அரசியல்

விஜய் போட்ட உத்தரவு...கோவையில் நடந்த தவெக கூட்டம்...கள ஆய்வு செய்த புஸ்ஸி ஆனந்த்

ஒரு நாளுக்கு 8,000 வீதம் கலந்து கொள்ள உள்ளனர்.

விஜய் போட்ட உத்தரவு...கோவையில் நடந்த தவெக கூட்டம்...கள ஆய்வு செய்த புஸ்ஸி ஆனந்த்
தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்
தவெக கூட்டம்

கோவை, சரவணம்பட்டி அடுத்த குரும்பபாளையம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் வருகிற 26 மற்றும் 27ஆம் தேதி தமிழக வெற்றி கழகத்தின் பூத் கமிட்டி முகவர்கள் கூட்டம் நடைபெறுகிறது. கல்லூரி வளாகத்தில் அமைக்கப்படும் கூட்ட அரங்கம் பணிகளை இன்று காலை பூஜை செய்து தொடங்கி வைத்தனர். தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து அங்கு நடைபெறும் பணிகளை ஆய்வு செய்தார்.

பின்னர் இந்தக் கருத்தரங்கிற்கான ஏற்பாடுகள் குறித்து மாவட்ட தலைவர் சம்பத் செய்தியாளர்களிடம் பேசுகையில், “தமிழக வெற்றி கழகத்தின் மண்டல வாரியாக நடக்கக் கூடிய, வாக்குச்சாவடி முகவர்களின், கருத்தரங்கம் வருகிற 26 மற்றும் 27ஆம் தேதி கோவை மண்டலத்தில் நடைபெறுகிறது. 26ஆம் தேதி ஈரோடு, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த பூத் கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.

ஆலோசனைக்கூட்டம்

27 ஆம் தேதி கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த பூத் கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள். இதற்கு உண்டான பணிகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. மாலை 3 மணிக்கு ஆரம்பிக்கக் கூடிய நிகழ்ச்சி, 7.30க்கு நிறைவடையும். ஒரு நாளுக்கு 8,000 வீதம் கலந்து கொள்ள உள்ளனர். கல்லூரி வளாகம் என்பதால் கருத்தரங்கிற்கான நிகழ்ச்சி மட்டுமே இன்று நடைபெறுகிறது. பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் மட்டுமே நடைபெறுகிறது” என்று கூறினார்.