தமிழ்நாடு

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை... ஆசிரியர்களின் புதிய முயற்சி

உதகை அருகே அரசு பள்ளியில் சேரும் மாணவர்களின் வங்கிக்கணக்கில் ரூ.5000 டெபாசிட் செய்யப்படும் என ஆசிரியர்கள் உறுதி அளித்துள்ளனர். ஆசிரியர்களின் இந்த புதிய முயற்சிக்கு பெற்றோர்கள் இடையே வரவேற்பு அதிகரித்துள்ளது.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை... ஆசிரியர்களின் புதிய முயற்சி
ooty keezhur govenment school
நீலகிரி மாவட்டம், உதகை அருகேயுள்ள கீழுர் கோக்காலாட அரசு உயர் நிலைப் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை குறைந்த நிலையில், இப்பள்ளி கொரோனா காலத்தில் மூடப்பட்டது. இதையடுத்து, இப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் மற்றும் ஊர் பொதுமக்களின் முயற்சியால் மீண்டும் இப்பள்ளி 3 ஆண்டுகளுக்கு முன் திறக்கப்பட்டது. தற்போது இந்த பள்ளியில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 42 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

எனினும் இப்பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையை தொடர்ந்து அதிகரிக்க ஆசிரியர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் முயற்சி செய்து வருகின்றனர். இந்நிலையில், இப்பள்ளியில் சேறும் மாணவர்களின் வங்கி கணக்கில் ரூ.5 ஆயிரம் வரை செலுத்தவதாக உறுதியளித்த ஆசிரியர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள், துண்டு பிரசுரம் வழங்கி புதிய மாணவர்களை சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இப்பள்ளியில் புதிதாக சேரும் 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு ஊக்கத்தொகையாக அவர்களது வங்கிக்கணக்கில் ரூ.5 ஆயிரம் செலுத்தப்படவுள்ளது.

அதேபோல், 6ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.5 ஆயிரமும், 7ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.4 ஆயிரமும், 8ம் வகுப்பு மாணவர்களுக்கு 3 ஆயிரமும், 9ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.2 ஆயிரமும் டெபாசிட் செய்யப்படவுள்ளது. மேலும், இந்த மாணவர்கள் 10ம் வகுப்பு முடித்து செல்லும் போது, அந்த டெபாசிட் முதிர்வு தொகையை பெற்றுக் கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்ைக எடுத்து வரும் நிலையில், கீளூர் பள்ளி ஆசிரியர்கள் எடுத்து வரும் இந்த புதிய முயற்சிக்கு இப்பகுதிகளில் உள்ள பெற்றோர்களிடையே பெரும் கிடைத்துள்ளது. கோடை விடுமுறை முடிந்து தற்போது பள்ளி திறக்கப்பட்ட நிலையில், மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க ஆசிரியர்கள் வீடு வீடாக சென்று மாணவர்கள் சேர்க்கை குறித்து பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

நேற்று இப்பள்ளியை சேர்ந்த உடற்கல்வி ஆசிரியர் செந்தில்குமார், ஆசிரியைகள் மோனிஷா மற்றும் வள்ளி ஆகியோர் சாம்ராஜ், கைகாட்டி, மேலூர் போன்ற பகுதிகளில் மாணவர்கள் சேர்க்கைக்காக வீடு வீடாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.