அரசியல்

2026ல் திமுகவை வீட்டிற்கு அனுப்புவதே குறிக்கோள் – அண்ணாமலை

4 ஆண்டு கால திமுக ஆட்சியில் தமிழக மக்கள் நிம்மதியாக இல்லை என அண்ணாமலை தெரிவித்தார்.

2026ல் திமுகவை வீட்டிற்கு அனுப்புவதே குறிக்கோள் – அண்ணாமலை
பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை
மதுரை ஒத்தக்கடை பகுதியில் உள்ள தனியார் திடலில் பாஜக கட்சி சார்பில் தமிழ்நாடு மாநில, மாவட்ட மற்றும் மண்டல நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் மாலை 4.00 மணி முதல் 5.30 மணி வரை நடைபெற்றது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் தமிழகத்தில் நடைபெற உள்ள 2026 சட்டமன்றத்தேர்தலுக்கான முக்கிய கூட்டமாக இந்த கூட்டம் அமைந்துள்ளது.இந்த கூட்டத்தில் பங்கேற்க தமிழகம் முழுவதும் உள்ள பாஜக நிர்வாகிகள் அனைவரும் வருகை தந்தனர். கூட்டம் நடைபெறும் இடம் முழுவதும் காவல்துறை சார்பில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

நக்சல் இல்லாத நாடு

கூட்டத்தில் வருகை தரும் நிர்வாகிகளின் குறிப்பேடுகள் எடுக்கப்பட்ட பின், அவர்களுக்கான அடையாள அட்டை வழங்கப்பட்ட பின்னரே காவல்துறையினரின் நீண்ட சோதனைக்குப் பின் கூட்டம் நடைபெறும் இடத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இக்கூட்டத்தில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழிசை சௌந்தரராஜன், அண்ணாமலை, எச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் ஆகியோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் தலைவர்கள் உரையாற்றினர்.பின்னர் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை பேச வந்ததும் கூட்டம் முழுவதும் ஆரவாரம் செய்தனர்.தொண்டர்களை பார்த்து அமைதியாக இருக்குமாறு அண்ணாமலை சைகையை காட்டினார். பின்னர் பேசிய அண்ணாமலை, “காங்கிரஸ் ஆட்சியில் வறுமை வைத்து தான் அரசியல் செய்ய முடிந்தது. வறுமையில் இருந்தவர்களை மீட்ட ஆட்சி பாஜக. 11 ஆண்டுகளில் வறுமையின் பிடியில் இருந்து மக்களை முன்னேற்றிய ஆட்சி பாஜக அரசின் திட்டத்தில் தான். நக்சல் இல்லாத நாடாக இந்தியாவை மாற்றியுள்ளோம்.

திமுகவை வீட்டிற்கு அனுப்புவதே இலக்கு


தமிழகத்தில் மக்கள் நிம்மதியாக இல்லை. பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நிலை உள்ளது. சார்கள் உலவிக்கொண்டிருக்கும் போது பெண்களுக்கு எப்படி பாதுகாப்பு இருக்கும். சினிமா படம் தயாரிக்கக்கூடிய தம்பிகள் உலவிக்கொண்டிருக்கும் போது மக்களுக்கு எப்படி நிம்மதியாக இருக்கும். மத்திய அரசின் திட்டங்கள் மீது ஸ்டிக்கர் ஒட்டி 4 ஆண்டுகள் ஆட்சியை திமுக நடத்தி உள்ளது. ஒரு மதத்தை சார்ந்த மக்களை மட்டும் தொடர்ந்து கொச்சைப்படுத்துவதை முழு நேர வேலையாக திமுக கொண்டுள்ளது.

தமிழகத்தில் கொங்கு பகுதிகளில் முதியோர்களை குறித்து கொள்கிறார்கள், இப்படி இருந்தால் மக்கள் எப்படி நிம்மதியாக இருப்பார்கள். தென் மாவட்டங்களில் சாதியாலும், சென்னையில் கூலிப்படையாலும் கொள்ளப்படுகிறார்கள். தமிழகத்தில் 4 ஆண்டுகால திமுக ஆட்சியில் மக்கள் நிம்மதியாக இல்லை. ஆகையால் 2026ல் திமுகவை வீட்டிற்கு அனுப்புவதே ஒற்றை இலக்கு” என பேசினார். இதைத்தொடர்ந்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் பேசினர்.