நாடாளுமன்ற மாநிலங்களவையில் தமிழக எம்.பிக்கள் 6 பேரின் பதவிக்காலம் வரும் ஜூலை மாதத்துடன் நிறைவடைய உள்ளதால், அந்த பதவிக்கு யாரெல்லாம் வரப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில், 4 திமுக வசமும், 2 அதிமுக வசமும் உள்ளது.
இந்த நிலையில், தன்னிடம் உள்ள 4 சீட்களுக்கான வேட்பாளர்களை அறிவித்து திமுக, ஏற்கனவே ராஜ்யசபா எம்.பி ஆக உள்ள வழக்கறிஞர் வில்சனுக்கு வாய்ப்பு வழங்கியதோடு, மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு சீட், திமுக சேலம் மாவட்டச் செயலாளரான சிவலிங்கத்திற்கும், எழுத்தாளர் சல்மாவிற்கும் என பிரித்துக் கொடுத்துள்ளது.
அதிமுக வசமுள்ள 2 சீட்களை கூட்டணிகளுக்கு கொடுக்காமல் அதிமுகவே எடுத்துக் கொண்டுள்ளது. அதாவது செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அவைத் தலைவரான தனபால் மற்றும் முன்னாள் அமைச்சர் இன்பதுரை ஆகியோர் அதிமுகவின் மாநிலங்களவை வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். தேமுதிகவிற்கு அடுத்தாண்டு மாநிலங்களவையில் ஒரு சீட் வழங்கப்படும் என்றும், அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக தொடர்வதாகவும் அதிமுக அறிவித்துள்ளது.
இந்த நிலையில், இந்தாண்டு ராஜ்யசபா சீட் வழங்கப்படாதது குறித்து தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா கூறுகையில், ”தற்போதைய மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு சீட் வழங்கப்படும் என அதிமுக தரப்பில் ஏற்கெனவே உறுதி அளிக்கப்பட்டது. ஆனால் இப்போது அடுத்த தேர்தலில் சீட் எனக் கூறுகின்றனர். அரசியலில் தேர்தலை நோக்கிதான் அனைத்து பயணமும் இருக்கும் என்பதால் எங்களின் நிலைப்பாடும் அதை நோக்கிதான் இருக்கும். தேர்தலை மனதில் வைத்தே தேமுதிக பயணிக்கிறது. 2026 தேர்தலில் தேமுதிக தனது கடமையை நிறைவேற்றும்” என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல, தேமுதிக, அதிமுகவுடன் தான் கூட்டணியில் இருக்கிறது என்று அதிமுக தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தாலும், கூட்டணி நிலைப்பாடு குறித்து ஜனவரியில் அறிவிப்போம் என தேமுதிக திட்டவட்டமாகக் கூறியுள்ளது. இதன்மூலமாக, அதிமுக மீது கடும் அதிருப்தியில் தேமுதிக இருப்பதாகவும், அதனால் திமுகவுடன் ரகசியமாக பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருப்பதாகவும் விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
அதன்வெளிப்பாடு தான், மதுரையில் நடைபெறும் திமுக பொதுக்குழுக்கூட்டத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டதும், அதற்கு பிரேமலதா நன்றி தெரிவித்ததும் என்று கூறப்படுகிறது.
தேமுதிகவை பொறுத்தவரை, அதிமுக கூட்டணியில் தொடரவேண்டும் என்றால் மாநிலங்களவை சீட் கொடுக்க வேண்டும் என்ற டிமாண்ட் முன்வைக்கப்பட்டதாம். ஆனால், என்னத்தான் சுதீஷை அனுப்பி எடப்பாடியாரிடம் பேச்சுவார்த்தை நடத்தினாலும், இந்த முறை தங்களுக்கு சீட் கிடைக்கவில்லையே என்ற வருத்தம் இருக்கிறதாம். சரி மாநிலங்களவை சீட் பொறுமையாக கொடுங்கள், சட்டமன்றத் தேர்தலில் அதிக சீட்களை கொடுங்கள் என்ற புதிய டிமாண்டை தேமுதிக வைக்கத் தொடங்கியுள்ளதாகவும், ஆனால் எடப்பாடியார் அதெல்லாம் எங்கள் கையில் என்று கைவிரித்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் கோபமான தேமுதிக, திமுகவுடன் ரகசிய பேச்சுவார்த்தையை தொடங்கியதாகவும், விரைவிலேயே திமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஏற்கனவே திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கே சீட்களை எப்படி பிரித்துக் கொடுக்கப்போகிறோம் என்ற குழப்பத்தில் திமுக தலைமை இருக்கும் நிலையில், தேமுதிகவும் திமுக கூட்டணியில் இணைந்தால் அது திமுகவிற்கே மேலும் சிக்கலாக அமையும் என்கின்றனர் அரசியல் நிபுணர்கள்.
எனவே, தேமுதிக யாருடன் கூட்டணி வைக்கப்போகிறது? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இந்த நிலையில், தன்னிடம் உள்ள 4 சீட்களுக்கான வேட்பாளர்களை அறிவித்து திமுக, ஏற்கனவே ராஜ்யசபா எம்.பி ஆக உள்ள வழக்கறிஞர் வில்சனுக்கு வாய்ப்பு வழங்கியதோடு, மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு சீட், திமுக சேலம் மாவட்டச் செயலாளரான சிவலிங்கத்திற்கும், எழுத்தாளர் சல்மாவிற்கும் என பிரித்துக் கொடுத்துள்ளது.
அதிமுக வசமுள்ள 2 சீட்களை கூட்டணிகளுக்கு கொடுக்காமல் அதிமுகவே எடுத்துக் கொண்டுள்ளது. அதாவது செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அவைத் தலைவரான தனபால் மற்றும் முன்னாள் அமைச்சர் இன்பதுரை ஆகியோர் அதிமுகவின் மாநிலங்களவை வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். தேமுதிகவிற்கு அடுத்தாண்டு மாநிலங்களவையில் ஒரு சீட் வழங்கப்படும் என்றும், அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக தொடர்வதாகவும் அதிமுக அறிவித்துள்ளது.
இந்த நிலையில், இந்தாண்டு ராஜ்யசபா சீட் வழங்கப்படாதது குறித்து தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா கூறுகையில், ”தற்போதைய மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு சீட் வழங்கப்படும் என அதிமுக தரப்பில் ஏற்கெனவே உறுதி அளிக்கப்பட்டது. ஆனால் இப்போது அடுத்த தேர்தலில் சீட் எனக் கூறுகின்றனர். அரசியலில் தேர்தலை நோக்கிதான் அனைத்து பயணமும் இருக்கும் என்பதால் எங்களின் நிலைப்பாடும் அதை நோக்கிதான் இருக்கும். தேர்தலை மனதில் வைத்தே தேமுதிக பயணிக்கிறது. 2026 தேர்தலில் தேமுதிக தனது கடமையை நிறைவேற்றும்” என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல, தேமுதிக, அதிமுகவுடன் தான் கூட்டணியில் இருக்கிறது என்று அதிமுக தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தாலும், கூட்டணி நிலைப்பாடு குறித்து ஜனவரியில் அறிவிப்போம் என தேமுதிக திட்டவட்டமாகக் கூறியுள்ளது. இதன்மூலமாக, அதிமுக மீது கடும் அதிருப்தியில் தேமுதிக இருப்பதாகவும், அதனால் திமுகவுடன் ரகசியமாக பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருப்பதாகவும் விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
அதன்வெளிப்பாடு தான், மதுரையில் நடைபெறும் திமுக பொதுக்குழுக்கூட்டத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டதும், அதற்கு பிரேமலதா நன்றி தெரிவித்ததும் என்று கூறப்படுகிறது.
தேமுதிகவை பொறுத்தவரை, அதிமுக கூட்டணியில் தொடரவேண்டும் என்றால் மாநிலங்களவை சீட் கொடுக்க வேண்டும் என்ற டிமாண்ட் முன்வைக்கப்பட்டதாம். ஆனால், என்னத்தான் சுதீஷை அனுப்பி எடப்பாடியாரிடம் பேச்சுவார்த்தை நடத்தினாலும், இந்த முறை தங்களுக்கு சீட் கிடைக்கவில்லையே என்ற வருத்தம் இருக்கிறதாம். சரி மாநிலங்களவை சீட் பொறுமையாக கொடுங்கள், சட்டமன்றத் தேர்தலில் அதிக சீட்களை கொடுங்கள் என்ற புதிய டிமாண்டை தேமுதிக வைக்கத் தொடங்கியுள்ளதாகவும், ஆனால் எடப்பாடியார் அதெல்லாம் எங்கள் கையில் என்று கைவிரித்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் கோபமான தேமுதிக, திமுகவுடன் ரகசிய பேச்சுவார்த்தையை தொடங்கியதாகவும், விரைவிலேயே திமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஏற்கனவே திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கே சீட்களை எப்படி பிரித்துக் கொடுக்கப்போகிறோம் என்ற குழப்பத்தில் திமுக தலைமை இருக்கும் நிலையில், தேமுதிகவும் திமுக கூட்டணியில் இணைந்தால் அது திமுகவிற்கே மேலும் சிக்கலாக அமையும் என்கின்றனர் அரசியல் நிபுணர்கள்.
எனவே, தேமுதிக யாருடன் கூட்டணி வைக்கப்போகிறது? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.