சிலருக்கு வாயில சனின்னு சொல்வாங்க. அப்படி கிருஷ்ணகிரி மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் மாதேஷ், பொதுக்கூட்டம் ஒன்றில் எக்குத்தப்பாக பேசியதால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதுதான் தற்போது கிருஷ்ணகிரி அரசியலில் ஹாட் டாபிக்.
என்ன நடந்தது என்று வி.சி.கவின் உட்பிரிவான ஆசிரியர் கூட்டமைப்பைச் சேர்ந்த தமிழ்மணியிடம் பேசினோம். "மாதேஷ், கட்சி நிர்வாகிகளையும், தொண்டர்களையும் மதிப்பதில்லை. தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற ஆணவம் அவருக்கு வக்ஃபு வாரிய சட்டத்திற்கு எதிரான போராட்டம், அம்பேத்கர் பிறந்தநாள் பேரணி என அடுத்தடுத்து திருமா அறிவித்தார். அதற்கு அமைப்புச் செயலாளர் கோவேந்தன், மாஜி மா.செ. கனியமுதன் ஆகியோரை மேலிடப் பார்வையாளர்களாக அறிவித்தார். அப்போது, மாதேஷ் இந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாமல் தனியாக கோஷ்டி அரசியல் செய்தார். இந்நிலையில் அ.தி.மு.கவைச் சேர்ந்த கிருஷ்ணகிரி எம்.எல்.ஏ அசோக் குமார் குறித்து பொது மேடையில் அநாகரிகமாக பேசினார்.
அதன் விளைவாகவே இப்போது மூன்று மாதம் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்" என்றார். மாதேஷின் ஆதரவாளரும் கிருஷ்ணகிரி ஒன்றியச் செயலாளருமான ஆலப்பட்டி ரமேஷிடம் பேசினோம். "மாவட்டச் செயலாளர் மாதேஷ் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருந்தார். ஒரு நிலப் பிரச்னை, அதனால் எங்கள் கட்சியின் அமைப்புச் செயலாளர் கோவேந்தனுக்கும், மாதேஷுக்கும் பிரச்னை. அதை மனதில் வைத்துக்கொண்டு அவருக்கு எதிராக செயல்பட்டு வந்தனர். இந்நிலையில் மார்ச் மாதம் நடந்த கூட்டத்தில், 'இத்தொகுதி மக்களுக்கு எம்.எல்.ஏ எதுவும் செய்யவில்லை. எங்கள் மக்களின் ஓட்டு மட்டும் வேண்டுமா?' என மேடையில் மாதேஷ் ஒருமையில் பேசினார். அதை ரெக்கார்ட் செய்து தலைமைக்கு அனுப்பினர். ஆனால், தலைமை அதை கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் கோவேந்தன், கனியமுதன் உள்ளிட்ட எங்கள் கட்சியினரே, அ.தி.மு.க எம்.எல்.ஏ அசோக்குமாரிடம் புகார் மனு வாங்கி தலைமைக்கு அனுப்பியுள்ளனர். அதன்பிறகே மாதேஷ் மூன்று மாதங்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்" என்றார்.
இதுகுறித்து வி.சி.க.வின் மூத்த நிர்வாகிகள் சிலர், 'தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த தகடூர் தமிழச்செல்வனும் கோவவேந்தனும் முறையே மாநிலத் தலைமை நிலையச் செயலாளராகவும், அமைப்புச் செயலாளராகவும் உள்ளனர். ஆனால், இவர்கள் கட்சி வளர்ச்சிக்காக எந்த வேலையும் செய்வதில்லை. ஆளுக்கொரு கோஷ்டி வைத்துக்கொண்டு கட்சியை அழிக்கிறார்கள். இந்தப் பிரச்னைகூட தகடூர் தமிழ்ச்செல்வனா, கோவேந்தனா என்றுதான் உள்ளது. மாதேஷ் தகடூரார் ஆதரவாளர், அதனால் மாதேஷை காலி செய்துள்ளனர்" என்றனர்.
இடைநீக்கம் செய்யப்பட்ட மாதேஷிடம் பேசினோம். 'நான் தலைமைக்கும், கொள்கைக்கும் விசுவாசமாக இருப்பவன். கிருஷ்ணகிரி தொகுதி அ.தி.மு.க. எம்எல்.ஏ. அசோக்குமார் பட்டியலின மக்கள் பகுதிக்கு வந்ததுகூட இல்லை. நான் அதைத்தான் மேடையில் பேசினேன். அசோக்குமார் என்னையும் என் தலைவரையும் ஒருமையில் பேசினார். அதற்குத்தான் பதிலடி கொடுத்தேன். இது சம்பந்தமாக தலைமைக்கும் விளக்கம் கொடுத்துவிட்டேன். அப்போதெல்லாம் அமைதியாக இருந்துவிட்டு மூணு மாதம் கழித்து நடவடிக்கை எடுத்திருப்பது அதிர்ச்சியாக உள்ளது. நான் தவறாக எதுவும் பேசவில்லை" என்றார்.
என்ன நடந்தது என்று வி.சி.கவின் உட்பிரிவான ஆசிரியர் கூட்டமைப்பைச் சேர்ந்த தமிழ்மணியிடம் பேசினோம். "மாதேஷ், கட்சி நிர்வாகிகளையும், தொண்டர்களையும் மதிப்பதில்லை. தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற ஆணவம் அவருக்கு வக்ஃபு வாரிய சட்டத்திற்கு எதிரான போராட்டம், அம்பேத்கர் பிறந்தநாள் பேரணி என அடுத்தடுத்து திருமா அறிவித்தார். அதற்கு அமைப்புச் செயலாளர் கோவேந்தன், மாஜி மா.செ. கனியமுதன் ஆகியோரை மேலிடப் பார்வையாளர்களாக அறிவித்தார். அப்போது, மாதேஷ் இந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாமல் தனியாக கோஷ்டி அரசியல் செய்தார். இந்நிலையில் அ.தி.மு.கவைச் சேர்ந்த கிருஷ்ணகிரி எம்.எல்.ஏ அசோக் குமார் குறித்து பொது மேடையில் அநாகரிகமாக பேசினார்.
அதன் விளைவாகவே இப்போது மூன்று மாதம் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்" என்றார். மாதேஷின் ஆதரவாளரும் கிருஷ்ணகிரி ஒன்றியச் செயலாளருமான ஆலப்பட்டி ரமேஷிடம் பேசினோம். "மாவட்டச் செயலாளர் மாதேஷ் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருந்தார். ஒரு நிலப் பிரச்னை, அதனால் எங்கள் கட்சியின் அமைப்புச் செயலாளர் கோவேந்தனுக்கும், மாதேஷுக்கும் பிரச்னை. அதை மனதில் வைத்துக்கொண்டு அவருக்கு எதிராக செயல்பட்டு வந்தனர். இந்நிலையில் மார்ச் மாதம் நடந்த கூட்டத்தில், 'இத்தொகுதி மக்களுக்கு எம்.எல்.ஏ எதுவும் செய்யவில்லை. எங்கள் மக்களின் ஓட்டு மட்டும் வேண்டுமா?' என மேடையில் மாதேஷ் ஒருமையில் பேசினார். அதை ரெக்கார்ட் செய்து தலைமைக்கு அனுப்பினர். ஆனால், தலைமை அதை கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் கோவேந்தன், கனியமுதன் உள்ளிட்ட எங்கள் கட்சியினரே, அ.தி.மு.க எம்.எல்.ஏ அசோக்குமாரிடம் புகார் மனு வாங்கி தலைமைக்கு அனுப்பியுள்ளனர். அதன்பிறகே மாதேஷ் மூன்று மாதங்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்" என்றார்.
இதுகுறித்து வி.சி.க.வின் மூத்த நிர்வாகிகள் சிலர், 'தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த தகடூர் தமிழச்செல்வனும் கோவவேந்தனும் முறையே மாநிலத் தலைமை நிலையச் செயலாளராகவும், அமைப்புச் செயலாளராகவும் உள்ளனர். ஆனால், இவர்கள் கட்சி வளர்ச்சிக்காக எந்த வேலையும் செய்வதில்லை. ஆளுக்கொரு கோஷ்டி வைத்துக்கொண்டு கட்சியை அழிக்கிறார்கள். இந்தப் பிரச்னைகூட தகடூர் தமிழ்ச்செல்வனா, கோவேந்தனா என்றுதான் உள்ளது. மாதேஷ் தகடூரார் ஆதரவாளர், அதனால் மாதேஷை காலி செய்துள்ளனர்" என்றனர்.
இடைநீக்கம் செய்யப்பட்ட மாதேஷிடம் பேசினோம். 'நான் தலைமைக்கும், கொள்கைக்கும் விசுவாசமாக இருப்பவன். கிருஷ்ணகிரி தொகுதி அ.தி.மு.க. எம்எல்.ஏ. அசோக்குமார் பட்டியலின மக்கள் பகுதிக்கு வந்ததுகூட இல்லை. நான் அதைத்தான் மேடையில் பேசினேன். அசோக்குமார் என்னையும் என் தலைவரையும் ஒருமையில் பேசினார். அதற்குத்தான் பதிலடி கொடுத்தேன். இது சம்பந்தமாக தலைமைக்கும் விளக்கம் கொடுத்துவிட்டேன். அப்போதெல்லாம் அமைதியாக இருந்துவிட்டு மூணு மாதம் கழித்து நடவடிக்கை எடுத்திருப்பது அதிர்ச்சியாக உள்ளது. நான் தவறாக எதுவும் பேசவில்லை" என்றார்.