சென்னை எழும்பூர் அரசு பள்ளியில் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் பள்ளி மாணவர்களுக்கு ரயில்வே பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர் எழும்பூர் காந்தி இர்வின் மேம்பாலம் அருகே டாக்டர் அம்பேத்கர் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வரும் நிலையில் ரயில்வே தண்டவாளத்திற்கு அருகாமையில் செயல்படும் பள்ளி என்பதால் பள்ளி மாணவர்களுக்கு எழும்பூர் ரயில்வே பாதுகாப்பு படை காவல் ஆய்வாளர் செபஸ்டியன் தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இன்று (ஜூன் .6 ) ரயில்வே பாதுகாப்பு படை சென்னை கோட்டா ஆணையாளர் திரு. பி.இராமகிருஷ்ணன் மற்றும் உதவி ஆணையாளர் திரு. பி.ராமமூர்த்தி ஆகியோரின் உத்தரவின் பெயரில் திரு. கே.பி. ஜெபாஸ்டியன் இன்ஸ்பெக்டர் ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் ஊழியர்கள் இணைந்து டாக்டர் அம்பேத்கர் அரசு உயர்நிலைப்பள்ளி எக்மோரில் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. இந்த விழிப்புணர்வு முகாமில் கீழ்கண்ட முக்கிய அம்சங்கள் வலியுறுத்தப்பட்டு விளக்கப்பட்டது.

மாணவ - மாணவிகள் ஓடும் ரயிலில் ஏறுவதும் இறங்குவதும் சட்டப்படி குற்றம், படியில் தொங்கிக்கொண்டு பயணம் செய்வதும், தரையில் கால்களை தேய்த்துக் கொண்டு பயணம் செய்வதும், ரயில்வே தண்டவாளத்தை வேலை செய்பவர்கள் தவிர மற்ற நபர்கள் யாரேனும் கடக்க கூடாது, ஜன்னல் ஓரத்தில் தங்கள் உடமைகளை வைக்கக்கூடாது, பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கினர்.
* ரயில்வேயில் எந்த ஒரு அவசர நிலையிலும் மற்றும் உதவிக்கு 139 என்ற இலவச ஹெல்ப் லைன் அழைக்கவும்.
* குழந்தைகள் தொடர்பான உடனடி உதவிக்கு 1098 ஐ அழைக்கவும்.
* படியில் பயணம் செய்வதை தவிர்க்கவும்.
* தெரியாத நபர்களிடமிருந்து உணவுப் பொருட்களை ஏற்க வேண்டாம் அவற்றில் மயக்க மருந்து கலக்கப்பட்டு இருக்க வாய்ப்பு உள்ளது.
* ஓடும் ரயிலின் அருகில் மற்றும் ரயில் பாதையின் அருகில் புகைப்படம், செல்பி, வீடியோ எடுக்க வேண்டாம் அவை உயிருக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
* ரயில் பாதையை கடக்க ரயில்வே மேம்பாலம் மற்றும் சுரங்கப் பாதையை பயன்படுத்தவும்.
* ரயில்களின் மீது கல் எறிவது மற்றும் ரயில் பாதையில் கற்களை வைப்பது போன்ற செயல்களை செய்ய வேண்டாம்.
* மூடப்பட்டிருக்கும் ரயில்வே கேட்டை கடக்கவும், திறக்கவும் வேண்டாம்.
* ஓடும் தொடர்வண்டியில் ஏறவோ, இறங்கவோ வேண்டாம்.
ரயில்வே பாதுகாப்பு மற்றும் ரயில் நிலையங்களில் ரயிலில் செய்யக்கூடாதவை குறித்து உறுதிமொழி எடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை போலீஸ் ஆய்வாளர் செபஸ்டின். உதவி ஆய்வாளர்கள் சாய் லிலா, விக்கி, கணேஷ், மற்றும் தலைமை காவலர் மமதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இன்று (ஜூன் .6 ) ரயில்வே பாதுகாப்பு படை சென்னை கோட்டா ஆணையாளர் திரு. பி.இராமகிருஷ்ணன் மற்றும் உதவி ஆணையாளர் திரு. பி.ராமமூர்த்தி ஆகியோரின் உத்தரவின் பெயரில் திரு. கே.பி. ஜெபாஸ்டியன் இன்ஸ்பெக்டர் ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் ஊழியர்கள் இணைந்து டாக்டர் அம்பேத்கர் அரசு உயர்நிலைப்பள்ளி எக்மோரில் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. இந்த விழிப்புணர்வு முகாமில் கீழ்கண்ட முக்கிய அம்சங்கள் வலியுறுத்தப்பட்டு விளக்கப்பட்டது.

மாணவ - மாணவிகள் ஓடும் ரயிலில் ஏறுவதும் இறங்குவதும் சட்டப்படி குற்றம், படியில் தொங்கிக்கொண்டு பயணம் செய்வதும், தரையில் கால்களை தேய்த்துக் கொண்டு பயணம் செய்வதும், ரயில்வே தண்டவாளத்தை வேலை செய்பவர்கள் தவிர மற்ற நபர்கள் யாரேனும் கடக்க கூடாது, ஜன்னல் ஓரத்தில் தங்கள் உடமைகளை வைக்கக்கூடாது, பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கினர்.
* ரயில்வேயில் எந்த ஒரு அவசர நிலையிலும் மற்றும் உதவிக்கு 139 என்ற இலவச ஹெல்ப் லைன் அழைக்கவும்.
* குழந்தைகள் தொடர்பான உடனடி உதவிக்கு 1098 ஐ அழைக்கவும்.
* படியில் பயணம் செய்வதை தவிர்க்கவும்.
* தெரியாத நபர்களிடமிருந்து உணவுப் பொருட்களை ஏற்க வேண்டாம் அவற்றில் மயக்க மருந்து கலக்கப்பட்டு இருக்க வாய்ப்பு உள்ளது.
* ஓடும் ரயிலின் அருகில் மற்றும் ரயில் பாதையின் அருகில் புகைப்படம், செல்பி, வீடியோ எடுக்க வேண்டாம் அவை உயிருக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
* ரயில் பாதையை கடக்க ரயில்வே மேம்பாலம் மற்றும் சுரங்கப் பாதையை பயன்படுத்தவும்.
* ரயில்களின் மீது கல் எறிவது மற்றும் ரயில் பாதையில் கற்களை வைப்பது போன்ற செயல்களை செய்ய வேண்டாம்.
* மூடப்பட்டிருக்கும் ரயில்வே கேட்டை கடக்கவும், திறக்கவும் வேண்டாம்.
* ஓடும் தொடர்வண்டியில் ஏறவோ, இறங்கவோ வேண்டாம்.
ரயில்வே பாதுகாப்பு மற்றும் ரயில் நிலையங்களில் ரயிலில் செய்யக்கூடாதவை குறித்து உறுதிமொழி எடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை போலீஸ் ஆய்வாளர் செபஸ்டின். உதவி ஆய்வாளர்கள் சாய் லிலா, விக்கி, கணேஷ், மற்றும் தலைமை காவலர் மமதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.