சாதிவாரி கணக்கெடுப்புடன் கூடிய மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027, மார்ச் 1-ம் தேதி தொடங்கும் என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. பனி பிரதேசங்களான ஹிமாசல், உத்தரகண்ட் மாநிலங்கள் மற்றும் ஜம்மு - காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்களில் வரும் 2026 ஆம் ஆண்டு அக்டோபர் ஒன்றாம் தேதி தொடங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், 2026-ம் ஆண்டுக்குப் பிறகு நடத்தும் முதல் மக்கள் தொகைக் கணக்கெடுப்பைத் தொடர்ந்து, தொகுதி மறுவரையறை செய்ய வேண்டும் என அரசியலமைப்புச் சட்டம் கூறுவதாக தெரிவித்துள்ளார்.
மக்கள்தொகைக் கணக்கெடுப்பை 2027-ம் ஆண்டுக்கு ஒத்திவைத்து, நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் சதித்திட்டத்தை பா.ஜ.க. வெளிப்படையாக அறிவித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
தொகுதி மறுவரையறை ஆபத்து குறித்து முன்பே தான் எச்சரித்திருந்ததாகவும், பாஜகவுடன் கூட்டு சேர்ந்துள்ளதன் மூலம், எடப்பாடி பழனிசாமி இந்தச் சதித்திட்டம் பற்றிப் பேசாமல் அமைதி காப்பதோடு, இந்தத் துரோகத்துக்குத் துணைபோகிறவராகவும் இருப்பதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளாட்டியுள்ளார்.
மேலும், நியாயமான தொகுதி மறுவரையறை எனும் கோரிக்கையில் தமிழ்நாட்டு மக்கள் ஒன்றுபட்டு நிற்பதாகவும், மத்திய அரசு தங்களுக்குத் தெளிவான விளக்கத்தை அளிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், 2026-ம் ஆண்டுக்குப் பிறகு நடத்தும் முதல் மக்கள் தொகைக் கணக்கெடுப்பைத் தொடர்ந்து, தொகுதி மறுவரையறை செய்ய வேண்டும் என அரசியலமைப்புச் சட்டம் கூறுவதாக தெரிவித்துள்ளார்.
மக்கள்தொகைக் கணக்கெடுப்பை 2027-ம் ஆண்டுக்கு ஒத்திவைத்து, நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் சதித்திட்டத்தை பா.ஜ.க. வெளிப்படையாக அறிவித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
தொகுதி மறுவரையறை ஆபத்து குறித்து முன்பே தான் எச்சரித்திருந்ததாகவும், பாஜகவுடன் கூட்டு சேர்ந்துள்ளதன் மூலம், எடப்பாடி பழனிசாமி இந்தச் சதித்திட்டம் பற்றிப் பேசாமல் அமைதி காப்பதோடு, இந்தத் துரோகத்துக்குத் துணைபோகிறவராகவும் இருப்பதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளாட்டியுள்ளார்.
மேலும், நியாயமான தொகுதி மறுவரையறை எனும் கோரிக்கையில் தமிழ்நாட்டு மக்கள் ஒன்றுபட்டு நிற்பதாகவும், மத்திய அரசு தங்களுக்குத் தெளிவான விளக்கத்தை அளிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.