மதுரை மாநகராட்சி 100 வார்டுகளைக் கொண்டது. 52 பெண்களும் 48 ஆண்களும் கவுன்சிலர்களாக தேர்வாகியுள்ளனர். இதில் தி.மு.க 67. காங்கிரஸ் 5, கம்யூனிஸ்ட் 4, வி.சி.க 1, ம.தி.மு.க 3, அ.தி.மு.க 15, பா.ஜ.க 1, சுயேச்சைகள் 4 பேர் இருக்கிறார்கள். மேயர் வேட்பாளர் போட்டியில் பாமா முருகன் முதலிடத்தில் இருந்தார்.
அடுத்தடுத்த இடத்தில் அமைச்சர் மூர்த்தியின் ஆதரவாளரான வாசுகியும், முன்னாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கத்தின் மருமகளும் இருந்தனர். பட்டியலில் இல்லாத இந்திராணி மேயரானதற்குக் காரணமே பி.டி.ஆர்தான் என்று கூறப்படுகிறது.
பி.டி.ஆரின் தீவிர விசுவாசியான பொன். வசந்த், பாலாஜி என்பவர் மூலம் தன் மனைவி இந்திராணிக்கு மேயர் பதவியைப் பெற்றதாகவும், வளர்த்த கிடா மார்பில் பாய்ந்த கதையாக பொன். வசந்த் தனியாக தன் அதிகாரத்தைக் காட்டியதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், அனைத்து கோப்புகளும் பொன்.வசந்த் பார்வைக்கு கொண்டு வரவேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவு பறந்ததாம். அதன்படி அதிகாரிகளும் அண்ணாநகரில் இருக்கும் மேயர் பங்களாவில் உட்கார்ந்து கொண்டு கோப்புகளைப் பார்ப்பதும் அதிகாரிகளுக்கு உத்தரவு போடுவதுமாக இருந்து வந்தார் பொன். வசந்த் என்று கூறுகின்றனர் உள்விவரம் அறிந்தவர்கள்.
இந்த நிலையில், தூய்மைப் பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் வரைக்கும் பொன் வசந்த் பெயரில் டெண்டர் எடுக்கப்பட்டுள்ளதாகவும், மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திற்குள் வந்துபோகும் பஸ், கார்களுக்கான டோல்கேட் கட்டணம், தொழில் நிறுவனங்களுக்கான வரி, விதிமீறிய கட்டிடங்களுக்கு வரி விதிப்புகளில் பணம், உள்ளூர் திட்டக்குழும தலைவர் மூவேந்திரன் வசூல் வேட்டை, மற்ற மண்டலத் தலைவர்கள் வசூல் வேட்டை என மடையை திறந்துவிட்டார் பொன் வசந்த் என்று பகீர் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.
மனைவி மேயரானதும் மேலப்பொன்னகரம் பகுதிச் செயலாளராக தான் வகித்த பதவியை மாறன் என்பவருக்கு விட்டுக்கொடுத்தார். மாநகராட்சியின் முக்கிய கோப்புகள் திடீரென மாயமானது. அதையெல்லாம் இன்று வரை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்தப் பஞ்சாயத்து நீறுபூத்த நெருப்பாக புகைந்துகொண்டிருக்க, 48 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரையில் நடக்கும் திமுக பொதுக்குழு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் அமைச்சர்கள் மூர்த்தி, பி.டி.ஆர், மா.செக்கள் தளபதி, மணிமாறன் ஆகியோர் தலைமையில் 23ம் தேதி நடைபெற்றது.
அன்றைய தினமே மாநகராட்சியின் மாமன்றக் கூட்டமும் நடைபெற்றது. 10க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள், மண்டலத் தலைவர் பாண்டிச்செல்வி உள்ளிட்ட சிலர் மட்டுமே கூட்டத்தில் கலந்துகொண்டார்கள். அன்றைக்கு கொண்டுவரப்பட்ட 46 தீர்மானங்களை நிறைவேற்ற போதுமானதாக ஆளும்கட்சி கவுன்சிலர்கள் இல்லாத நிலையில், அ.தி.மு.க கவுன்சிலர்களின் ஆதரவைப் பெற்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கட்சியின் பொதுக்குழு நடைபெறுவதற்கான கூட்டம் முக்கியமா? மன்றக்கூட்டம் முக்கியமா? மாமன்றக் கூட்டதை தள்ளிவைக்கச் சொன்ன பிறகும் வேண்டுமென்றே கூட்டத்தைக் கூட்டி கட்சிக்கு எதிராக இருக்கிறார் பொன்.வசந்த், அ.தி.மு.கவுடன் கூட்டணி வைத்துக்கொண்டு ஸ்லீப்பர் செல்லாக கட்சிக்கு துரோகம் செய்யும் வேலையை செய்து வருகிறார் என்பதை அவரே நிரூபித்துவிட்டார் என்று மதுரை திமுகவினர் குமுறி வருகின்றனர்.
அதே நேரத்தில் மதுரை மேற்கு தொகுதியில் தொடர்ந்து வெற்றி பெற்று வரும் செல்லூர் ராஜூவை இந்த முறை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக அந்த தொகுதியின் பொறுப்பாளராக அமைச்சர் மூர்த்தி நியமிக்கப்பட்டு இருக்கிறார். இந்த நேரத்தில் கட்சித் தலைமையின் பவர் சென்டர்களைப் பிடித்து, 'கட்சியில் பதவி, மேற்கு தொகுதியின் வேட்பாளர் நான்தான்' என வீடியோ வெளியிடும் அளவிற்கு பணத்தை சம்பாதித்துவிட்டார் பொன்.வசந்த் என்று கூறப்படுகிறது. கட்சி விரோத நடவடிக்கைகளில் இறங்கிய பொன் வசந்தை நீக்குவதற்கு அமைச்சர் பிடிஆரிடம் பேசி அவரது ஒப்புதல் கிடைத்த பிறகே நீக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
இந்நிலையில் அமைச்சர் மூர்த்தி மாநகராட்சியை கையிலெடுக்க காய்நகர்த்தி வருகிறார். ஜூன் 1ம் தேதி பொதுக்குழு முடிந்ததும் தனது ஆதரவாளரான மண்டலத் தலைவர் வாசுகிதான் அடுத்த மேயர் என்று முடிவு செய்துவிட்டாரம். மேயர் பதவி மூலம் பொன்.வசந்த்தின் சொத்து மதிப்பு தேனி, மதுரை, கொடைக்கானல், சென்னை பகுதிகளில் உயர்ந்துள்ளதாம். அமைச்சர் பி.டி ஆர் வீட்டின் அருகே மாநகராட்சியின் சொத்தை பல கோடிக்கு கைமாற்றி அதில் தற்போது வணிக கட்டிடம் கட்டப்பட்டு வருகின்றது என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.
இதன் மூலம் மதுரை அரசியலில் பிடிஆர் ஓரங்கட்டப்பட இருக்கிறாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
குமுதம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலா.
அடுத்தடுத்த இடத்தில் அமைச்சர் மூர்த்தியின் ஆதரவாளரான வாசுகியும், முன்னாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கத்தின் மருமகளும் இருந்தனர். பட்டியலில் இல்லாத இந்திராணி மேயரானதற்குக் காரணமே பி.டி.ஆர்தான் என்று கூறப்படுகிறது.
பி.டி.ஆரின் தீவிர விசுவாசியான பொன். வசந்த், பாலாஜி என்பவர் மூலம் தன் மனைவி இந்திராணிக்கு மேயர் பதவியைப் பெற்றதாகவும், வளர்த்த கிடா மார்பில் பாய்ந்த கதையாக பொன். வசந்த் தனியாக தன் அதிகாரத்தைக் காட்டியதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், அனைத்து கோப்புகளும் பொன்.வசந்த் பார்வைக்கு கொண்டு வரவேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவு பறந்ததாம். அதன்படி அதிகாரிகளும் அண்ணாநகரில் இருக்கும் மேயர் பங்களாவில் உட்கார்ந்து கொண்டு கோப்புகளைப் பார்ப்பதும் அதிகாரிகளுக்கு உத்தரவு போடுவதுமாக இருந்து வந்தார் பொன். வசந்த் என்று கூறுகின்றனர் உள்விவரம் அறிந்தவர்கள்.
இந்த நிலையில், தூய்மைப் பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் வரைக்கும் பொன் வசந்த் பெயரில் டெண்டர் எடுக்கப்பட்டுள்ளதாகவும், மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திற்குள் வந்துபோகும் பஸ், கார்களுக்கான டோல்கேட் கட்டணம், தொழில் நிறுவனங்களுக்கான வரி, விதிமீறிய கட்டிடங்களுக்கு வரி விதிப்புகளில் பணம், உள்ளூர் திட்டக்குழும தலைவர் மூவேந்திரன் வசூல் வேட்டை, மற்ற மண்டலத் தலைவர்கள் வசூல் வேட்டை என மடையை திறந்துவிட்டார் பொன் வசந்த் என்று பகீர் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.
மனைவி மேயரானதும் மேலப்பொன்னகரம் பகுதிச் செயலாளராக தான் வகித்த பதவியை மாறன் என்பவருக்கு விட்டுக்கொடுத்தார். மாநகராட்சியின் முக்கிய கோப்புகள் திடீரென மாயமானது. அதையெல்லாம் இன்று வரை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்தப் பஞ்சாயத்து நீறுபூத்த நெருப்பாக புகைந்துகொண்டிருக்க, 48 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரையில் நடக்கும் திமுக பொதுக்குழு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் அமைச்சர்கள் மூர்த்தி, பி.டி.ஆர், மா.செக்கள் தளபதி, மணிமாறன் ஆகியோர் தலைமையில் 23ம் தேதி நடைபெற்றது.
அன்றைய தினமே மாநகராட்சியின் மாமன்றக் கூட்டமும் நடைபெற்றது. 10க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள், மண்டலத் தலைவர் பாண்டிச்செல்வி உள்ளிட்ட சிலர் மட்டுமே கூட்டத்தில் கலந்துகொண்டார்கள். அன்றைக்கு கொண்டுவரப்பட்ட 46 தீர்மானங்களை நிறைவேற்ற போதுமானதாக ஆளும்கட்சி கவுன்சிலர்கள் இல்லாத நிலையில், அ.தி.மு.க கவுன்சிலர்களின் ஆதரவைப் பெற்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கட்சியின் பொதுக்குழு நடைபெறுவதற்கான கூட்டம் முக்கியமா? மன்றக்கூட்டம் முக்கியமா? மாமன்றக் கூட்டதை தள்ளிவைக்கச் சொன்ன பிறகும் வேண்டுமென்றே கூட்டத்தைக் கூட்டி கட்சிக்கு எதிராக இருக்கிறார் பொன்.வசந்த், அ.தி.மு.கவுடன் கூட்டணி வைத்துக்கொண்டு ஸ்லீப்பர் செல்லாக கட்சிக்கு துரோகம் செய்யும் வேலையை செய்து வருகிறார் என்பதை அவரே நிரூபித்துவிட்டார் என்று மதுரை திமுகவினர் குமுறி வருகின்றனர்.
அதே நேரத்தில் மதுரை மேற்கு தொகுதியில் தொடர்ந்து வெற்றி பெற்று வரும் செல்லூர் ராஜூவை இந்த முறை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக அந்த தொகுதியின் பொறுப்பாளராக அமைச்சர் மூர்த்தி நியமிக்கப்பட்டு இருக்கிறார். இந்த நேரத்தில் கட்சித் தலைமையின் பவர் சென்டர்களைப் பிடித்து, 'கட்சியில் பதவி, மேற்கு தொகுதியின் வேட்பாளர் நான்தான்' என வீடியோ வெளியிடும் அளவிற்கு பணத்தை சம்பாதித்துவிட்டார் பொன்.வசந்த் என்று கூறப்படுகிறது. கட்சி விரோத நடவடிக்கைகளில் இறங்கிய பொன் வசந்தை நீக்குவதற்கு அமைச்சர் பிடிஆரிடம் பேசி அவரது ஒப்புதல் கிடைத்த பிறகே நீக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
இந்நிலையில் அமைச்சர் மூர்த்தி மாநகராட்சியை கையிலெடுக்க காய்நகர்த்தி வருகிறார். ஜூன் 1ம் தேதி பொதுக்குழு முடிந்ததும் தனது ஆதரவாளரான மண்டலத் தலைவர் வாசுகிதான் அடுத்த மேயர் என்று முடிவு செய்துவிட்டாரம். மேயர் பதவி மூலம் பொன்.வசந்த்தின் சொத்து மதிப்பு தேனி, மதுரை, கொடைக்கானல், சென்னை பகுதிகளில் உயர்ந்துள்ளதாம். அமைச்சர் பி.டி ஆர் வீட்டின் அருகே மாநகராட்சியின் சொத்தை பல கோடிக்கு கைமாற்றி அதில் தற்போது வணிக கட்டிடம் கட்டப்பட்டு வருகின்றது என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.
இதன் மூலம் மதுரை அரசியலில் பிடிஆர் ஓரங்கட்டப்பட இருக்கிறாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
குமுதம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலா.