நாடாளுமன்ற மாநிலங்களவையில் தமிழக எம்.பி-க்கள் 6 பேரின் பதவிக்காலம் வரும் ஜூலை மாதத்துடன் நிறைவடைய உள்ளதால், அந்த பதவிக்கு யாரெல்லாம் வரப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. 6 சீட்டில் 4 திமுக வசமும், 2 அதிமுக வசமும் உள்ளது.
இந்த நிலையில், தன்னிடம் உள்ள 4 சீட்களுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது திமுக. ஏற்கனவே ராஜ்யசபா எம்.பி ஆக உள்ள வழக்கறிஞர் வில்சனுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு சீட் என்று நாடாளுமன்ற தேர்தலின்போது உடன்பாடு கையெழுத்தாகி இருந்ததால் அது தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது.
மீதமுள்ள இரண்டு இடங்கள், சேலம் மாவட்டச் செயலாளரான சிவலிங்கத்திற்கும், எழுத்தாளர் சல்மாவிற்கும் வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரின் பெயர் இந்த லிஸ்டில் இடம்பெற்றது திமுகவினருக்கே சர்ப்ரைஸ். காரணம், இவர்கள் இருவரின் பெயரும் உத்தேச பட்டியலில் கூட இடம்பெறவில்லை என்று சொல்லப்படுகிறது.
இத்தகையச் சூழலில், சேலத்தைச் சேர்ந்த திமுக மாவட்ட்டச் செயலாளரான சிவலிங்கத்திற்கு ராஜ்யசபா எம்.பி சீட் கொடுத்துள்ளது சட்டமன்றத் தேர்தலுக்கான மூவாக பார்க்கப்படுகிறது. காரணம், 2026 சட்டமன்றத் தேர்தலுக்காக தயாராகி வரும் திமுக, கொங்கு மண்டலத்தை எப்படியாவது கைப்பற்றிவிட வேண்டும் என்று தீவிரமாக வேலை செய்து வருகிறதாம்.
அதனால், இப்போதே செந்தில்பாலாஜியை மண்டல பொறுப்பாளராக அறிவித்து தேர்தலுக்கான பணிகளை முடுக்கிவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக கடந்த சட்டமன்றத் தேர்தலில், எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில் உள்ள 10 தொகுதிகளில் ஒன்றில் மட்டுமே திமுகவால் வெற்றி பெற முடிந்திருந்தது. இதனால் சேலத்தை எப்படியாவது கைப்பற்றும் நோக்கில் அதில் வெற்றி பெற்றிருந்த ஒரே ஒரு எம்.எல்.ஏவான பனமரத்துப்பட்டி ராஜேந்திரனை அமைச்சராக்கியது திமுக. இருந்தாலும் சேலத்தில் திமுகவிற்கு சவால்கள் அதிகமாகவே உள்ளதாகக் கூறப்படுகிறது.
தனித்தனியாக இருந்த அதிமுக மற்றும் பாஜக, தற்போது மீண்டும் ஒன்றிணைந்துள்ளதால் கொங்குவை கைப்பற்றுவது திமுகவிற்கு சிக்கலாகவே மாறியுள்ளதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். அதனால், கொங்கு மண்டலத்தின் பொறுப்பாளராக உள்ள செந்தில்பாலாஜி கொடுத்த ஆலோசனையின்படி சேலத்தில் செல்வாக்குடைய முன்னாள் எம்.எல்.ஏவும் தற்போதைய மாவட்டச் செயலாளருமான சிவலிங்கத்தை எம்.பி ஆக்கியுள்ளதாக அறிவாலயவட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அது மட்டுமல்லாமல், மற்றொரு மூவ்வை திமுக எடுக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. அதாவது, எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்து சேலம் மாவட்டம் அதிமுகவுக்கு சாதகமான ஒன்றாக இருப்பதாலும், இது எடப்பாடியின் சொந்த மாவட்டமாக உள்ளதாலும் அதிமுகவிற்கு இங்கு செல்வாக்கு குறையாமல் இருப்பதாகக் கூறப்படுகிறது.
சேலம் புறநகர் மாவட்டச் செயலாளரான இளங்கோவன் மூலம் புறநகரில் அதிமுகவை ஆக்டிவாக வைத்துள்ள எடப்பாடியார், சேலத்தில் உள்ள 10 தொகுதியையும் தட்டித் தூக்கிவிடுவோம் என்று மனக் கணக்கு போட்டு வருகிறாராம். காரணம் கடந்த முறையும் சேலத்தின் 10 தொகுதிகளில் 9ல் அதிமுக கூட்டணியே வென்றது.
இந்த சூழலில், எடப்பாடியாரின் மனக்கணக்கை எப்படியாவது தகர்க்க வேண்டும் என்று நினைக்கிற திமுக தலைமை, சேலம் திமுகவை பல மாவட்டங்களாக பிரித்து புதியவர்களுக்கு பொறுப்பைக் கொடுக்க நினைத்ததாம். ஆனால், தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே உள்ள நிலையில், புதியவர்களை நியமித்து, அவர்கள் தொகுதி மக்களிடையே சென்று சேர்வதற்கு என காலங்கள் எடுக்கும் என்பதால் அம்முடிவில் இருந்து தலைமை பின்வாங்கியதாகக் கூறப்படுகிறது. அதனால், இருப்பவர்களுக்கு அந்தஸ்தைக் கொடுத்து அதன் மூலம் கட்சியை பலப்படுத்திக் கொண்டிருக்கிறதாம்.
ஆனால், அதுமட்டும் போதாது... வேறு ஏதாவது செய்ய வேண்டும் என்று செந்தில் பாலாஜிக்கு அறிவுறுத்திய திமுக தலைமை, அதிமுக மாஜி ஒருவரை எடப்பாடிக்கு எதிராக சேலத்தில் களமிறக்க உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அவன் பொருளை எடுத்து அவனையே போடனும் என்ற சினிமா பட டயலாக்கை போல, வரும் தேர்தலில் எடப்பாடியார் நிற்கும் தொகுதியில் அவருக்கு சரியான போட்டியைக் கொடுத்தால், அத்தொகுதியைவிட்டு வேறெங்கும் அவரால் கவனம் செலுத்த முடியாது என்று நினைக்கும் திமுக, எடப்பாடிக்கு எதிராக முன்னாள் அதிமுககாரரான செல்வ கணபதியை நிறுத்தி டஃப் கொடுக்க நினைக்கிறதாம்.
செல்வகணபதியை பொறுத்தவரை, அவர் முன்னாள் அதிமுககாரர் என்பதால் பழனிசாமிக்கு எதிராக அவரை நிறுத்தினால் அதிமுக விசுவாசிகளும் அவருக்கு ஓட்டு போட வாய்ப்புகள் உள்ளதாகவே கூறப்படுகிறது. ஆனால், செல்வகணபதிக்கு வாய்ப்புக் கொடுக்க முடிவெடுத்தால் அதற்கு சிவலிங்கம் தடையாக வந்துவிடக் கூடாது என்று, சிவலிங்கத்தை ராஜ்யசபா எம்.பி. ஆக்கியுள்ளதாம் திமுக தலைமை என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.
இந்த நிலையில், தன்னிடம் உள்ள 4 சீட்களுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது திமுக. ஏற்கனவே ராஜ்யசபா எம்.பி ஆக உள்ள வழக்கறிஞர் வில்சனுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு சீட் என்று நாடாளுமன்ற தேர்தலின்போது உடன்பாடு கையெழுத்தாகி இருந்ததால் அது தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது.
மீதமுள்ள இரண்டு இடங்கள், சேலம் மாவட்டச் செயலாளரான சிவலிங்கத்திற்கும், எழுத்தாளர் சல்மாவிற்கும் வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரின் பெயர் இந்த லிஸ்டில் இடம்பெற்றது திமுகவினருக்கே சர்ப்ரைஸ். காரணம், இவர்கள் இருவரின் பெயரும் உத்தேச பட்டியலில் கூட இடம்பெறவில்லை என்று சொல்லப்படுகிறது.
இத்தகையச் சூழலில், சேலத்தைச் சேர்ந்த திமுக மாவட்ட்டச் செயலாளரான சிவலிங்கத்திற்கு ராஜ்யசபா எம்.பி சீட் கொடுத்துள்ளது சட்டமன்றத் தேர்தலுக்கான மூவாக பார்க்கப்படுகிறது. காரணம், 2026 சட்டமன்றத் தேர்தலுக்காக தயாராகி வரும் திமுக, கொங்கு மண்டலத்தை எப்படியாவது கைப்பற்றிவிட வேண்டும் என்று தீவிரமாக வேலை செய்து வருகிறதாம்.
அதனால், இப்போதே செந்தில்பாலாஜியை மண்டல பொறுப்பாளராக அறிவித்து தேர்தலுக்கான பணிகளை முடுக்கிவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக கடந்த சட்டமன்றத் தேர்தலில், எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில் உள்ள 10 தொகுதிகளில் ஒன்றில் மட்டுமே திமுகவால் வெற்றி பெற முடிந்திருந்தது. இதனால் சேலத்தை எப்படியாவது கைப்பற்றும் நோக்கில் அதில் வெற்றி பெற்றிருந்த ஒரே ஒரு எம்.எல்.ஏவான பனமரத்துப்பட்டி ராஜேந்திரனை அமைச்சராக்கியது திமுக. இருந்தாலும் சேலத்தில் திமுகவிற்கு சவால்கள் அதிகமாகவே உள்ளதாகக் கூறப்படுகிறது.
தனித்தனியாக இருந்த அதிமுக மற்றும் பாஜக, தற்போது மீண்டும் ஒன்றிணைந்துள்ளதால் கொங்குவை கைப்பற்றுவது திமுகவிற்கு சிக்கலாகவே மாறியுள்ளதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். அதனால், கொங்கு மண்டலத்தின் பொறுப்பாளராக உள்ள செந்தில்பாலாஜி கொடுத்த ஆலோசனையின்படி சேலத்தில் செல்வாக்குடைய முன்னாள் எம்.எல்.ஏவும் தற்போதைய மாவட்டச் செயலாளருமான சிவலிங்கத்தை எம்.பி ஆக்கியுள்ளதாக அறிவாலயவட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அது மட்டுமல்லாமல், மற்றொரு மூவ்வை திமுக எடுக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. அதாவது, எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்து சேலம் மாவட்டம் அதிமுகவுக்கு சாதகமான ஒன்றாக இருப்பதாலும், இது எடப்பாடியின் சொந்த மாவட்டமாக உள்ளதாலும் அதிமுகவிற்கு இங்கு செல்வாக்கு குறையாமல் இருப்பதாகக் கூறப்படுகிறது.
சேலம் புறநகர் மாவட்டச் செயலாளரான இளங்கோவன் மூலம் புறநகரில் அதிமுகவை ஆக்டிவாக வைத்துள்ள எடப்பாடியார், சேலத்தில் உள்ள 10 தொகுதியையும் தட்டித் தூக்கிவிடுவோம் என்று மனக் கணக்கு போட்டு வருகிறாராம். காரணம் கடந்த முறையும் சேலத்தின் 10 தொகுதிகளில் 9ல் அதிமுக கூட்டணியே வென்றது.
இந்த சூழலில், எடப்பாடியாரின் மனக்கணக்கை எப்படியாவது தகர்க்க வேண்டும் என்று நினைக்கிற திமுக தலைமை, சேலம் திமுகவை பல மாவட்டங்களாக பிரித்து புதியவர்களுக்கு பொறுப்பைக் கொடுக்க நினைத்ததாம். ஆனால், தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே உள்ள நிலையில், புதியவர்களை நியமித்து, அவர்கள் தொகுதி மக்களிடையே சென்று சேர்வதற்கு என காலங்கள் எடுக்கும் என்பதால் அம்முடிவில் இருந்து தலைமை பின்வாங்கியதாகக் கூறப்படுகிறது. அதனால், இருப்பவர்களுக்கு அந்தஸ்தைக் கொடுத்து அதன் மூலம் கட்சியை பலப்படுத்திக் கொண்டிருக்கிறதாம்.
ஆனால், அதுமட்டும் போதாது... வேறு ஏதாவது செய்ய வேண்டும் என்று செந்தில் பாலாஜிக்கு அறிவுறுத்திய திமுக தலைமை, அதிமுக மாஜி ஒருவரை எடப்பாடிக்கு எதிராக சேலத்தில் களமிறக்க உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அவன் பொருளை எடுத்து அவனையே போடனும் என்ற சினிமா பட டயலாக்கை போல, வரும் தேர்தலில் எடப்பாடியார் நிற்கும் தொகுதியில் அவருக்கு சரியான போட்டியைக் கொடுத்தால், அத்தொகுதியைவிட்டு வேறெங்கும் அவரால் கவனம் செலுத்த முடியாது என்று நினைக்கும் திமுக, எடப்பாடிக்கு எதிராக முன்னாள் அதிமுககாரரான செல்வ கணபதியை நிறுத்தி டஃப் கொடுக்க நினைக்கிறதாம்.
செல்வகணபதியை பொறுத்தவரை, அவர் முன்னாள் அதிமுககாரர் என்பதால் பழனிசாமிக்கு எதிராக அவரை நிறுத்தினால் அதிமுக விசுவாசிகளும் அவருக்கு ஓட்டு போட வாய்ப்புகள் உள்ளதாகவே கூறப்படுகிறது. ஆனால், செல்வகணபதிக்கு வாய்ப்புக் கொடுக்க முடிவெடுத்தால் அதற்கு சிவலிங்கம் தடையாக வந்துவிடக் கூடாது என்று, சிவலிங்கத்தை ராஜ்யசபா எம்.பி. ஆக்கியுள்ளதாம் திமுக தலைமை என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.