வீடுகளுக்குள் புகுந்த தண்ணீர்.. அச்சத்தில் சிவகங்கை மக்கள்
சிவகங்கை மாவட்டம் மேலபசலை கிராமத்தில் கால்வாய் உடைந்து 10க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் குடியிருப்புவாசிகள் அவதி அடைந்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் மேலபசலை கிராமத்தில் கால்வாய் உடைந்து 10க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் குடியிருப்புவாசிகள் அவதி அடைந்துள்ளனர்.
வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக திறந்துவிடப்பட்ட நீர், ராமநாதபுரம் பெரிய கண்மாய்க்கு வந்தடைந்தது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் எதிரே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தேங்கியிருக்கும் மழை நீர்
சென்னையில் இருந்து மைசூர் சென்ற ரயிலில் விநியோகிக்கப்பட்ட குடிநீரில் மது வாடை வந்ததால் பயணிகள் அதிர்ச்சி
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே கழிவுநீருடன் மழைநீர் கலந்து வீடுகளுக்குள் புகுந்ததால் மக்கள் அவதியடைந்துள்ளனர். நெடுஞ்சாலைத்துறை வடிகால் வசதி ஏற்படுத்தாததால் குடியிருப்புக்குள் மழைநீர் தேங்குவதாக மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
கோயம்பேடு மார்க்கெட்டில் மழைநீர் அப்புறப்படுத்தப்படாமல் இருப்பதால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.
வேலூர் மாவட்டம் பொய்கை ஊராட்சி அலுவலக கட்டடத்தில் மழைநீர் ஒழுகி தேங்கியதில் கணினி, பேட்டரிகள், சான்றிதழ்கள் சேதமடைந்தன. உடனடியாக அலுவலகத்தை சீரமைத்து தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கோவை சிறுவாணி அணையின் மொத்த கொள்ளளவான 44.61 அடியில் தற்போது நீர்மட்டம் 43.56 அடியாக உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நல்லூர் சுங்கச்சாவடியில் மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளது. 7 கவுன்ட்டர்கள் உள்ள நிலையில் மழை நீர் தேக்கம் காரணமாக 2 கவுன்ட்டர்கள் வழியாக மட்டுமே வாகனங்கள் மழை நீரில் ஊர்ந்தபடி செல்கின்றன.
பருவமழை தொடங்க உள்ள நிலையில், அரசு தரப்பில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து தலைமைச் செயலாளர் முருகானந்தம் குமுதம் செய்திகளுக்கு பிரத்யேகமாக தெரிவித்துள்ளார்.