K U M U D A M   N E W S

“சென்னை மழை... இது டீசர் தான்... நவம்பரில் சம்பவம் இருக்கு..” தமிழ்நாடு வெதர்மேன் எக்ஸ்க்ளூசிவ்!

வரக்கூடிய அக்டோபர், டிசம்பர் மாதங்களுடன் ஒப்பிடுகையில், நவம்பரில் அதீத கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்ஜான் தெரிவித்துள்ளார். குமுதம் சேனலுக்காக தமிழ்நாடு வெதர்மேன் கொடுத்துள்ள பிரத்யேக பேட்டியை தற்போது பார்க்கலாம்.

வடகிழக்கு பருவமழை.. கண்காணிப்பாளர்கள் நியமனம்

வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில், சென்னையின் திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, கோடம்பாக்கம் உள்ளிட்ட 15 மண்டலங்களுக்கு கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

பள்ளிகளுக்கு தொடரும் வெடிகுண்டு மிரட்டல்... பதற்றத்தில் பெற்றோர்

கோவையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் சோதனையில் ஈடுபட்டனர்.

தம்பி விஜய் உணர்ந்திருப்பார்னு நினைக்கிறேன்! தமிழசை செளந்தரராஜன் விமர்சனம்

2026 தேர்தலின்போது திமுக கூட்டனி ஆட்சியில் பங்கு கொடுக்கவில்லை என்றால் திமுக கூட்டணி வெளு வெளுத்து போகும் என முன்னாள் ஆளுநர் தமிழசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னைக்கு ரெட் அலர்ட்.. முதலமைச்சர் அவசர ஆலோசனை

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட நிர்வாக அதிகாரிகள், வருவாய் பேரிடர் மேலாண்மைத்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார்.

திடீரென வெடித்த டயர்.. லாரி மீது மோதிய கல்லூரி பேருந்து.. மாணவர்களின் நிலை?

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே தனியார் பேருந்தும், மினி லாரியும் மோதிய விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Vettaiyan Box Office: வசூல் வேட்டையில் ரஜினியின் வேட்டையன்... முதல் வாரம் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் செம!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம், ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு கடந்த வாரம் 10ம் தேதி வெளியானது. முதல் நான்கு நாட்களில் வேட்டையன் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னைக்கு ரெட் அலெர்ட்... மீட்புப் படைகள் தயார் என அறிவிப்பு!

சென்னைக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையில் 18 குழுக்கள் தயார் நிலையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திடீரென பழுதான பேருந்து.. வனப்பகுதியில் சிக்கிய பயணிகள்

ஈரோடு மாவட்டம் கல்லாம்பாளையம் அருகே வனப்பகுதியில் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட 70க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற அரசுப்பேருந்து பழுதாகி நின்றது. இதனால் சிறிது நேரம் பயணிகள் செய்வது அறியாமல் தவித்தனர். பின்னர் சில பயணிகள் அவ்வழியே வந்த சரக்கு வாகனத்தில் ஏறி சென்றனர்.

Womens T20 World Cup: டி20 உலகக் கோப்பை... ஆஸ்திரேலியாவிடம் அதிர்ச்சித் தோல்வியடைந்த இந்திய அணி!

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முக்கியமான போட்டியில், இந்திய மகளிர் அணி, ஆஸ்திரேலியா அணியிடம் அதிர்ச்சித் தோல்வியடைந்தது.