அரசியல்

சத்தீஸ்கரில் பழங்குடியினர் மீது மனித உரிமை மீறல்..சென்னையில் நாளை மாபெரும் ஆர்ப்பாட்டம்!

சத்தீஸ்கர் மாநிலத்தில் மாநில அரசும், மத்திய அரசும் இணைந்து நக்சல்களை ஒழிக்கிறோம் என்கிற பெயரில் பழங்குடி மக்களை வேட்டையாடும் நடவடிக்கையை கண்டித்து நாளை சென்னையில் மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தப் போவதாக மாமல்லபுரத்தில் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சத்தீஸ்கரில் பழங்குடியினர் மீது மனித உரிமை மீறல்..சென்னையில் நாளை மாபெரும் ஆர்ப்பாட்டம்!
சத்தீஸ்கரில் பழங்குடியினர் மீது மனித உரிமை மீறல்: சென்னையில் நாளை மாபெரும் ஆர்ப்பாட்டம்!
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் சிறுத்தைகள் கட்சி நிர்வாகி ஐயப்பன் இல்ல காதணி விழா மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு குழந்தைகளை வாழ்த்திய பின்னர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஜூன் 14 ஆம் தேதி திருச்சிராப்பள்ளியில் மதச்சார்பின்மை காப்போம் பேரணி நடைபெற உள்ளது.

வஃக்பு திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும் அரசமைப்புச் சட்டத்தின் உயிர் மூச்சு கோட்பாடான மதசார்பின்மையை பாதுகாக்க வலியுறுத்தியும் இந்த பேரணி ஒருங்கிணைக்கப்படுகிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சி மட்டுமின்றி அனைத்து மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளும் இதில் பெருந்திரளாக கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டும் என்று அழைப்பு விடுகிறோம் என்று கூறினார்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொது குழு இன்று மதுரையிலே கூடி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக அரசியல் அரங்கில் கவனிக்கப்படுகிறது 4 ஆண்டு கால திமுக அரசு அனைத்து தரப்பு மக்களின் நன்மதிப்பையும் பெற்றுள்ளது. எண்ணற்ற பல புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தி வருகிறார். தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு. க. ஸ்டாலின் அவர்கள் ஆகவே அவருடைய தலைமையில் இயங்கக்கூடிய மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி இந்த தேர்தலில் மீண்டும் மக்களின் பேராதரவோடு வெற்றி பெறும் என்று நான் பெரிதும் நம்புகிறேன்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் மாநில அரசும், மத்திய அரசும் இணைந்து நக்சல்களை ஒழிக்கிறோம் என்கிற பெயரில் பழங்குடி மக்களை வேட்டையாடும் நடவடிக்கை ஈடுபட்டுள்ளனர். அங்குள்ள ஆதிவாசிகள் கனிம வளங்களை பாதுகாப்பதற்காகவும் இன்னும் பிற இயற்கை வளங்களை பாதுகாப்பதற்காகவும் தங்களுடைய வாழ்வாதாரங்களை பாதுகாப்பதற்காகவும் தொடர்ந்து போராடி வருகின்றனர். அவருடைய அறவழி போராட்டத்திற்கு அங்குள்ள மாவோயிஸ்டுகள் ஆதரவு தந்து வருகிறார்கள். இதனால் நக்சல்வாரிகளை அழித்தொழிக்கிறோம் என்கிற பெயரில், மத்திய அரசு மற்றும் சத்தீஸ்கர் மாநில அரசு இணைந்து ஹெலிகாப்டர்களில் பறந்து காடுகளில் வசிக்கும் மக்களின் மீது குண்டு மழை பொழிகிறார்கள் ஒரு நாளைக்கு 20. 30 பேர் கொல்லப்படுகிறார்கள்.

கொல்லப்படுபவர்களில் பெரும்பான்மையானவர்கள் உழைக்கும் ஆதிவாசிகள், வனவாசிகள், மாவோயிஸ்டுகள் இயக்கத்துடைய பொது செயலாளர் வசுவராஜ் அண்மையிலே கொல்லப்பட்டிருக்கிறார். அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்துவதற்கு மாறாக அந்த மண்ணின் மைந்தர்களான பூர்வீக குடிகளான பழங்குடி மக்களிடையே பேச்சுவார்த்தை நடத்துவதற்கான எந்த முனைப்பையும் மேற்கொள்ளாமல் அழித்தொழிப்பு நடவடிக்கை ஈடுபட்டு வருவது கடுமையான கண்டனத்திற்குரியது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. இதனை ஒட்டி நாளை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் இடதுசாரி கட்சிகள் இணைந்து எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே நாளை மாலை 4 மணி அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிகவிற்கு ராஜ்யசபா எம்.பி சீட் தருவதாக கூறி, சீட் கொடுக்காமல் ஏமாற்றப்பட்டது குறித்து கேள்விக்கு, அது அந்த கூட்டணி கட்சிகள் இடையே உள்ள பிரச்சனை அவர்கள் என்ன பேசினார்கள் என்ன ஒப்பந்தம் போட்டார்கள் என்று நமக்கு தெரியாது. ஆனால், தேமுதிக தரப்பில் ராஜ்யசபா எங்களுக்கு ஒதுப்பதாக பொது வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால், அவ்வாறு அதிமுக நடந்து கொள்ளவில்லை என்று கருத்து சொல்லி இருக்கிறார்கள்.

அதிமுக தலைப்பில் அடுத்த முறை இந்த வாய்ப்பை தருவோம் என்று கூறியிருப்பதாக தெரிகிறது இது அவர்களுக்கு இடையிலான பிரச்சினை கருத்து சொல்ல விரும்பவில்லை என்று அவர் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் திருப்போரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ் எஸ் பாலாஜி செய்யூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பனையூர் பாபு மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொறுப்பாளர்கள் உறவினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.