நீலாங்கரை வீட்டில் இருந்து விமான நிலையத்திற்கு புறப்பட்டார் விஜய்...! | Kumudam News |Tvk | vijay
நீலாங்கரை வீட்டில் இருந்து விமான நிலையத்திற்கு புறப்பட்டார் விஜய்...! | Kumudam News |Tvk | vijay
நீலாங்கரை வீட்டில் இருந்து விமான நிலையத்திற்கு புறப்பட்டார் விஜய்...! | Kumudam News |Tvk | vijay
சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் தொடர்பாக எழுந்த புகார்களின் அடிப்படையில், சென்னை டிடிகே சாலையில் உள்ள பிரபலமான அமராவதி உணவகம் மற்றும் அதன் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் இன்றும் இரண்டாவது நாளாக அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில், சமன் ஆன போட்டியில் சூப்பர் ஓவரில் இலங்கையை வீழ்த்தி இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. அர்ஷ்தீப் சிங் (2 விக்கெட், 2 ரன்) பந்துவீச்சில் மிரட்ட, சூர்யகுமார் யாதவ் ஒரே பந்தில் வெற்றியை உறுதி செய்தார். இறுதிப் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.
மின்சார வாகனத் தொழில்நுட்பம், ஆராய்ச்சி மற்றும் ஊழியர் திறன் மேம்பாட்டை ஊக்குவிக்க, சென்னை ஐஐடி மற்றும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
சென்னையில் நாய் கடித்த விவகாரத்தில், வாடிக்கையாளரின் உணவு டெலிவரியை வாசலில் வைத்த கல்லூரி மாணவர் ஃபைசலுக்கும், வங்கி ஊழியர் சண்முகநாதனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, செருப்பால் தாக்குதல் நடந்தது.
திருநெல்வேலி அருகே ஜெபத்திற்கு சென்றவர்களை வழிமறித்து, குங்குமம் பூசி, கொலை மிரட்டல் விடுத்த இந்து முன்னணி மற்றும் பா.ஜ.க நிர்வாகிகள் 3 பேர் மீது இந்திய நியாய சன்ஹிதா (INS) சட்டப் பிரிவுகளின் கீழ் சுத்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சென்னை விமான நிலைய வளாகத்தில் உள்ள சக்தி சந்தியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்த கோமதி (49), திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். இவர் இதய நோய்க்குச் சிகிச்சை பெற்று வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
விஜயதசமி நாளில் அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு மாணவர்களைச் சேர்க்க நடவடிக்கை எடுக்கவும், சேர்க்கை விவரங்களை EMIS இணையதளத்தில் உள்ளீடு செய்யவும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வி இயக்குனர் கடிதம் அனுப்பியுள்ளார்.
வேகமாக செல்லும் லாரி.. தட்டிக்கேட்டவர்கள் மீது தாக்குதல் | Kanchipuram | Lorry | CCTV | TNPolice