கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவான படம் 'ரெட்ரோ'. இந்த படம் கடந்த மே 1 ஆம் திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தில் பூஜா ஹெக்டே, நாசர், ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். மேலும், ஒரு பாடலுக்கு நடிகை ஸ்ரேயா நடனமாடி இருந்தார்.
2டி நிறுவனம் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் இணைந்து தயாரித்த இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். மேலும், சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் இந்த படத்தை வெளியிட்டது.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படம் உலகளவில் ரூ.234 கோடி வசூல் செய்து கலவையான விமர்சனத்தை பெற்றது. மேலும், மற்ற திரைப்படங்கள் திரையரங்க வசூலை மட்டுமே வெளியிட்டு வந்த நிலையில், 'ரெட்ரோ' படம் திரையரங்கு மற்றும் திரையரங்கு அல்லாத வசூல் என இரண்டையும் சேர்ந்து ரூ.234 கோடி வசூல் செய்ததாக படக்குழு போஸ்டர் வெளியிட்டது. இதனை வைத்து நெட்டிசன்கள் படக்குழுவை விமர்சித்து வந்தனர்.
இப்படம் கடந்த மே 31 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியிடப்பட்டது. இந்த நிலையில், 'ரெட்ரோ' படத்தை கூடுதல் காட்சிகளுடன் வெப் தொடராக வெளியிட திட்டமிட்டுள்ளதாக இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தகவல் தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "ரெட்ரோ'' படத்தை கூடுதல் காட்சிகளுடன் வெப் தொடராக வெளியிட திட்டமிட்டுள்ளோம். இதற்காக நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இது 4-5 எபிசோடுகளாகவும், ஒவ்வொரு எபிசோடும் அதிகபட்சம் 40 நிமிடங்கள் நீளமாக வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது" என்றும் கூறினார்.
இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்தாலும், படம் திரையரங்குகளில் சரியான வரவேற்பை பெறாததால், கார்த்திக் சுப்பராஜ் இந்த முடிவை எடுத்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக, இயக்குநர் வெற்றி மாறனின் 'விடுதலை' படத்தின் இரண்டாம் பாகம் அதிக காட்சிகள் சேர்க்கப்பட்டு 3 மணி நேரம் 7 நிமிடங்கள் கொண்ட படமாக அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் சமீபத்தில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
2டி நிறுவனம் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் இணைந்து தயாரித்த இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். மேலும், சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் இந்த படத்தை வெளியிட்டது.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படம் உலகளவில் ரூ.234 கோடி வசூல் செய்து கலவையான விமர்சனத்தை பெற்றது. மேலும், மற்ற திரைப்படங்கள் திரையரங்க வசூலை மட்டுமே வெளியிட்டு வந்த நிலையில், 'ரெட்ரோ' படம் திரையரங்கு மற்றும் திரையரங்கு அல்லாத வசூல் என இரண்டையும் சேர்ந்து ரூ.234 கோடி வசூல் செய்ததாக படக்குழு போஸ்டர் வெளியிட்டது. இதனை வைத்து நெட்டிசன்கள் படக்குழுவை விமர்சித்து வந்தனர்.
இப்படம் கடந்த மே 31 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியிடப்பட்டது. இந்த நிலையில், 'ரெட்ரோ' படத்தை கூடுதல் காட்சிகளுடன் வெப் தொடராக வெளியிட திட்டமிட்டுள்ளதாக இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தகவல் தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "ரெட்ரோ'' படத்தை கூடுதல் காட்சிகளுடன் வெப் தொடராக வெளியிட திட்டமிட்டுள்ளோம். இதற்காக நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இது 4-5 எபிசோடுகளாகவும், ஒவ்வொரு எபிசோடும் அதிகபட்சம் 40 நிமிடங்கள் நீளமாக வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது" என்றும் கூறினார்.
இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்தாலும், படம் திரையரங்குகளில் சரியான வரவேற்பை பெறாததால், கார்த்திக் சுப்பராஜ் இந்த முடிவை எடுத்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக, இயக்குநர் வெற்றி மாறனின் 'விடுதலை' படத்தின் இரண்டாம் பாகம் அதிக காட்சிகள் சேர்க்கப்பட்டு 3 மணி நேரம் 7 நிமிடங்கள் கொண்ட படமாக அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் சமீபத்தில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.