சினிமா

மணிரத்னத்துடன் பணிபுரிய இருந்தேன்.. மனம் திறந்த அமீர்கான்

இயக்குநர் மணிரத்னத்துடன் ஒரு படத்தில் கிட்டத்தட்ட இணைந்து பணியாற்ற இருந்ததாகவும் சில காரணங்களால் அது நிறைவேறவில்லை என பாலிவுட் நடிகர் அமீர்கான் தெரிவித்துள்ளார்.

மணிரத்னத்துடன் பணிபுரிய இருந்தேன்.. மனம் திறந்த அமீர்கான்
Aamir khan and Mani ratnam
சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் பாலிவுட் நடிகர் அமீர்கான், தற்போது 'சீதாரே ஜமீன் பர்' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தில் , அமீர்கான் கூடைப்பந்து பயிற்சியாளராகவும், மாற்றுத்திறனாளி குழந்தைகள் குழுவிற்கு பயிற்சி அளிப்பதைப் பற்றிய கதையைச் சொல்லும் வகையில் அமைந்திருக்கிறது. மேலும் இந்த படம் வரும் 20 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

படத்தின் ரிலீஸ் நெருங்கி வரும் நிலையில், புரொமோஷன் பணியில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் நடிகர் அமீர்கான் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், "நான் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிப்பதாக இருந்தது. அதற்கான பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தை எட்டியது.

'லஜ்ஜோ' என்ற படத்தை நாங்கள் இணைந்து பணியாற்ற இருந்த நிலையில், அது சில காரணங்களால் நிறைவேறவில்லை. மேலும், எதிர்காலத்தில் இயக்குநர் மணிரத்னத்துடன் பணியாற்ற விரும்புகிறேன். அதற்காக காத்திருக்கிறேன்" எனக் கூறினார்.

மேலும் அவர், "நான் மணிரத்னத்தின் மிக பெரிய ரசிகன். நாங்கள் பலமுறை நேரில் சந்தித்துள்ளோம். நான் அவரது வீட்டிற்கு சென்று நீண்ட நேரம் பேசியிருக்கிறேன். அவரது படைப்புகளை நான் மிகவும் மதிக்கிறேன்" என்றார். இந்த நிலையில், அமீர்கான் - மணிரத்னம் கூட்டணி எப்போது இணையும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் இடையே அதிகரித்துள்ளது.