K U M U D A M   N E W S
Kumudam Ad

சபாநாயகர் அப்பாவு வழக்கில் புதிய திருப்பம்.... உயர்நீதிமன்றம் உத்தரவு!

அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரி சபாநாயகர் அப்பாவு தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம், தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.

கணவன் கண்முன்னே நடந்த கொடூர சம்பவம்.. சாலையில் தரதரவென இழுத்து செல்லப்பட்ட மனைவி

மதுரையில் தீபாவளிக்கு தேவையான பொருட்களை வாங்கிவிட்டு இருசக்கர வாகனத்தில் கணவருடன் வீடு திரும்பிய பெண்ணிடம் இருந்து தங்க செயின் பறிப்பு. இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வெளியாகியுள்ளது

அமைதியான முறையில் பிரச்னைகளுக்கு தீர்வு.. ரஷ்ய அதிபரிடம் பிரதமர் வலியுறுத்தல்

உக்ரைன் போர் பதற்றத்துக்கு மத்தியில் காசன் நகரில் ரஷ்ய அதிபர் புதின் மற்றும் பிரதமர் மோடியுடனான சந்திப்பு நிகழ்ந்தது. அப்போது, பேசிய பிரதமர் மோடி புதின் உடனான நட்புக்கும் விருந்தோம்பலுக்கும் கடமைப்பட்டுள்ளேன் என தெரிவித்தார்.

நீதிமன்றத்துக்கே சவால் விடும் நித்யானந்தா - நீதிபதி காட்டம்

நித்தியானந்தாவுக்கு எதிராக பல்வேறு வழக்குகளில் பிடிவாரண்ட் உள்ள நிலையில், தலைமறைவாய் இருந்து கொண்டு நிதித்துறைக்கு சவால் விடுகிறார் என உயர்நீதிமன்ற மதுரை கிளை காட்டமாக தெரிவித்துள்ளது.

நாளை உருவாகும் புயல்.. 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கேஸ் பங்கில் திடீரென தீப்பிடித்து எரிந்த கார்.. கோவையில் அதிர்ச்சி சம்பவம்

கோவை மாவட்டம் உக்கடம் கேஸ் பங்க்-ல் கேஸ் நிரப்புவதற்காக வந்த ஆம்னி கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. காரில் கேஸ் நிரப்பியபோது எதிர்பாராத விதமாக கேஸ் கசிவு ஏற்பட்டதால் தீப்பிடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

போதைப்பொருள் அதிகரிப்பு... திமுக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

தமிழகத்தில் போதைப்பொருள் அதிகரித்துள்ளதாக திமுக அரசுக்கு எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இறுதிக்கட்டத்தை நெருங்கிய பணிகள்.. மாநாடு வேலை மும்முரம்

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே வரும் 27ம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நடைபெற உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

மக்களே உஷார்! ஆன்லைன் பட்டாசு மோசடி.. Cyber Crime விடுத்த எச்சரிக்கை

ஆன்லைனில் தள்ளுபடி விலையில் பட்டாசுகள் விற்பனை செய்வதாகக்கூறி சமூக வளைதளங்களில் வெளியாகும் விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கோ-ஆப்டெக்ஸில் புதிய வரவு... ரூ. 100 கோடி இலக்கு... அமைச்சர் காந்தி தகவல்!

தீபாவளி பண்டிகையையொட்டி, கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் ரூ.100 கோடிக்கு கைத்தறி துணிகளை விற்பனை செய்வதற்கு இலக்கு நிர்ணயித்துள்ளதாக அமைச்சர் ஆர். காந்தி தெரிவித்துள்ளார்.