அரசியல்

மாநிலங்களவை தேர்தல்: அதிமுக-திமுக வேட்பாளர்கள் நாளை வேட்பு மனு தாக்கல்!

தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் நாளை வேட்பு மனு தாக்கல் செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதே நேரத்தில், திமுக வேட்பாளர்களும் நாளை வேட்புமனுத்தாக்கல் செய்வார்கள என்று தகவல் வெளியாகியுள்ளது.

மாநிலங்களவை தேர்தல்: அதிமுக-திமுக வேட்பாளர்கள் நாளை வேட்பு மனு தாக்கல்!
மாநிலங்களவை தேர்தல்: அதிமுக-திமுக வேட்பாளர்கள் நாளை வேட்பு மனு தாக்கல்!
மாநிலங்களவை தேர்தல் சூழலில், தமிழகத்தில் முக்கிய அரசியல் கட்சிகள் வேட்புமனு தாக்கல் செய்யும் நடவடிக்கையை முழு வீச்சில் மேற்கொண்டு வருகின்றன. அதிமுக மற்றும் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் நாளை (ஜூன் 6) சென்னையில் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்ய உள்ளனர்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று அதிமுக தலைமை கழக நிர்வாகிகள், எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், இன்பதுரை மற்றும் தனபால் ஆகியோர் மாநிலங்களவை தேர்தல் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், இன்பதுரை, தனபால் ஆகியோர் நாளை சென்னையில் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் வேட்புமனு தாக்கல் செய்கின்றனர். அப்போது, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னணி கட்சி தலைவர் பங்கேற்க திட்டமிட்டுள்ளனர்.

மற்றொரு பக்கம், திமுக சார்பில், அதேபோல், திமுக வேட்பாளர்கள் வில்சன், எஸ்.ஆர்.சிவலிங்கம், கவிஞர் சல்மா மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்த கமல்ஹாசன் ஆகிய 4 பேரும் நாளை வேட்புனு தாக்கல் செய்வார்கள் என தகவல் வெளியாகி உள்ளது.

மாநிலங்களவை தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழ்நிலை பரபரப்பாக மாறி வருகிறது. இரு பெரிய கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை அறிவித்து, தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், வேட்பு மனுத் தாக்கல் நிகழ்வுகள் நாளை காலை சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.