டாக்டர் ராமதாஸ், கட்சிக்கு முழு அதிகாரம் கொண்ட நிறுவனராகத் தன்னை அறிவித்துள்ளார். டாக்டர் அன்புமணி ராமதாஸ், இந்தியத் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சித் தலைவர் என்ற வகையில் தனக்கே அதிகாரம் இருப்பதாகக் கூறுகிறார். இந்த மோதல், பொதுக்குழு கூட்டங்கள் மற்றும் நிர்வாகிகளை நியமிப்பதில் இரு தரப்பினரும் தனித்தனியாகச் செயல்படுவதன் மூலம் மேலும் தீவிரமடைந்துள்ளது.
இந்த நிலையில், சென்னையில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் செய்தியாளர்கள் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தனது வீட்டில் ஒட்டு கேட்பு கருவி வைத்தது அன்புமணிதான். உலகிலேயே தந்தையையே வேவு பார்த்த மகன் அன்புமணி மட்டும்தான். நான் அமரும் சேருக்கு அருகே பக்கத்திலேயே யாரோ ஒட்டு கேட்கும் கருவியை வைத்துள்ளனர். எதற்காக வைக்கப்பட்டது என்று ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உலகிலேயே தந்தையை வேவு பார்த்த ஒரே மகன் அன்புமணி மட்டுமே என்றும் அவர் குறிப்பிட்டார்.
“அண்மையில் கட்சியைப் பலப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு செயலாளர்களுக்கு அழைப்பும் விடுக்கப்பட்டு இருந்தது. ஆனால், ஆலோசனை நடைபெறும் நாளுக்கு முந்தைய தினம் நிர்வாகிகளை நேரடியாகத் தொடர்பு கொண்ட அன்புமணி கூட்டத்தில் பங்கேற்க கூடாது என என்னை மிரட்டினார். அதன்படி, பாமக கூட்டத்தில் பங்கேற்காத மாவட்ட செயலாளர்களை நீக்கி, புதிய நிர்வாகிகளை நியமனம் செய்தேன். பாமக கட்சியின் நிறுவனரும், தலைவருமான நான் கூறுவதை அவர் எப்படி தடுக்க முடியும்.
வருகின்ற 2025 ஆகஸ்ட் 10ம் தேதி பெண்கள் மட்டுமே பங்கேற்க கூடிய வகையில் மாநாடு ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், சுமார் 2 முதல் 3 லட்சம் பெண்கள் கலந்துகொள்ள உள்ளனர். நான் வியர்வை சிந்தி உழைத்து உருவாக்கிய கட்சியை வேறு யாரும் உரிமை கோர முடியாது. பொதுக்குழுவை கூட்ட வேண்டுமென்றால் 15 நாட்களுக்கு முன்பு தகவல் தெரிவிக்க வேண்டும். அன்புமணி அறிவித்துள்ள பாமக பொதுக்குழு கூட்டம் சட்ட விரோதம்” இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிலையில், சென்னையில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் செய்தியாளர்கள் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தனது வீட்டில் ஒட்டு கேட்பு கருவி வைத்தது அன்புமணிதான். உலகிலேயே தந்தையையே வேவு பார்த்த மகன் அன்புமணி மட்டும்தான். நான் அமரும் சேருக்கு அருகே பக்கத்திலேயே யாரோ ஒட்டு கேட்கும் கருவியை வைத்துள்ளனர். எதற்காக வைக்கப்பட்டது என்று ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உலகிலேயே தந்தையை வேவு பார்த்த ஒரே மகன் அன்புமணி மட்டுமே என்றும் அவர் குறிப்பிட்டார்.
“அண்மையில் கட்சியைப் பலப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு செயலாளர்களுக்கு அழைப்பும் விடுக்கப்பட்டு இருந்தது. ஆனால், ஆலோசனை நடைபெறும் நாளுக்கு முந்தைய தினம் நிர்வாகிகளை நேரடியாகத் தொடர்பு கொண்ட அன்புமணி கூட்டத்தில் பங்கேற்க கூடாது என என்னை மிரட்டினார். அதன்படி, பாமக கூட்டத்தில் பங்கேற்காத மாவட்ட செயலாளர்களை நீக்கி, புதிய நிர்வாகிகளை நியமனம் செய்தேன். பாமக கட்சியின் நிறுவனரும், தலைவருமான நான் கூறுவதை அவர் எப்படி தடுக்க முடியும்.
வருகின்ற 2025 ஆகஸ்ட் 10ம் தேதி பெண்கள் மட்டுமே பங்கேற்க கூடிய வகையில் மாநாடு ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், சுமார் 2 முதல் 3 லட்சம் பெண்கள் கலந்துகொள்ள உள்ளனர். நான் வியர்வை சிந்தி உழைத்து உருவாக்கிய கட்சியை வேறு யாரும் உரிமை கோர முடியாது. பொதுக்குழுவை கூட்ட வேண்டுமென்றால் 15 நாட்களுக்கு முன்பு தகவல் தெரிவிக்க வேண்டும். அன்புமணி அறிவித்துள்ள பாமக பொதுக்குழு கூட்டம் சட்ட விரோதம்” இவ்வாறு அவர் கூறினார்.