கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சென்னை, டெல்லி, மும்பை, பெங்களூர், கொல்கத்தா, புனே, சீரடி, கோவா உள்ளிட்ட உள்நாட்டின் முக்கிய நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் இந்த விமான நிலையத்தை பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர்.
ராஜ்நாத் சிங் வருகை
ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான நேற்று காலையில் விமான நிலையத்திற்கு ஏராளமான பயணிகள் வந்து சென்றனர். அவர்கள் வழி அனுப்பி வைக்கவும் வெளியூர்களில் இருந்து வருபவர்களை வரவேற்கவும் ஏராளமானோர் வந்து காத்து இருந்தனர்.விமான நிலையத்திற்கு நேற்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜநாத் சிங் வந்தார். இதனால் அங்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
இந்நிலையில் கோவை விமான நிலையத்தில் இ-மெயில் முகவரிக்கு ஒரு கடிதம் வந்தது. அதில் விமான நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. அதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் உடனே விமான நிலையம் மத்திய தொழில் பாதுகாப்பு படையினருக்கும், பீளமேடு காவல் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.
வெடிகுண்டு மிரட்டல்
அதன் பேரில் வெடிகுண்டு தடுப்பு பிரிவினர், மோப்பநாய் மூலம் விமான நிலையம் முழுவதும் சோதனை நடத்தினர். மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், விமான நிலையம் வளாகத்திலும் பயணிகள் உடைமைகளையும் தீவிர சோதனை செய்தனர். ஆனால் சந்தேகத்திற்கு இடமாக எந்த பொருளும் சிக்கவில்லை. இதனால் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது. இதனால் வெடிகுண்டு மிரட்டல் எங்கு இருந்து வந்தது. இது எந்த? இ-மெயில் முகவரியில் அனுப்பப்பட்டு உள்ளது. அதை அனுப்பியது யார் ? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ராஜ்நாத் சிங் வருகை
ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான நேற்று காலையில் விமான நிலையத்திற்கு ஏராளமான பயணிகள் வந்து சென்றனர். அவர்கள் வழி அனுப்பி வைக்கவும் வெளியூர்களில் இருந்து வருபவர்களை வரவேற்கவும் ஏராளமானோர் வந்து காத்து இருந்தனர்.விமான நிலையத்திற்கு நேற்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜநாத் சிங் வந்தார். இதனால் அங்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
இந்நிலையில் கோவை விமான நிலையத்தில் இ-மெயில் முகவரிக்கு ஒரு கடிதம் வந்தது. அதில் விமான நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. அதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் உடனே விமான நிலையம் மத்திய தொழில் பாதுகாப்பு படையினருக்கும், பீளமேடு காவல் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.
வெடிகுண்டு மிரட்டல்
அதன் பேரில் வெடிகுண்டு தடுப்பு பிரிவினர், மோப்பநாய் மூலம் விமான நிலையம் முழுவதும் சோதனை நடத்தினர். மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், விமான நிலையம் வளாகத்திலும் பயணிகள் உடைமைகளையும் தீவிர சோதனை செய்தனர். ஆனால் சந்தேகத்திற்கு இடமாக எந்த பொருளும் சிக்கவில்லை. இதனால் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது. இதனால் வெடிகுண்டு மிரட்டல் எங்கு இருந்து வந்தது. இது எந்த? இ-மெயில் முகவரியில் அனுப்பப்பட்டு உள்ளது. அதை அனுப்பியது யார் ? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.