நடிகர் தனுஷ், சேகர் கம்முலா இயக்கத்தில் 'குபேரா' திரைப்படத்தில் நடித்துள்ளார். குபேரா தனுஷின் 51வது படமாக உருவாகி உள்ளது. இந்த படத்தில் நடிகர் தனுஷூடன் தெலுங்கு முன்னணி நடிகர் நாகர்ஜூனா, கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரிக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாகியுள்ளது.
எவ்வளவு வேண்டுமானாலும் வதந்தி பரப்புங்கள்
இதைத்தொடர்ந்து குபேரா படத்தின் கிளிம்ஸ் வீடியோ சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இத்திரைப்படம் ஜூன் 20ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது, இந்த நிலையில் படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் நேற்று ( ஜூன்.1) நடந்தது. இதில் நடிகர் தனுஷ், ராஷ்மிகா மந்தனா, நாகர்ஜூனா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
இசை வெளியீட்டு விழா மேடையில் பேசிய நடிகர் தனுஷ், “ நாலு வதந்தி பரப்பி என்னை காலி பண்ணிடலாம்னு நினைத்தால் அதைவிட முட்டாள் தனம் எதுவும் இல்லை. ஒரு செங்கல்லை கூட அசைக்க முடியாது. என் ரசிகர்கள் இருக்காங்க. எண்ணம்போல் வாழ்க்கை. என்னை பத்தி எவ்வளவு வேண்டுமானாலும் வதந்தி பரப்புங்கள். ஒரு படம் ரிலீஸ் ஆகும்போது, நெகட்டிவ் பரப்புங்கள்.
வடசென்னை 2 குறித்து அப்டேட்
என்னை எனக்கு என் ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இருட்டில் தீப்பந்தம் மாதிரி என்னை அழைச்சிக்கிட்டு போவாங்க. அவங்க என் வழி துணை. தம்பிங்களா தள்ளி போய் விளையாடுங்க. 2018ல் இருந்து கேட்டுகிட்டே இருக்கீங்க. அடுத்த ஆண்டு வடசென்னை அடுத்த பாக படப்பிடிப்பு தொடங்கும்” என தெரிவித்தார். இதனால் விழா அரங்கில் விசில் சப்தம் அரங்கை அதிர செய்தது. தனுஷின் இந்த அறிவிப்பால் அவரது ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் வெளியான வடசென்னை முதல் பாகம் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் வடசென்னை இரண்டாம் பாகத்தில் அன்புவின் எழுச்சியை காண ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.
எவ்வளவு வேண்டுமானாலும் வதந்தி பரப்புங்கள்
இதைத்தொடர்ந்து குபேரா படத்தின் கிளிம்ஸ் வீடியோ சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இத்திரைப்படம் ஜூன் 20ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது, இந்த நிலையில் படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் நேற்று ( ஜூன்.1) நடந்தது. இதில் நடிகர் தனுஷ், ராஷ்மிகா மந்தனா, நாகர்ஜூனா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
இசை வெளியீட்டு விழா மேடையில் பேசிய நடிகர் தனுஷ், “ நாலு வதந்தி பரப்பி என்னை காலி பண்ணிடலாம்னு நினைத்தால் அதைவிட முட்டாள் தனம் எதுவும் இல்லை. ஒரு செங்கல்லை கூட அசைக்க முடியாது. என் ரசிகர்கள் இருக்காங்க. எண்ணம்போல் வாழ்க்கை. என்னை பத்தி எவ்வளவு வேண்டுமானாலும் வதந்தி பரப்புங்கள். ஒரு படம் ரிலீஸ் ஆகும்போது, நெகட்டிவ் பரப்புங்கள்.
வடசென்னை 2 குறித்து அப்டேட்
என்னை எனக்கு என் ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இருட்டில் தீப்பந்தம் மாதிரி என்னை அழைச்சிக்கிட்டு போவாங்க. அவங்க என் வழி துணை. தம்பிங்களா தள்ளி போய் விளையாடுங்க. 2018ல் இருந்து கேட்டுகிட்டே இருக்கீங்க. அடுத்த ஆண்டு வடசென்னை அடுத்த பாக படப்பிடிப்பு தொடங்கும்” என தெரிவித்தார். இதனால் விழா அரங்கில் விசில் சப்தம் அரங்கை அதிர செய்தது. தனுஷின் இந்த அறிவிப்பால் அவரது ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் வெளியான வடசென்னை முதல் பாகம் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் வடசென்னை இரண்டாம் பாகத்தில் அன்புவின் எழுச்சியை காண ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.