சென்னை, தேனாம்பேட்டை, டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள 108 சேவை மையத்தில் பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள நீட் தேர்வு எழுதிய மாணவ, மாணவியர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கும் திட்டத்தினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்து ஆய்வு மேற்கொண்டார்.
தொலைபேசி மருத்துவ உதவி தகவல் மையத்திற்கு சென்று ஆய்வு செய்த அமைச்சர் நீட் தேர்வில், தோல்வியடைந்த மதுரையைச் சேர்ந்த மாணவிக்கு ஆலோசனை வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது,
நீட் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டதாகவும், கடந்த நான்கு ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வில் பங்கேற்று தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவத்திற்கு இடம் கிடைக்காத மாணவர்களுக்கும் மனநல ஆலோசனைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது என்று கூறினார். கடந்தாண்டு 12 வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கும் மனநல ஆலோசனை வழங்கப்பட்டது அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், நம் மாணவர்களின் எதிர்கால கல்விக்கு என்னவெல்லாம் உதவி தேவைப்படுகிறதோ எதைப் படிக்க வாய்ப்புகள் இருக்கிறது என்ற விளக்கத்தையும் தொடர்ந்து வழங்கி வருகிறோம். இந்தாண்டு தமிழ்நாட்டில் நீட் தேர்வு எழுதிய 1,35,715 மாணவர்களில், தேர்ச்சி பெற்றவர்கள் 76,181 மற்றும் தேர்ச்சி பெறாதவர்கள் 59,534 பேர் என்றும் முதற்கட்டமாக 80 மனநல ஆலோசகர்கள் இரண்டு ஷிப்டுகளாக ஆலோசனை வழங்குகிறார்கள். இந்த திட்டம் இன்று தொடங்கப்பட்டுள்ளது என கூறிய அவர், காலையில் இருந்து 600-க்கும் மேற்பட்டவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாக கூறினார்.
நீட் தேர்வில் தேர்ச்சி பெறாதவராக இருந்தாலும், அடுத்தடுத்த வாய்ப்புகள் இருக்கிறது, எனவே மனம் தளராமல் படிப்பை தொடர அறிவுறுத்தப்படுகிறது, அதேபோல் பெற்றோர்களுக்கும் அறிவுறுத்தல்கள் சொல்லப்படுகிறது என்றும் தேர்வில் தேர்ச்சி பெறாத 59,534 பேர் இலக்கு என்ற பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக இருக்கக்கூடிய 75 அரசு தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இளங்கலை படிப்புகளில் படிக்கும் வாய்ப்பு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற 76,181 பேரில் 11,850 பேருக்கு தான் உள்ளது. மாணவர்கள் தனிமையில் இருக்கக் கூடாது, மற்றவர்களிடம் இருந்து விலகி இருக்கக்கூடாது தினமும் கடைபிடிக்கும் பழக்க வழக்கங்களை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தல் வழங்கப்படுகிறது என குறிப்பிட்டார்.
எம்.பி.பி.எஸ் படிப்பை தொடர்ந்து வெவ்வேறு வாய்ப்புகளும் இருக்கிறது என மாணவர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. குறிப்பாக பல் மருத்துவம், நர்சிங் என பல படிப்புகளில் சேர்வதற்கான வாய்ப்பு உள்ளது. மேலும் மருத்துவத்துறையிலேயே இந்திய மெடிசன் என சொல்லக்கூடிய சித்தா, ஆயுர்வேதம், யுனானி , ஓமியோபதி போன்ற படிப்புகளிலும் நீங்கள் தொடரலாம் என்கின்ற வகையில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டு வருகிறது.
கோயம்புத்தூர் மாணவி ஒருவருக்கு மதிப்பெண் குறைவாக வந்திருப்பதாக குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், தேசிய தேர்வு முகமைக்கு சுகாதாரத் துறை செயலாளர் மூலம் கடிதம் எழுத உள்ளதாக கூறினார்.
மேலும், தற்பொழுது மதுரையைச் சேர்ந்த ஒரு மாணவியரிடம் பேசினேன், அவர் சுமை எதுவும் இல்லை என்றார். நீட் தேர்வு என்பது மாணவர்களுக்கு ஒரு சுமை தான். நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாட்டில் சட்டப் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நேற்று வரை இளங்கலை எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புக்கு 32 ஆயிரம் மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
தொலைபேசி மருத்துவ உதவி தகவல் மையத்திற்கு சென்று ஆய்வு செய்த அமைச்சர் நீட் தேர்வில், தோல்வியடைந்த மதுரையைச் சேர்ந்த மாணவிக்கு ஆலோசனை வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது,
நீட் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டதாகவும், கடந்த நான்கு ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வில் பங்கேற்று தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவத்திற்கு இடம் கிடைக்காத மாணவர்களுக்கும் மனநல ஆலோசனைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது என்று கூறினார். கடந்தாண்டு 12 வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கும் மனநல ஆலோசனை வழங்கப்பட்டது அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், நம் மாணவர்களின் எதிர்கால கல்விக்கு என்னவெல்லாம் உதவி தேவைப்படுகிறதோ எதைப் படிக்க வாய்ப்புகள் இருக்கிறது என்ற விளக்கத்தையும் தொடர்ந்து வழங்கி வருகிறோம். இந்தாண்டு தமிழ்நாட்டில் நீட் தேர்வு எழுதிய 1,35,715 மாணவர்களில், தேர்ச்சி பெற்றவர்கள் 76,181 மற்றும் தேர்ச்சி பெறாதவர்கள் 59,534 பேர் என்றும் முதற்கட்டமாக 80 மனநல ஆலோசகர்கள் இரண்டு ஷிப்டுகளாக ஆலோசனை வழங்குகிறார்கள். இந்த திட்டம் இன்று தொடங்கப்பட்டுள்ளது என கூறிய அவர், காலையில் இருந்து 600-க்கும் மேற்பட்டவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாக கூறினார்.
நீட் தேர்வில் தேர்ச்சி பெறாதவராக இருந்தாலும், அடுத்தடுத்த வாய்ப்புகள் இருக்கிறது, எனவே மனம் தளராமல் படிப்பை தொடர அறிவுறுத்தப்படுகிறது, அதேபோல் பெற்றோர்களுக்கும் அறிவுறுத்தல்கள் சொல்லப்படுகிறது என்றும் தேர்வில் தேர்ச்சி பெறாத 59,534 பேர் இலக்கு என்ற பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக இருக்கக்கூடிய 75 அரசு தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இளங்கலை படிப்புகளில் படிக்கும் வாய்ப்பு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற 76,181 பேரில் 11,850 பேருக்கு தான் உள்ளது. மாணவர்கள் தனிமையில் இருக்கக் கூடாது, மற்றவர்களிடம் இருந்து விலகி இருக்கக்கூடாது தினமும் கடைபிடிக்கும் பழக்க வழக்கங்களை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தல் வழங்கப்படுகிறது என குறிப்பிட்டார்.
எம்.பி.பி.எஸ் படிப்பை தொடர்ந்து வெவ்வேறு வாய்ப்புகளும் இருக்கிறது என மாணவர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. குறிப்பாக பல் மருத்துவம், நர்சிங் என பல படிப்புகளில் சேர்வதற்கான வாய்ப்பு உள்ளது. மேலும் மருத்துவத்துறையிலேயே இந்திய மெடிசன் என சொல்லக்கூடிய சித்தா, ஆயுர்வேதம், யுனானி , ஓமியோபதி போன்ற படிப்புகளிலும் நீங்கள் தொடரலாம் என்கின்ற வகையில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டு வருகிறது.
கோயம்புத்தூர் மாணவி ஒருவருக்கு மதிப்பெண் குறைவாக வந்திருப்பதாக குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், தேசிய தேர்வு முகமைக்கு சுகாதாரத் துறை செயலாளர் மூலம் கடிதம் எழுத உள்ளதாக கூறினார்.
மேலும், தற்பொழுது மதுரையைச் சேர்ந்த ஒரு மாணவியரிடம் பேசினேன், அவர் சுமை எதுவும் இல்லை என்றார். நீட் தேர்வு என்பது மாணவர்களுக்கு ஒரு சுமை தான். நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாட்டில் சட்டப் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நேற்று வரை இளங்கலை எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புக்கு 32 ஆயிரம் மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.