தமிழ்நாடு

'எங்கோ பிறந்தோம், இங்கே இணைந்தோம்'..32 ஆண்டுகள் கழித்து சந்தித்த முன்னாள் மாணவர்கள்.. அரியலூரில் நெகிழ்ச்சி!

32 ஆண்டுகளுக்கு பிறகு அரசுப் பள்ளியில் 10 வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள் வாட்ஸப் மூலம் ஒன்றிணைந்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

'எங்கோ பிறந்தோம், இங்கே இணைந்தோம்'..32 ஆண்டுகள் கழித்து சந்தித்த முன்னாள் மாணவர்கள்.. அரியலூரில் நெகிழ்ச்சி!
'எங்கோ பிறந்தோம், இங்கே இணைந்தோம்'..32 ஆண்டுகள் கழித்து சந்தித்த முன்னாள் மாணவர்கள்!
நம்முடைய ஒவ்வொருவரின் வாழ்விலும் பள்ளிக்காலம் என்பது மறக்க முடியாத ஒரு தருணமாக என்றும் நினைவில் நிற்கும்.. தற்போதைய காலக்கட்டத்தில் அனைவரும் பள்ளி பருவ நண்பர்களை பார்ப்பது மிகவும் அரிதாகி, வேலைக்காக வெளியூர், வெளிநாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். இதுபோன்ற காலகட்டத்தில் ஒரு பள்ளியில் படித்த மாணவர்கள், 32 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்து கொண்டனர். இதில், தாங்கள் படித்த காலத்தில் நடந்த நிகழ்வுகளை மகிழ்வுடன் ஒருவருக்கொருவர் கூறி, தங்களது பள்ளிப் பருவத்தை நினைவு கூர்ந்தனர்.

Imageஅரியலூர் மாவட்டம் உட்கோட்டை அரசு மேல்நிலை பள்ளியில் 1992, 1993 ஆண்டில் பத்தாம் வகுப்பு படித்த மாணவர்கள் 32 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்துக் கொண்ட நிகழ்வு, அரசு பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

Image
பின்னர் கடந்த காலங்களை நினைவு கூர்ந்த முன்னாள் மாணவர்கள் அவரவர்களின் குடும்பம் மற்றும் வேலை குறித்து அக்கறையுடன் விசாரித்துக் கொண்டனர். 32 ஆண்டுகளுக்குப் பிறகு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வெளிநாடுகளிலும் இருந்த முன்னாள் மாணவர்கள் சந்தித்த போது அவர்களின் முகங்களில் ஏற்பட்ட மகிழ்ச்சி நெகிழ்ச்சியான தருணமாக கருதப்பட்டது.

இந்த நிகழ்வை நினைவு கூறும் வகையில், பள்ளிக்கு ஒரு லட்சம் மதிப்பிலான பள்ளிக்கான தளவாட பொருட்களை வழங்கியதுடன் பொதுத்தேர்வில் பள்ளியில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு ஊக்க பரிசும் வழங்கி பாராட்டி வாழ்த்தி பேசினர்.

Imageமேலும், ஒவ்வொரு முன்னாள் மாணவர்களும் தாம் படித்த பள்ளியை முன்னேற்ற பாதையில் கொண்டு வர முயற்சிக்க வேண்டும். அதேபோல் பள்ளியில் பயிலும் ஏழை, எளிய வசதி இல்லாத மாணவர்களுக்கு படிப்புக்காக கல்விக்காக எந்த நேரத்திலும் உதவிக்கரம் நீட்ட தயாராக இருப்பதாக பள்ளி தலைமை ஆசிரியரிடம் உத்திரவாதம் அளித்த முன்னாள் மாணவர்களின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிகழ்வில் முன்னாள் மாணவர்கள் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், இந்நாள் ஆசிரியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Imageஇதில் முடிவில்

பள்ளிப்பருவ நினைவுகளை மீண்டும் கொண்டுவந்த முன்னாள் மாணவர்களில் ஒருவர் மீண்டும் பிரிய போறமே என்ற மனமுருகி பாடிய பாடல் சக மாணவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 32 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சந்தித்துக்கொண்ட மாணவர்களின் இந்த ஒன்றுக்கூடல் நிகழ்வு தற்போது அப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மற்றும் ஊர் பொதுமக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.