நடப்பு ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பு கிரிக்கெட் ஜாம்பவான்களால் கோப்பை வெல்லும் என கணிக்கப்பட்ட அத்தனை அணிகளும் தொடரிலிருந்து வெளியேறியுள்ள நிலையில், இன்று இரவு நடைப்பெறும் ஐபிஎல் இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஜ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதவுள்ளன. இரு அணிகளின் கடந்தக்கால டிராக் ரெக்கார்ட் என்னவென்று கொஞ்சம் இப்பகுதியில் அலசலாம்.
ஈ சாலா கப் நமதே- பெங்களூரு:
ஐபிஎல் 18 வது சீசன் தற்போது நடைப்பெற்று வருகிறது. விராட் கோலி, ஏபிடி, கிறிஸ் கெயில், டிராவிட் என பல்வேறு கிரிக்கெட் ஜாம்பவான்கள் பெங்களூரு அணிக்காக விளையாடியுள்ள நிலையிலும், கோப்பை வெல்வது என்பது கனவாக மட்டுமே இருந்துள்ளது. ”ஈ சாலா கப் நமதே” என்ற வார்த்தைக்காக பெங்களூரு ரசிகர்கள் சந்தித்த அவமானங்களை சொல்லிமாளாது. அதிகமாக ட்ரோல் செய்யப்பட்ட அணி என்றால் பெங்களூரு தான்.
அவர்களையும் சும்மா சொல்லக்கூடாது, லீக் தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடி ப்ளே-ஆப் சென்றபின் சொதப்புவதை வாடிக்கையாகவே கொண்டுள்ளனர். ஒன்றல்ல, இரண்டல்ல, மூன்று முறை ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு பெங்களூரு அணி முன்னேறிய போதும், மூன்று முறையும் தோல்வியடைந்துள்ளது.
2009 ஆம் ஆண்டு நடைப்பெற்ற ஐபிஎல் இறுதிப் போட்டியில், டெக்கான் சார்ஜர்ஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது ஆர்சிபி. 2011-ல் நடைப்பெற்ற ஐபிஎல் இறுதிப் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் 58 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது ஆர்சிபி. 2016-ல் நடைப்பெற்ற ஐபிஎல் இறுதிப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
ஆனால், இந்த முறை மிஸ் ஆகாது.. என்பது போல தான் பெங்களூரு அணியின் ஆட்டம் அமைந்துள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரின் லீக் சுற்று முடிவில் ஆர்சிபி அணி புள்ளிப்பட்டியலில் டாப் 2 இடத்தை பிடித்து அசத்தியது. அதோடு குவாலிஃபயர் 1-ல் பஞ்சாப் அணியை பந்தாடி இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக நுழைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
பஞ்சாப்: சொதப்பல்.. சொதப்பல்
ஐபிஎல் தொடரை பொறுத்தவரை கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆக இருந்தபோதும் சரி, இப்போது பஞ்சாப் கிங்ஸ் ஆக இருக்கும் போதும் சரி ஒரு சில சீசன்களை தவிர்த்து அனைத்து ஐபிஎல் தொடரிலும் சொதப்பல்..சொதப்பல்.. மட்டுமே பஞ்சாப் அணியின் செயலாக இருந்தது.
இத்தனைக்கும் டி20 போட்டிக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட வீரர்களாக வலம் வந்த யுவராஜ் சிங், ஆடம் கில்கிறிஸ்ட், குமார் சங்ககாரா, கிறிஸ் கெய்ல், சேவாக் போன்ற வீரர்கள் பஞ்சாப் அணிக்காக விளையாடிய போதும், ஒரு டீமாக ஜொலிக்கத் தவறியது.
நடப்பு ஐபிஎல் தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் சர்வதேச கிரிக்கெட் போட்டி அனுபவமில்லாத வீரர்கள் பலர் விளையாடி வருகின்றனர். இருப்பினும் அணியினை சிறப்பான முறையில் வழிநடத்தி இறுதி போட்டிக்கு அழைத்து வந்துள்ளார் ஸ்ரேயாஸ் ஐயர்.
Kings XI Punjab என்ற பெயரில் விளையாடிய போது பஞ்சாப் அணி முதல் முறையாக 2014 ஆம் ஆண்டு இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணிக்கு எதிராக நடைப்பெற்ற இறுதிப் போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்து கோப்பை வெல்லும் வாய்ப்பினை நழுவவிட்டது. தற்போது சுமார் 11 வருடங்களுக்குப் பிறகு, பஞ்சாப் கிங்ஸ் IPL 2025 இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
படிதார் vs ஷ்ரேயாஸ்: மற்றொரு இறுதிப் போட்டி மோதல்
கடந்த ஆண்டு நடைப்பெற்ற சையத் முஷ்டாக் அலி டிராபி இறுதிப் போட்டியில், ராஜத் படிதார் (மத்தியப் பிரதேசம்) மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் (மும்பை) ஆகியோர் தலைமையிலான அணி நேருக்கு நேர் மோதியது. அந்த ஆட்டத்தில், ஷ்ரேயாஸ் ஐயரின் தலைமையிலான மும்பை அணி வெற்றி பெற்றது. இப்போது, ஐபிஎல் இறுதிப் போட்டியில் மீண்டும் இருவரும் கேப்டன்களாக மோதுவது மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
இந்திய நேரப்படி இன்று இரவு 7:30 மணியளவில் பஞ்சாப் மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான இறுதிப்போட்டி நடைப்பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஈ சாலா கப் நமதே- பெங்களூரு:
ஐபிஎல் 18 வது சீசன் தற்போது நடைப்பெற்று வருகிறது. விராட் கோலி, ஏபிடி, கிறிஸ் கெயில், டிராவிட் என பல்வேறு கிரிக்கெட் ஜாம்பவான்கள் பெங்களூரு அணிக்காக விளையாடியுள்ள நிலையிலும், கோப்பை வெல்வது என்பது கனவாக மட்டுமே இருந்துள்ளது. ”ஈ சாலா கப் நமதே” என்ற வார்த்தைக்காக பெங்களூரு ரசிகர்கள் சந்தித்த அவமானங்களை சொல்லிமாளாது. அதிகமாக ட்ரோல் செய்யப்பட்ட அணி என்றால் பெங்களூரு தான்.
அவர்களையும் சும்மா சொல்லக்கூடாது, லீக் தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடி ப்ளே-ஆப் சென்றபின் சொதப்புவதை வாடிக்கையாகவே கொண்டுள்ளனர். ஒன்றல்ல, இரண்டல்ல, மூன்று முறை ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு பெங்களூரு அணி முன்னேறிய போதும், மூன்று முறையும் தோல்வியடைந்துள்ளது.
2009 ஆம் ஆண்டு நடைப்பெற்ற ஐபிஎல் இறுதிப் போட்டியில், டெக்கான் சார்ஜர்ஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது ஆர்சிபி. 2011-ல் நடைப்பெற்ற ஐபிஎல் இறுதிப் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் 58 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது ஆர்சிபி. 2016-ல் நடைப்பெற்ற ஐபிஎல் இறுதிப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
ஆனால், இந்த முறை மிஸ் ஆகாது.. என்பது போல தான் பெங்களூரு அணியின் ஆட்டம் அமைந்துள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரின் லீக் சுற்று முடிவில் ஆர்சிபி அணி புள்ளிப்பட்டியலில் டாப் 2 இடத்தை பிடித்து அசத்தியது. அதோடு குவாலிஃபயர் 1-ல் பஞ்சாப் அணியை பந்தாடி இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக நுழைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
பஞ்சாப்: சொதப்பல்.. சொதப்பல்
ஐபிஎல் தொடரை பொறுத்தவரை கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆக இருந்தபோதும் சரி, இப்போது பஞ்சாப் கிங்ஸ் ஆக இருக்கும் போதும் சரி ஒரு சில சீசன்களை தவிர்த்து அனைத்து ஐபிஎல் தொடரிலும் சொதப்பல்..சொதப்பல்.. மட்டுமே பஞ்சாப் அணியின் செயலாக இருந்தது.
இத்தனைக்கும் டி20 போட்டிக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட வீரர்களாக வலம் வந்த யுவராஜ் சிங், ஆடம் கில்கிறிஸ்ட், குமார் சங்ககாரா, கிறிஸ் கெய்ல், சேவாக் போன்ற வீரர்கள் பஞ்சாப் அணிக்காக விளையாடிய போதும், ஒரு டீமாக ஜொலிக்கத் தவறியது.
நடப்பு ஐபிஎல் தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் சர்வதேச கிரிக்கெட் போட்டி அனுபவமில்லாத வீரர்கள் பலர் விளையாடி வருகின்றனர். இருப்பினும் அணியினை சிறப்பான முறையில் வழிநடத்தி இறுதி போட்டிக்கு அழைத்து வந்துள்ளார் ஸ்ரேயாஸ் ஐயர்.
Kings XI Punjab என்ற பெயரில் விளையாடிய போது பஞ்சாப் அணி முதல் முறையாக 2014 ஆம் ஆண்டு இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணிக்கு எதிராக நடைப்பெற்ற இறுதிப் போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்து கோப்பை வெல்லும் வாய்ப்பினை நழுவவிட்டது. தற்போது சுமார் 11 வருடங்களுக்குப் பிறகு, பஞ்சாப் கிங்ஸ் IPL 2025 இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
படிதார் vs ஷ்ரேயாஸ்: மற்றொரு இறுதிப் போட்டி மோதல்
கடந்த ஆண்டு நடைப்பெற்ற சையத் முஷ்டாக் அலி டிராபி இறுதிப் போட்டியில், ராஜத் படிதார் (மத்தியப் பிரதேசம்) மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் (மும்பை) ஆகியோர் தலைமையிலான அணி நேருக்கு நேர் மோதியது. அந்த ஆட்டத்தில், ஷ்ரேயாஸ் ஐயரின் தலைமையிலான மும்பை அணி வெற்றி பெற்றது. இப்போது, ஐபிஎல் இறுதிப் போட்டியில் மீண்டும் இருவரும் கேப்டன்களாக மோதுவது மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
இந்திய நேரப்படி இன்று இரவு 7:30 மணியளவில் பஞ்சாப் மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான இறுதிப்போட்டி நடைப்பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.