தகவல் வெளியாகி உள்ளது

விண்வெளிக்கு வயோமித்ரா என்ற எந்திர மனிதனை அனுப்ப திட்டம்- இஸ்ரோ தலைவர் தகவல்

ககன்யான் திட்டத்தில் 85% சோதனைகள் நிறைவு பெற்றுள்ளதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்

டொனால்ட் டிரம்ப் அளித்த விருந்து: எலான் மஸ்க் புறக்கணிப்பு!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையில் அளித்த விருந்தில் அனைத்து டெக் தலைவர்களும் பங்கேற்ற நிலையில், அந்த விருந்தில் எலான் மஸ்க் மட்டும் பங்கேற்காதது அவர்களுக்கிடையேயான விரிசலை உறுதிபடுத்தியுள்ளது.

2100ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தில் கடல் மட்டம் உயர்வு: சென்னை உட்பட 14 மாவட்டங்களுக்கு ஆபத்து!

தமிழகத்தில் 2100ஆம் ஆண்டுக்குள் கடல் மட்டம் உயரும் என்று அண்ணா பல்கலைக்கழக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடல் மட்டம் உயர்வால் சென்னை மிகப்பெரிய ஆபத்தை சந்திக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வைரஸ் காய்ச்சல் பரவல் அதிகரிப்பு: முகக்கவசம் அணிய சுகாதாரத் துறை அறிவுறுத்தல்!

தமிழகத்தில் தற்போது நிலவி வரும் பருவநிலை மாற்றம் காரணமாக, சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட முக்கிய மாவட்டங்களில் வைரஸ் காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. இதனைத் தடுக்கும் வகையில், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்குச் செல்லும்போது முகக்கவசம் அணிய வேண்டும் எனச் சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

வாரத்திற்கு 3 நாட்களா? ஊழியர்களை நெருக்கும் மைக்ரோசாப்ட் நிறுவனம்!

மைக்ரோசாப்ட் நிறுவனம், ஊழியர்களுக்கான பணி விதிகளை கடுமையாக்க திட்டமிட்டுள்ளது. விரைவில், ஊழியர்கள் அலுவலகம் வந்து அதிக நேரம் பணியாற்ற வேண்டிய நிலை வரலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

என்ன பாஸ் சொல்றீங்க.. ரோபோ மூலம் குழந்தையா?

உலகிலேயே முதல்முறையாக, ஒரு ரோபோவின் மூலமாக உயிருள்ள குழந்தையை ஈன்றெடுக்க முடியும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். கருத்தரிப்பு முதல் பிரசவம் வரை குழந்தை ஒரு செயற்கை கர்ப்பப்பையில் வளரும், அதற்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் ஒரு குழாய் வழியாக வழங்கப்படும் என உலகத்தின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்துள்ளனர் சீன விஞ்ஞானிகள்.

40 நிமிடமாக நிறுத்தி வைத்திருந்த கூலி படம் Tension-ஆன ரசிகர்கள் | Kumudam News

40 நிமிடமாக நிறுத்தி வைத்திருந்த கூலி படம் Tension-ஆன ரசிகர்கள் | Kumudam News