வீடியோ ஸ்டோரி

பழங்குடி மக்களுக்காக ஒதுக்கப்பட்ட மேய்க்கால் நிலம் – நீதிமன்றம் அதிரடி உத்தரவு

"நீலகிரி மாவட்டத்தில் பழங்குடி மக்களுக்காக ஒதுக்கப்பட்ட மேய்க்கால் நிலத்தை விவசாய நிலமாக மாற்றப்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்"

நீலகிரி மாவட்டத்தில் பழங்குடி மக்களுக்காக ஒதுக்கப்பட்ட மேய்க்கால் நிலத்தில் இனி ஒரு அடி நிலம் கூட விவசாய நிலமாக மாற்றப்படவில்லை என்பதை உறுதி  செய்ய வேண்டும் என வனத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் சோலூர் பகுதியில் பழங்குடியின மக்களுக்காக ஒதுக்கப்பட்ட மேய் கால் நிலங்களை தனியார் விவசாய நிலங்களாக மாற்றி, ஆக்கிரமித்துள்ளதாக  தொடரப்பட்ட வழக்கு, நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.