திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே மாவூத்தன் பட்டி கிராமத்தில் விவசாயி ஒருவரது தோட்டத்தில் கஞ்சா செடி வளர்த்து வருவதாக குற்றப்பிரிவு தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது
இதனையடுத்து நாகராஜ் என்பவரின் தோட்டத்திற்கு சென்ற குற்றப்பிரிவு தனிப்படை போலீசார் அங்கு சோதனையிட்டபோது பூச்செடி மற்றும் தென்னை மரங்களுக்கு நடுவே, கஞ்சா செடி மரம் போல் வளர்ந்து இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதேபோல், இரண்டு மூன்று இடங்களில் ஆங்காங்கே கஞ்சா செடிகள் வளர்ந்திருந்தது கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார் அந்த கஞ்சா செடிகளை வேரோடு பறித்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
பின்னர் விவசாயி நாகராஜிடம் போலீசார் நடத்திய விசாரணையில் போதை பழக்கத்திற்கு அடிமையாகி, அவரே தனது தோட்டத்தில் கஞ்சா செடி வளர்த்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து தோட்டத்தில் இருந்த கஞ்சா செடிகளை கைப்பற்றி அழித்த போலீசார் கஞ்சா செடி பயிரிட்ட விவசாயி நாகராஜை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கஞ்சா போன்ற போதைப்பொருள் வளர்ப்பு, கொள்முதல், விற்பனை தொடர்பான சட்டங்கள் மிக கடுமையானவையாகும். இதை மீறுபவர்கள் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இது போன்ற சம்பவங்களை தடுக்க தமிழகம் முழுவதும் உள்ள கிராமங்கள் முதல் நகரங்கள் வரை அனைத்து இடங்களில் காவல்துறையினர் போதைப்பொருள் குறித்தும், அதனால் ஏற்படும் தீமைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும், இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நடைபெறாத வகையில் போலீசார் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து நாகராஜ் என்பவரின் தோட்டத்திற்கு சென்ற குற்றப்பிரிவு தனிப்படை போலீசார் அங்கு சோதனையிட்டபோது பூச்செடி மற்றும் தென்னை மரங்களுக்கு நடுவே, கஞ்சா செடி மரம் போல் வளர்ந்து இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதேபோல், இரண்டு மூன்று இடங்களில் ஆங்காங்கே கஞ்சா செடிகள் வளர்ந்திருந்தது கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார் அந்த கஞ்சா செடிகளை வேரோடு பறித்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
பின்னர் விவசாயி நாகராஜிடம் போலீசார் நடத்திய விசாரணையில் போதை பழக்கத்திற்கு அடிமையாகி, அவரே தனது தோட்டத்தில் கஞ்சா செடி வளர்த்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து தோட்டத்தில் இருந்த கஞ்சா செடிகளை கைப்பற்றி அழித்த போலீசார் கஞ்சா செடி பயிரிட்ட விவசாயி நாகராஜை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கஞ்சா போன்ற போதைப்பொருள் வளர்ப்பு, கொள்முதல், விற்பனை தொடர்பான சட்டங்கள் மிக கடுமையானவையாகும். இதை மீறுபவர்கள் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இது போன்ற சம்பவங்களை தடுக்க தமிழகம் முழுவதும் உள்ள கிராமங்கள் முதல் நகரங்கள் வரை அனைத்து இடங்களில் காவல்துறையினர் போதைப்பொருள் குறித்தும், அதனால் ஏற்படும் தீமைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும், இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நடைபெறாத வகையில் போலீசார் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.