சென்னை கோட்டூர்புரத்தை சேர்ந்த 40 வயதான ரோசி என்பவர் சென்னை வேளச்சேரியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
தங்க செயின் பறிப்பு
நேற்று பணி முடிந்து மாலை அவர் வீடு செல்வதற்காக தரமணி ரயில் நிலையம் சென்று அமர்ந்துள்ளார். ரயில் நிலைய நடைபாதையில் இருக்கையில் அமர்ந்திருந்த பள்ளி ஆசிரியை அருகில் வந்த இளைஞர் ஒருவர் இங்கே அமராலாமா என்று கேட்டுள்ளார். அந்த இளைஞரை பார்த்ததும் சந்தேகம் வரவே அவரிடம் திருப்பி எந்த ஒரு வார்த்தையும் பள்ளி ஆசிரியை பேசாமல் திரும்பிக்கொண்டிருந்தார்.
கண்ணிமைக்கும் நேரத்தில் நடைபாதையில் காத்திருந்த பெண்ணின் அருகில் அமர்ந்து இருந்த இளைஞர் சற்றும் எதிர்பாராத நேரத்தில் யாருமில்லாததை நோட்டமிட்டு பெண்ணின் கழுத்தில் அணிந்து இருந்த மூன்று சவரன் தங்க செயினை பறித்து கொண்டு தப்பி ஓடினார்.
இளைஞர் கைது
தனது கழுத்தில் அறிந்திருந்த தங்க செயினை இளைஞர் ஒருவர் பறித்துக் கொண்டு தப்பி ஓடியதும் கத்தி கூச்சலிட்டும் அந்த இளைஞர் ரயில் நிலையத்தில் இருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பி ஓடி தலைமறைவாகியுள்ளார்.
பட்டப்பகலில் ரயில் நிலையத்தில் அமர்ந்து இருந்த பெண்ணின் கழுத்தில் அணிந்து இருந்த தங்க செயினை இளைஞர் பறித்துக்கொண்டு ஓடும் சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இச்சம்பவம் குறித்து திருவான்மியூர் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் தரமணி ரயில் நிலையத்தில் பெண்ணிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட இளைஞரை திருவான்மியூர் ரயில்வே போலீசார் கைது செய்து ரயில்நிலைய காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கைதானவர் வாக்குமூலம்
கைதானவர் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பாபாஜி என்கிற சௌந்தர் (28) என்பவர் மீது மறைமலை நகரில் மொபைல் பறிப்பு வழக்கு ஒன்று உள்ளது. பெருங்குடி ரயில் நிலையத்தில் மதிய வேளையில் தனியாக இருந்ததால் பேச்சு கொடுத்து கைவரிசை காட்டியதாக வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும், தான் மீன் வியாபாரம் செய்வதாகவும், மனைவியை பிரிந்த தனியாக இருப்பதால் தன்னுடன் வருமாறு பெண்ணிடம் பேச்சு கொடுத்து கைவரிசை கட்டியதாக போலீசில் கூறியுள்ளார்.
தங்க செயின் பறிப்பு
நேற்று பணி முடிந்து மாலை அவர் வீடு செல்வதற்காக தரமணி ரயில் நிலையம் சென்று அமர்ந்துள்ளார். ரயில் நிலைய நடைபாதையில் இருக்கையில் அமர்ந்திருந்த பள்ளி ஆசிரியை அருகில் வந்த இளைஞர் ஒருவர் இங்கே அமராலாமா என்று கேட்டுள்ளார். அந்த இளைஞரை பார்த்ததும் சந்தேகம் வரவே அவரிடம் திருப்பி எந்த ஒரு வார்த்தையும் பள்ளி ஆசிரியை பேசாமல் திரும்பிக்கொண்டிருந்தார்.
கண்ணிமைக்கும் நேரத்தில் நடைபாதையில் காத்திருந்த பெண்ணின் அருகில் அமர்ந்து இருந்த இளைஞர் சற்றும் எதிர்பாராத நேரத்தில் யாருமில்லாததை நோட்டமிட்டு பெண்ணின் கழுத்தில் அணிந்து இருந்த மூன்று சவரன் தங்க செயினை பறித்து கொண்டு தப்பி ஓடினார்.
இளைஞர் கைது
தனது கழுத்தில் அறிந்திருந்த தங்க செயினை இளைஞர் ஒருவர் பறித்துக் கொண்டு தப்பி ஓடியதும் கத்தி கூச்சலிட்டும் அந்த இளைஞர் ரயில் நிலையத்தில் இருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பி ஓடி தலைமறைவாகியுள்ளார்.
பட்டப்பகலில் ரயில் நிலையத்தில் அமர்ந்து இருந்த பெண்ணின் கழுத்தில் அணிந்து இருந்த தங்க செயினை இளைஞர் பறித்துக்கொண்டு ஓடும் சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இச்சம்பவம் குறித்து திருவான்மியூர் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் தரமணி ரயில் நிலையத்தில் பெண்ணிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட இளைஞரை திருவான்மியூர் ரயில்வே போலீசார் கைது செய்து ரயில்நிலைய காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கைதானவர் வாக்குமூலம்
கைதானவர் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பாபாஜி என்கிற சௌந்தர் (28) என்பவர் மீது மறைமலை நகரில் மொபைல் பறிப்பு வழக்கு ஒன்று உள்ளது. பெருங்குடி ரயில் நிலையத்தில் மதிய வேளையில் தனியாக இருந்ததால் பேச்சு கொடுத்து கைவரிசை காட்டியதாக வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும், தான் மீன் வியாபாரம் செய்வதாகவும், மனைவியை பிரிந்த தனியாக இருப்பதால் தன்னுடன் வருமாறு பெண்ணிடம் பேச்சு கொடுத்து கைவரிசை கட்டியதாக போலீசில் கூறியுள்ளார்.