ஐபிஎல் 2025

ipl2025: கனவு நனவானது... PBKS -ஐ வீழ்த்தி கோப்பையை முத்தமிட்ட RCB.. ரசிகர்கள் உற்சாகம்!

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் 18 வருடகால தவம் நேற்று முடிவுக்கு வந்தது. Finally RCB win the IPL Trophy... இதுவரை எத்தனையோ வெற்றிகளை சந்தித்த கேப்டன்கள் ஆர்சிபி அணியை வழிநடத்தியிருந்தாலும், முதன்முறையாக கேப்டனாக பொறுப்பேற்ற ரஜத் படிதார் ஆர்சிபி, விராட் கோலி கனவுகளை மட்டும் இல்லாமல் ரசிகர்களில் 18 ஆண்டுகால கனவை நிறைவேற்றி வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.

ipl2025:  கனவு நனவானது... PBKS -ஐ வீழ்த்தி கோப்பையை முத்தமிட்ட RCB.. ரசிகர்கள் உற்சாகம்!
ipl2025: கனவு நனவானது... PBKS -ஐ வீழ்த்தி கோப்பையை முத்தமிட்ட RCB.. ரசிகர்கள் உற்சாகம்!
ஐபிஎல் 2025 18-வது சீசன் கடந்த மார்ச் மாதம் 22 ஆம் தேதி கொல்கத்தாவில் கோலாகலமாக தொடங்கிய நிலையில், லீக் போட்டிகள், ப்ளே ஆஃப் போட்டிகளில் வென்று பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் நேற்று (ஜூன் -6) இறுதிப்போட்டி இரவு 7.30 மணிக்கு குஜராத்தில் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் கண்கவர் வானவேடிக்கை மற்றும் நடன நிகழ்ச்சியுடன் கோலாகலமாக தொடங்கியது.

18-வது சீசனின் இறுதிப்போட்டி ராயல்சேலஞ்சர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் பவுலிங் தேர்வு செய்தார்.

18 ஐபிஎல் வரலாற்றில் இதுவரைக்கும் கிரிக்கெட் ரசிகர்கள் இப்படி ஒரு போட்டியை பார்த்திருக்க மாட்டார்கள். இனிவரும் காலங்களில் பார்க்க போவதும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். இதுவரை நடைபெற்ற 18 சீசன்களில் கோப்பையை வெல்லாத இரு அணி மோதும் போட்டியாக நேற்றைய போட்டி அமைந்தது. பஞ்சாப்போ, பெங்களூரோ இந்த இரண்டு அணியில எந்த அணி வெற்றிபெற்றாலும், அந்த வெற்றி அந்த அணிக்கு முதல் வெற்றிக்கோப்பபையாக மாறும் என்பதால் இரண்டு அணி ரசிகர்களும் இறுதிப்போட்டியை ரொம்பவே எதிர்பார்த்து காத்திருந்தனர்.

இந்த போட்டியில் டாஸ் வின் பண்ண ஸ்ரேயஸ் ஐயர், பவுலிங் சூஸ் பண்ணாரு, ஆர்சிபி அணியோட ஓப்பனர்ஸ் ஃபில்சால்ட் மற்றும் மயங்க் அகர்வால் 2 பேரும், அதிரடியான ஆட ஆரம்பிச்சாங்க. ஃபில் சால்ட் 9 பந்துகளில் 1 சிக்ஸ், 2 பவுண்டரிகளுடன் 16 ரன்களில் வெளியேறினார். மயங்க் அகர்வால் 18 பந்துகளில் 24 ரன்கள் எடுத்த நிலையில், சாஹல் ஓவர்ல அர்ஷ்தீப் சிங்கிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து வந்த கேப்டன் ரஜத் படிதார் 26 ரன்களுடன் எல்பிடபிள்யூ முறையில ஆட்டமிழந்தார். தொடர்ந்து விராட் கோலி அரைசதம் அடிப்பார் என்று எல்லாரும் ரசிகர்கள் காத்திருந்தனர். ஆனால், 43 ரன்கள் எடுத்திருந்த நிலையில, ஓமர்சாய் பந்துல அவரிடமே கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். 15 ஓவர் முடிவுல ஆர்சிபி 4 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் ஆர்சிபி எடுத்திருந்தனர். அடுத்து வந்த விவிங்ஸ்டனும் 25 ரன்களும், ஜிதேஷ் சர்மா 24 ரன்களும் எடுத்திருந்த நிலையில், ஆர்சிபி அணியின் வீரர்கள் 30 ரன்களை தாண்டவில்லை. 17 -வது ஓவர் வரைக்கும், 6 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் மட்டுமே ஆர்சிபி எடுத்தது.

ஒரு வழியா கடைசி ஓவர வீச அர்ஷ்தீப் சிங் வந்தாரு. ஃப்ர்ஸ்ட் பால்ல ஒரு ரன் கொடுத்த நிலையில், அடுத்த பந்துல ஷெப்பர்ட 17 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து புவனேஷ்வர்குமார் 1 ரன்னில் ஆட்டமிழக்க, க்ருணால் பாண்டியா 4 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், ஸ்ரேயஸ் ஐயரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

வந்தான் அடிச்சான் விக்கெட், வந்தான் அடிச்சான் விக்கெட் சினிமா வசனம் போல், அர்ஷ்தீப் சிங் ஒரே ஓவரில் அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 20 ஓவர் முடிவுல, ஆர்சிபி அணி 9 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் மட்டுமே எடுத்தனர். பஞ்சாப் அணியில, அர்ஷ்தீப் சிங் , ஜேமிசன் 2 பேரும் தலா 3 விக்கெட்டுகளை எடுக்க.. ஓமர்சாய், சைவக் விஜய்குமார், சாஹல் எல்லாம் தலா 1 விக்கெட்களை கைப்பற்றினர்.

191 ரன்கள் எடுத்தால் சாம்பியன் கோப்பை நமக்கு தான் அப்டிங்குற ஆசையில தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்குன பிரயன்சு ஆர்யா, பிரப்சிம்ரன்சிங் 2 பேரும் பட்டைய கிளப்ப, ஆர்யா 19 பந்துகளில் 24 ரன்கள் எடுத்த நிலையில், 5 ஓவரில் ஃபில் சால்ட்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து, பிரப்சிம்ரன்சிங் 22 பந்துகளில் 26 எடுத்த நிலையில், 9 ஓவரில் குருணால் பாண்டியா பந்துவீச்சில் புவனேஷ்வர்குமாரிடம் கேட்ச் கொடுத்து அவரும் ஆட்டமிழந்தார். இப்படி தொடக்க ஆட்டக்காரர்கள் சொதப்பிய நிலையில், அடுத்து பஞ்சாப் அணியின் நம்பிக்கை நாயகனா இருந்த கேப்டன் ஸ்ரேயஸ் களமிறங்குனார். மும்பை அணிக்கு எதிரான போட்டியில ஒரே ஓவர்ல 3 சிக்ஸ் அடிச்ச ஸ்ரேயஸ் ஐயர் இந்த போட்டியில, ஷெப்பர்ட் பந்துவீச்சில், ஜிதேஷ் ஷர்மாவிடம் கேட்ச் கொடுத்து ஒரே ரன்னுல அவுட் ஆகி பெவியன் திரும்புனார். அங்கயே பஞ்சாப் அணியோட கோப்பை கனவு பலிக்காம பொய்டுச்சுன்னுதான் சொல்லனும். அடுத்து களமிறங்கிய இங்கிலிசு நான் இருக்கேன் பஞ்சாப் அணிக்கு சொல்லும் போதே, க்ருணால் பாண்டியா ஓவர் ல 39 ரன்னுக்கு அவுட் ஆனார். அடுத்து ரசிகர்கள் வதேராவை மலைப்போல நம்பியிருந்த சூழலில், அவரும் 15 ரன் அடித்த நிலையில் புவனேஷ்வர் குமாரி பந்துவீச்சில், க்ருணால் பாண்டியா கிட்ட கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தர். ஸ்டோய்னிஸ், ஓமர் சாய் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க, பஞ்சாப்பின் நம்பிக்கை நட்சத்திரம் ஷஷாங்சின் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 6 சிக்ஸ் 3 பவுண்டரி அடிச்ச ஷஷாங்சிங் ஆட்டம் இன்னும் முடியல என்று ஆர்சிபி பவுலர்ஸின் பந்துவீச்சை நாலா பக்கமும் சிதற விட்டார். கடைசியில், 30 பந்துக்கு 61 ரன்களை குவித்து ஆர்சிபி வீரர்களுக்கு மரண பயத்த காட்டினார். இறுதியில் 20 ஓவர் முடிவுல பஞ்சாப் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவினர்.

ஆர்சிபி அணியில் க்ருணால் பாண்டியா 4 ஓவர்ல வெறும் 17 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டையும் எடுத்தனர். புவனேஸ்வர் குமார் ரன்ன வாரி வழங்குனாலும், தன் பங்குக்கு அவரும் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இந்த இறுதிப்போட்டியில், பஞ்சாப்பை வீழ்த்தி 6 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி அணி வெற்றிக்கோப்பையை கைப்பற்றி சாம்பியன் பட்டத்தை வென்றது. 18 ஆண்டு கால ஐபிஎல் வரலாற்றில் முதன்முறையாக வெற்றிக்கோப்பையை ஆர்சிபி அணி கைப்பற்றி உள்ளதால், ஆர்சிபி அணியின் ரசிகர்கள் இந்த வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.