அசாம் மற்றும் தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 8 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் ஜூன்-ஜூலை மாதத்தில் நிறைவடைகிறது. காலியாகும் மாநிலங்களவை உறுப்பினருக்கான பதவியிடங்களை நிரப்பும் வகையில் வருகிற ஜூன் மாதம் 19 ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, இன்று (28-05-2025) நடைபெற்ற மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக் குழு, செயற்குழு கூட்டத்தில், நடைப்பெற உள்ள மாநிலங்களவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் போட்டியிடுவார் என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக் குழு, செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் முறையே..
தீர்மானம் 1:
2024 நாடாளுமன்ற பொதுத் தேர்தலின் போது திராவிட முன்னேற்றக் கழகத்துடன் ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கையின் அடிப்படையில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு 2025-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற மாநிலங்களவை தேர்தலில் ஒரு இடம் ஒதுக்கப்படும் என முடிவு செய்யப்பட்டது.
அதன் அடிப்படையில், வருகிற ஜூன் 19-ஆம் தேதி நடைபெற இருக்கும் 6 தமிழக நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளராக, தலைவர் கமல் ஹாசன் அவர்களை மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக் குழு, செயற்குழு ஏகமனதாக முடிவு செய்து அறிவிக்கிறது.

தீர்மானம் 2:
மாநிலங்களவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளரான கமல் ஹாசன் அவர்களுக்குத் தங்களது மேலான ஆதரவை நல்கும்படி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணிக் கட்சிகளை மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக் குழு, செயற்குழு கேட்டுக்கொள்கிறது.
மாநிலங்களவை தேர்தல்: இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு
தமிழ்நாட்டில் மாநிலங்களவை உறுப்பினர்கள் மறைமுகத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இது இந்திய அரசியலமைப்பின் விதிகளின் படியும், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951-ன் விதிகளின் படியும் நடைபெறுகிறது.
இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் கடந்த மே 26 ஆம் தேதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பின் விவரம் பின்வருமாறு-
அசாம் மற்றும் தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 8 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் ஜூன்-ஜூலை மாதத்தில் நிறைவடைகிறது. காலியாகும் மாநிலங்களவை உறுப்பினருக்கான பதவியிடங்களை நிரப்பும் வகையில் வருகிற ஜூன் மாதம் 19 ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. அதுத்தொடர்பான விவரங்கள் பின்வருமாறு-
ஓய்வு பெறும் உறுப்பினர்கள் விவரம்:
அசாம்: (2 இடங்கள்) (பதவிக்காலம் முடியும் தேதி: 14.06.2025)
1. மிஷன் ரஞ்சன் தாஸ்
2. பீரேன்ட்ரா பிரசாத் பைஸ்யா
தமிழ்நாடு: (6 இடங்கள்) (பதவிக்காலம் முடியும் தேதி: 24.07.2025)
1. டாக்டர் அன்புமணி ராமதாஸ்
2. எம்.சண்முகம்
3. எம்.சந்திரசேகரன்
4. எம்.முகமது அப்துல்லா
5. பி.வில்சன்
6. வைகோ
தேர்தல் அட்டவணை விவரங்கள்:
தேர்தல் தொடர்பான அறிவிக்கை வெளியிடுதல்: ஜூன் 02, 2025 (திங்கட்கிழமை)
வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி: ஜூன் 09, 2025 (திங்கட்கிழமை)
வேட்புமனுக்களை ஆய்வு செய்தல்: ஜூன் 10, 2025 (செவ்வாய்க்கிழமை)
வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான கடைசி தேதி: ஜூன் 12, 2025 (வியாழக்கிழமை)
வாக்குப்பதிவு தேதி: ஜூன் 19, 2025 (வியாழக்கிழமை)
வாக்குப்பதிவு நேரம்: காலை 09:00 மணி முதல் மாலை 04:00 மணி வரை
வாக்கு எண்ணிக்கை: ஜூன் 19, 2025 (வியாழக்கிழமை) மாலை 05:00 மணிக்கு
தேர்தல் செயல்முறைகள் நிறைவடையும் தேதி: ஜூன் 23, 2025 (திங்கட்கிழமை)
சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் பணி நீட்டிப்பு காலத்தில் இருப்பதால், தமிழ்நாடு சட்டப்பேரவையின் கூடுதல் செயலாளர் சுப்பிரமணியன் மாநிலங்களவை தேர்தலுக்கான தேர்தல் நடத்தும் அதிகாரியாக இருப்பார் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதனிடையே, இன்று (28-05-2025) நடைபெற்ற மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக் குழு, செயற்குழு கூட்டத்தில், நடைப்பெற உள்ள மாநிலங்களவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் போட்டியிடுவார் என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக் குழு, செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் முறையே..
தீர்மானம் 1:
2024 நாடாளுமன்ற பொதுத் தேர்தலின் போது திராவிட முன்னேற்றக் கழகத்துடன் ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கையின் அடிப்படையில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு 2025-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற மாநிலங்களவை தேர்தலில் ஒரு இடம் ஒதுக்கப்படும் என முடிவு செய்யப்பட்டது.
அதன் அடிப்படையில், வருகிற ஜூன் 19-ஆம் தேதி நடைபெற இருக்கும் 6 தமிழக நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளராக, தலைவர் கமல் ஹாசன் அவர்களை மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக் குழு, செயற்குழு ஏகமனதாக முடிவு செய்து அறிவிக்கிறது.

தீர்மானம் 2:
மாநிலங்களவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளரான கமல் ஹாசன் அவர்களுக்குத் தங்களது மேலான ஆதரவை நல்கும்படி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணிக் கட்சிகளை மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக் குழு, செயற்குழு கேட்டுக்கொள்கிறது.
மாநிலங்களவை தேர்தல்: இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு
தமிழ்நாட்டில் மாநிலங்களவை உறுப்பினர்கள் மறைமுகத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இது இந்திய அரசியலமைப்பின் விதிகளின் படியும், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951-ன் விதிகளின் படியும் நடைபெறுகிறது.
இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் கடந்த மே 26 ஆம் தேதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பின் விவரம் பின்வருமாறு-
அசாம் மற்றும் தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 8 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் ஜூன்-ஜூலை மாதத்தில் நிறைவடைகிறது. காலியாகும் மாநிலங்களவை உறுப்பினருக்கான பதவியிடங்களை நிரப்பும் வகையில் வருகிற ஜூன் மாதம் 19 ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. அதுத்தொடர்பான விவரங்கள் பின்வருமாறு-
ஓய்வு பெறும் உறுப்பினர்கள் விவரம்:
அசாம்: (2 இடங்கள்) (பதவிக்காலம் முடியும் தேதி: 14.06.2025)
1. மிஷன் ரஞ்சன் தாஸ்
2. பீரேன்ட்ரா பிரசாத் பைஸ்யா
தமிழ்நாடு: (6 இடங்கள்) (பதவிக்காலம் முடியும் தேதி: 24.07.2025)
1. டாக்டர் அன்புமணி ராமதாஸ்
2. எம்.சண்முகம்
3. எம்.சந்திரசேகரன்
4. எம்.முகமது அப்துல்லா
5. பி.வில்சன்
6. வைகோ
தேர்தல் அட்டவணை விவரங்கள்:
தேர்தல் தொடர்பான அறிவிக்கை வெளியிடுதல்: ஜூன் 02, 2025 (திங்கட்கிழமை)
வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி: ஜூன் 09, 2025 (திங்கட்கிழமை)
வேட்புமனுக்களை ஆய்வு செய்தல்: ஜூன் 10, 2025 (செவ்வாய்க்கிழமை)
வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான கடைசி தேதி: ஜூன் 12, 2025 (வியாழக்கிழமை)
வாக்குப்பதிவு தேதி: ஜூன் 19, 2025 (வியாழக்கிழமை)
வாக்குப்பதிவு நேரம்: காலை 09:00 மணி முதல் மாலை 04:00 மணி வரை
வாக்கு எண்ணிக்கை: ஜூன் 19, 2025 (வியாழக்கிழமை) மாலை 05:00 மணிக்கு
தேர்தல் செயல்முறைகள் நிறைவடையும் தேதி: ஜூன் 23, 2025 (திங்கட்கிழமை)
சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் பணி நீட்டிப்பு காலத்தில் இருப்பதால், தமிழ்நாடு சட்டப்பேரவையின் கூடுதல் செயலாளர் சுப்பிரமணியன் மாநிலங்களவை தேர்தலுக்கான தேர்தல் நடத்தும் அதிகாரியாக இருப்பார் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.