K U M U D A M   N E W S
Kumudam Ad

மதுரையில் நடந்த பரபரப்பு சம்பவம்.. பெட்ரோல் குண்டு வீசிய மாணவன்.. தட்டி தூக்கிய போலீஸ்

மதுரை சோழவந்தான் பகுதியில் தீபாவளி பண்டிகைக்கு முதல் நாள் முத்தையா என்பவருக்கும் மதன்குமார் என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் ஆத்திரமடைந்த முத்தையா மகன் விக்னேஸ்வரன் மதன்குமாரின் வீட்டில் பெட்ரோல் குண்டை வீசியுள்ளார். இதையடுத்து மதன்குமார் அளித்த புகாரின்பேரில் விக்னேஸ்வரனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

காவலரிடம் அநாகரீக பேச்சு... மெரினா ஜோடி தாக்கல் செய்த ஜாமின் மனு.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சென்னை மெரீனா கடற்கரையில் காவலரிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட சந்திரமோகன், தனலட்சுமி ஆகியோரின் ஜாமின் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

சென்னையில் பள்ளி மாணவிகளுக்கு மீண்டும் உடல் நலம் பாதிப்பு - பெற்றோர்கள் வாக்குவாதம்

10 நாட்களுக்கு பிறகு இன்று பள்ளி மீண்டும் திறக்கப்பட்டது. இதில்  3 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் மீண்டும் பதற்றம் ஏற்பட்டது.

“புதிதாக கட்சி தொடங்கியவர்கள் எல்லாம்...” விஜய்யை தாக்கி பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

புதிதாக கட்சி தொடங்கியவர்கள் எல்லாம் திமுக அழிய வேண்டும் என தவெக தலைவர் விஜய்யை தாக்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.   

புதிய கொடிமரம் மாற்ற எதிர்ப்பு.. சிதம்பரம் கோயிலில் பரபரப்பு

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயில் வளாகத்தில் புதிய கொடி மரம் நடும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

கவரைப்பேட்டை ரயில் விபத்து நடந்தது எப்படி?- ஆய்வு அறிக்கை ஒப்படைப்பு

ரயில் பெட்டிகளில் ஜெனரேட்டர்களில் பயன்படுத்தப்படும் டீசல்கள் வெளியேறி இந்த தீ விபத்து நடந்திருக்கலாம் என ரயில்வே துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

பேனர் வைத்த போது இளைஞர்களுக்கு நேர்ந்த விபரீதம்... ஆந்திராவில் பரபரப்பு

ஆந்திர மாநிலம் கோதாவரி பகுதியில் சிலை திறப்பு விழாவிற்கு பிளக்ஸ் பேனர் பொருத்தும்போது பேனரில் இருந்த இரும்பு கம்பி மின்சார ஒயரில் உரசியதில் மின்சாரம் பாய்ந்து 4 பேர் உயிரிழந்தனர்.

கவரப்பேட்டை ரயில் விபத்து... புதிய கோணத்தில் விசாரணையை துவக்கிய போலீஸ்

கவரப்பேட்டை ரயில் விபத்து விவகாரத்தில் தீ விபத்து நடந்தது எப்படி என புதிய கோணத்தில் ரயில்வே போலீஸ் விசாரணையை துவக்கியுள்ளனர். விபத்து ஏற்பட்ட ரயிலில் தனியாக எரிபொருள்கொண்டு செல்லப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுகிறது.

கதவணை மதகுகளில் இயந்திர கோளாறு.. குடியிருப்பு பகுதிகளில் சூழந்த வெள்ளநீர்

கோவை மாவட்டம் வெள்ளிப்பாளையம் பவானி ஆற்றில் உள்ள நீர்மின் உற்பத்தி கதவணை மதகுகளில் இயந்திர கோளாறு ஏற்பட்டது. இதனால் மதகுகள் திறக்க முடியாததால் அருகே உள்ள குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்தது. 

#BREAKING: அதிமுக நிர்வாகி துடிதுடிக்க வெட்டி படுகொ** நடுங்கிய சிவகங்கை

சிவகங்கை மாவட்டம், நாட்டாக்குடி அருகே அதிமுக கிளை செயலாளர் கணேசன் வெட்டிக்கொலை