விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் “கச்சத்தீவை ஒருபோதும் விட்டுத் தர முடியாது’ என இலங்கை வெளி உறவுத்துறை அமைச்சரின் கருத்து குறித்த கேள்விக்கு? கச்சத்தீவு இந்தியாவுக்கு உரியது. குறிப்பாக தமிழக மக்களுக்கு உரியது. கச்சத்தீவில் நடைபெறும் அந்தோணியார் திருவிழாவில் தமிழர்கள் காலம் காலமாக பங்கேற்பது வழக்கம்.
இந்திய அரசு அரசியல் காரணங்களுக்காக இலங்கைக்கு தாரை வார்த்ததை நாம் அறிவோம். அது ஒரு வரலாற்றுப் பிழை. அதனை சீர் செய்ய வேண்டும். கட்சத்தீவை மீட்டு தர வேண்டும் என்ற தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால், இந்திய அரசு எந்த நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை என்பது வேதனை அளிக்கிறது.
இலங்கை வெளிவகாரத்துறை அமைச்சர் கூறியிருப்பது தமிழர்களுக்கு எதிரானது என்பதை விட இந்துயாவுக்கு விரோதமான கருத்து. அதற்குரிய விளக்கத்தை அவர் தர வேண்டும். மேலும், தமிழக மக்களின் நீண்ட நாள் கலாச்சார உரிமையும் மீட்டு தருவதற்கு மத்திய அரசு முன்வர வேண்டும்” என்றார்.
காவலாளி அஜித்குமார் வழக்கு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “அஜித்குமார் கொலை வழக்கில் முதல்வர் உடனடியாக தலையிட்டு துணிச்சலான முடிவு எடுத்துள்ளார். பாதிக்கப்பட்ட அஜித்குமாரின் தாயாரை தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்தார். மேலும், சிபிஐ விசாரணைக்கு ஆணையிட்டுள்ளார். இந்த நடவடிக்கைகள் இந்த கடும் துயரத்திற்கு சற்று ஆறுதலை தருகிறது” என்றார்.
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “ஏற்கனவே நடிகர் விஜய்க்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பை இந்திய அரசு வழங்கியுள்ளது. தாமதமாக எடப்பாடி பழனிசாமிக்கு மத்திய அரசு வழங்கி உள்ளது. இருப்பினும் அவரது பாதுகாப்புக்காக மத்திய அரசின் இந்த நிலைப்பாட்டை எங்கள் கட்சி வரவேற்கிறது” என தெரிவித்தார்.
விஜய்யின் திமுக-பாஜக எதிர்ப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “திமுக, பாஜக ஆகிய கட்சிகளை எதிரியாக கூறிவிட்டார் விஜய். ஆனால் அதிமுக பற்றிய எதுவும் சொல்லவில்லை. விமர்சனமாக சில கருத்துக்கள் சொன்னாலும் கூட அதிமுக எதிரி தான் என அழுத்தமாக அவர் கூறவில்லை.
திமுகவை ஆளுங்கட்சி என்ற முறையில் எதிர்க்கிறார். பாஜகவை தமிழர்களுக்கு விரோதமான கட்சி என்று எதிர்க்கிறார். ஆனால் அதிமுகவை தோழமை கட்சியாக விஜய் பார்க்கிறாரா? என்ற கேள்வி எழுகிறது. இதற்கு அவர் தான் விடை சொல்ல வேண்டும்” என்றார்.
இந்திய அரசு அரசியல் காரணங்களுக்காக இலங்கைக்கு தாரை வார்த்ததை நாம் அறிவோம். அது ஒரு வரலாற்றுப் பிழை. அதனை சீர் செய்ய வேண்டும். கட்சத்தீவை மீட்டு தர வேண்டும் என்ற தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால், இந்திய அரசு எந்த நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை என்பது வேதனை அளிக்கிறது.
இலங்கை வெளிவகாரத்துறை அமைச்சர் கூறியிருப்பது தமிழர்களுக்கு எதிரானது என்பதை விட இந்துயாவுக்கு விரோதமான கருத்து. அதற்குரிய விளக்கத்தை அவர் தர வேண்டும். மேலும், தமிழக மக்களின் நீண்ட நாள் கலாச்சார உரிமையும் மீட்டு தருவதற்கு மத்திய அரசு முன்வர வேண்டும்” என்றார்.
காவலாளி அஜித்குமார் வழக்கு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “அஜித்குமார் கொலை வழக்கில் முதல்வர் உடனடியாக தலையிட்டு துணிச்சலான முடிவு எடுத்துள்ளார். பாதிக்கப்பட்ட அஜித்குமாரின் தாயாரை தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்தார். மேலும், சிபிஐ விசாரணைக்கு ஆணையிட்டுள்ளார். இந்த நடவடிக்கைகள் இந்த கடும் துயரத்திற்கு சற்று ஆறுதலை தருகிறது” என்றார்.
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “ஏற்கனவே நடிகர் விஜய்க்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பை இந்திய அரசு வழங்கியுள்ளது. தாமதமாக எடப்பாடி பழனிசாமிக்கு மத்திய அரசு வழங்கி உள்ளது. இருப்பினும் அவரது பாதுகாப்புக்காக மத்திய அரசின் இந்த நிலைப்பாட்டை எங்கள் கட்சி வரவேற்கிறது” என தெரிவித்தார்.
விஜய்யின் திமுக-பாஜக எதிர்ப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “திமுக, பாஜக ஆகிய கட்சிகளை எதிரியாக கூறிவிட்டார் விஜய். ஆனால் அதிமுக பற்றிய எதுவும் சொல்லவில்லை. விமர்சனமாக சில கருத்துக்கள் சொன்னாலும் கூட அதிமுக எதிரி தான் என அழுத்தமாக அவர் கூறவில்லை.
திமுகவை ஆளுங்கட்சி என்ற முறையில் எதிர்க்கிறார். பாஜகவை தமிழர்களுக்கு விரோதமான கட்சி என்று எதிர்க்கிறார். ஆனால் அதிமுகவை தோழமை கட்சியாக விஜய் பார்க்கிறாரா? என்ற கேள்வி எழுகிறது. இதற்கு அவர் தான் விடை சொல்ல வேண்டும்” என்றார்.