தமிழ்நாடு

கழிவுநீர் அருகே பச்சிளம் குழந்தையின் உடல்... தொப்புள் கொடி கூட அறுக்கப்படாததால் அதிர்ச்சி

திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்திற்குள் தேங்கி நிற்கும் கழிவுநீர் அருகே தொப்புள் கொடி கூட அறுபடாத நிலையில் இறந்த நிலையில் பச்சிளம் குழந்தை கண்டடுப்பு

கழிவுநீர் அருகே பச்சிளம் குழந்தையின் உடல்... தொப்புள் கொடி கூட அறுக்கப்படாததால் அதிர்ச்சி
மருத்துவமனை வளாகத்தில் கழிவுநீர் அருகே தொப்பு கொடி கூட அருக்கப்படாமல் இறந்த நிலையில் கிடந்த பச்சிளம் குழந்தையின் உடல்
திருவண்ணாமலை புறவழிச்சாலையில் அமைந்துள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நாள் ஒன்றுக்கு புற்றுநோயாளிகளாக 2000க்கும் மேற்பட்டோர் மற்றும் உள்நோயாளியாக 2500க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பச்சிளம் குழந்தை உடல் கண்டெடுப்பு

மேலும் குழந்தை பெறும் கர்ப்பிணி தாய்மார்கள், பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு என நான்கு அடுக்கு புதிய வளாகம் தொடங்கப்பட்டு அங்கு நாள் ஒன்றுக்கு 200க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள் சிகிச்சை பெற்று பிரசவங்கள் நடைபெறுகின்றன.

இந்நிலையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் கழிவு நீர் தேங்கி நிற்கும் இடத்தில் பிறந்து ஒரு நாளேயான குழந்தை தொப்புள் கொடி கூட அகற்றப்படாத நிலையில் குழந்தை இருக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

போலீசார் விசாரணை

அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இறந்த நிலையில் பிறந்ததா அல்லது வேறு எங்கோ பிறந்த குழந்தையை மருத்துவமனை வளாகத்திற்குள் கொண்டு வந்து போட்டுவிட்டு சென்றார்களா என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.