ஐபிஎல் 2025

IPL2025: 7 FOR A REASON.. 7-வது முறையாக Fair Play விருது வென்ற CSK!

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சிறந்த நன்னடத்தைக்கான Fair Play விருதை வென்றுள்ளது. இதுவரை நடைபெற்ற ஐபிஎல் 18 சீசன்களில் சிஎஸ்கே அணி 7-வது முறையாக Fair Play விருதை வென்று சாதனைப்படைத்துள்ளது.

IPL2025: 7 FOR A REASON.. 7-வது முறையாக Fair Play விருது வென்ற CSK!
IPL2025: 7 FOR A REASON.. 7-வது முறையாக Fair Play விருது வென்ற CSK!
ஐபிஎல் சீசன் 18 தொடரின் இறுதிப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதல்முறையாக சாம்பியன் கோப்பையை வென்றுள்ளது. நேற்றை இறுதிப்போட்டியில், இந்த நிலையில், 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் தொடரில் 7-வது முறையாக ஃபேர் பிளே விருதை வென்றுள்ளது.

நடப்பு ஐபிஎல் சீசனில் தொடக்க ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை சென்னை சேப்பாக்கத்தில் சிஎஸ்கே அணி எதிர்கொண்டது. அந்த போட்டியில் முதல் வெற்றியை பதிவு செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் தொடர்ந்து தோல்விகளை சந்தித்தது. ஐபிஎல் 2025 சீசனில் 17 போட்டிகளில் 4 போட்டியில் மட்டுமே வெற்றிபெற்ற சென்னை அணி 8 புள்ளிகளுடன், புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தை பிடித்தது.

சென்னை அணி கடைசி இடத்தை பிடித்தாலும், சென்னை ரசிகர்களுக்கு Fair Play விருது ஐபிஎல் கோப்பையை வென்றது போல சந்தோஷத்தை கொடுத்துள்ளது. விளையாட்டு ஆட்ட நெறிமுறைகளையும், நடுநிலையான நடத்தை திறமையையும் பாராட்டி வழங்கப்படும் "ஃபேர் ப்ளே" (Fair Play) விருதை ஏற்கனவே 6 முறை வென்றிருந்த CSK அணி, 2025 சீசனிலும் 7வது முறையாக இந்த விருதை வென்று சாதனை புரிந்துள்ளது.


ஒவ்வொரு சீசனிலும் கிரிக்கெட் நன்னடத்தை விதிமுறைகளை பின்பற்றி விளையாடும் அணிக்கு பேர் பிளே விருது வழங்கப்படும். அந்த வகையில் நடப்பு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த விருதுக்கான புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இருந்தது. சிஎஸ்கே அணியை வேறு எந்த அணியும் முந்தாத சூழ்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விருது வழங்கப்பட்டது. இதனை உற்சாகமாக சென்னை அணியின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். விருது வழங்கும் நிகழ்வு சென்னை அணி இல்லாமல் என்றும் இல்லை என்பதற்கும், சிஎஸ்கே அணியின் நன்னடத்தைக்கும் இந்த விருது சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது.

ஃபேர் ப்ளே புள்ளிகள்:

ஐபிஎல் போட்டிகளில் சக அணியின் வீரர்களை மதிப்பது, நடுவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடாமல் இருப்பது, வீரர்களின் ஒழுக்கம் உள்ளிட்டவை மதிப்பீடு செய்து ஒவ்வொரு போட்டிக்கும் அணிகளுக்கு புள்ளிகள் வழங்கப்படுகிறது.


ஐபிஎல் போட்டிகளில் நடுவர்களின் மதிப்பீட்டின் அடிப்படையில், ஒவ்வொரு போட்டியிலும் அணிகளுக்கு அதிகபட்சம் 10 புள்ளிகள் அளிக்கப்படுகின்றன. இதில் விளையாட்டு ஒழுக்கம், எதிரணி வீரர்களிடம் மரியாதை, நடுவர்களிடம் நயவஞ்சகமற்ற நடத்தை போன்ற அம்சங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. இந்த ஆண்டில், சென்னை அணியின் வீரர்கள் முழு சீசனிலும் மிகச் சிறந்த ஒழுக்கத்துடன் விளையாடி, அதிக புள்ளிகளை பெற்று இந்த விருதை உறுதிப்படுத்தினர்.

அந்த வகையில், 14 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 143 புள்ளிகள் பெற்று, 10.21 சராசரியுடன் முதல் இடத்தில் நீடித்தது. இதனடிப்படையில், நியாயமாக விளையாடிய அணி என்ற விருதை வென்றுள்ளது

ஏற்கனவே 2014, 2015, 2016, 2018, 2021, 2023 ஆகிய ஆண்டுகளில் இந்த விருதை வென்ற CSK, தொடர்ந்து ஒரு ஒழுக்க மிக்க அணியாக தன்னை நிரூபித்து வருகிறது. 2025-இல் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியவில்லை என்றாலும், விளையாட்டு ஆட்ட நெறிமுறைகள் மீதான Fair Play விருதை பெற்று ரசிகர்களையும் கவுரப்படுத்தியுள்ளது. அதிக முறை (7முறை ) ஃபேர் பிளே விருதை வென்ற அணி என்ற சாதனையை சென்னை சூப்பர் கிங்ஸ் தக்கவைத்துக் கொண்டுள்ளது.