பாஜக சார்பில் தமிழ்நாடு அளவிலான நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதிக் பலத்த சோதனைக்கு பிறகே நிர்வாகிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
பாஜக நிர்வாகிகள் கூட்டம்
மதுரை ஒத்தக்கடை பகுதியில் உள்ள தனியார் திடலில் பாஜக கட்சி சார்பில் தமிழ்நாடு மாநில, மாவட்ட மற்றும் மண்டல நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் சரியாக மாலை 4.00 மணி முதல் 5.30 மணி வரை நடைபெற உள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெற உள்ள இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகத்தில் நடைபெற உள்ள 2026 சட்டமன்றதேர்தலுக்கான முக்கிய கூட்டமாக இந்த கூட்டம் அமைய உள்ளது.
இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழகம் முழுவதும் உள்ள பாஜக நிர்வாகிகள் அனைவரும் வருகை தந்த வண்ணமே உள்ளனர். கூட்டம் நடைபெறும் இடம் முழுவதும் காவல்துறை சார்பில் பலத்த போலீஸ் பாதுகாப்புகள் போடப்பட்டுள்ளது.
பலத்த சோதனை
கூட்டத்தில் வருகை தரும் நிர்வாகிகளின் குறிப்பேடுகள் எடுக்கப்பட்ட பின், அவர்களுக்கான அடையாள அட்டை வழங்கப்பட்ட பின்னரே காவல்துறையினரின் நீண்ட சோதனைக்குப் பின் கூட்டம் நடைபெறும் இடத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
தமிழகத்தில் உள்ள மாநில மற்றும் மாவட்ட, மண்டல நிர்வாகிகள் அனைவரும் வருகை தந்த வண்ணம் உள்ளனர். அமித்ஷா தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் நிர்வாகிகளுக்கு முக்கிய ஆலோசனை வழங்க உள்ளதாக கூறப்படுகிறது. இக்கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழிசை சௌந்தரராஜன், அண்ணாமலை, எச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
பாஜக நிர்வாகிகள் கூட்டம்
மதுரை ஒத்தக்கடை பகுதியில் உள்ள தனியார் திடலில் பாஜக கட்சி சார்பில் தமிழ்நாடு மாநில, மாவட்ட மற்றும் மண்டல நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் சரியாக மாலை 4.00 மணி முதல் 5.30 மணி வரை நடைபெற உள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெற உள்ள இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகத்தில் நடைபெற உள்ள 2026 சட்டமன்றதேர்தலுக்கான முக்கிய கூட்டமாக இந்த கூட்டம் அமைய உள்ளது.
இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழகம் முழுவதும் உள்ள பாஜக நிர்வாகிகள் அனைவரும் வருகை தந்த வண்ணமே உள்ளனர். கூட்டம் நடைபெறும் இடம் முழுவதும் காவல்துறை சார்பில் பலத்த போலீஸ் பாதுகாப்புகள் போடப்பட்டுள்ளது.
பலத்த சோதனை
கூட்டத்தில் வருகை தரும் நிர்வாகிகளின் குறிப்பேடுகள் எடுக்கப்பட்ட பின், அவர்களுக்கான அடையாள அட்டை வழங்கப்பட்ட பின்னரே காவல்துறையினரின் நீண்ட சோதனைக்குப் பின் கூட்டம் நடைபெறும் இடத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
தமிழகத்தில் உள்ள மாநில மற்றும் மாவட்ட, மண்டல நிர்வாகிகள் அனைவரும் வருகை தந்த வண்ணம் உள்ளனர். அமித்ஷா தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் நிர்வாகிகளுக்கு முக்கிய ஆலோசனை வழங்க உள்ளதாக கூறப்படுகிறது. இக்கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழிசை சௌந்தரராஜன், அண்ணாமலை, எச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.