Today Headlines : 03 மணி தலைப்புச் செய்திகள் | 03 PM Today Headlines Tamil | 25-10-2024
03 மணி தலைப்புச் செய்திகள்
03 மணி தலைப்புச் செய்திகள்
தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு.
தென்பெண்ணை ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ள நீரால் கரையோற மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள ‘டானா’ தீவிர புயலாக மாறியுள்ள நிலையில், நாளை அதிகாலை ஒடிசா – மேற்கு வங்கம் இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கையை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கோவை, மதுரையில் மழை கொட்டித் தீர்த்தது. இதனால் வாகனங்கள் மழை நீரில் அடித்துச் செல்லப்பட்டன.
ராமநாதபுரம் மாவட்டத்தில் பிற்பகல் 1 மணி வரை கனமழை பெய்ய வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்
சென்னையில் அதிகாலையில் கொட்டி தீர்த்த கனமழை. காற்றழுத்த தாழ்வு நிலை இன்னும் வலு இழக்காததால் மழை.
தருமபுரி, சேலம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வடதமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று (அக். 19) 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.