இஸ்ரேல் - ஹமாஸ் இடையே இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து போர் நடைபெற்று வருகிறது. இந்தப் போரின்போது, ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு, ஈரான் ஆதரவு தெரிவித்தது. மேலும், ஈரானின் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா, ஹவுதி பயங்கரவாத அமைப்புகளும், இஸ்ரேலுக்கு எதிராக தாக்குதல் நடத்தியது. அதற்கு, ஈரானும் அவ்வப்போது இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதல் கடந்த இரவில் நடைபெற்றதாகவும், ஏராளமான ட்ரோன்கள் உள்நுழைந்ததைக் கண்டறிந்த இஸ்ரேலிய வான்வெளி பாதுகாப்பு அமைப்புகள் அவற்றில் பெரும்பாலானவை முறியடிக்கப்பட்டதாகவும் இஸ்ரேல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், சில ட்ரோன்கள் பாதுகாப்பை தாண்டி சில முக்கிய இலக்குகளை தாக்கியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ஈரான் தலைநகர் தெஹ்ரானில் அணுநிலையங்களை குறிவைத்து ஆபரேஷன் 'ரைசிங் லயன்' எனும் தாக்குதலை இஸ்ரேல் நடத்தியுள்ளது. இதனையடுத்து, ஈரானின் அச்சுறுத்தல் நீங்கும் வரை தாக்குதல் நடவடிக்கை தொடரும் எனவும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து, இஸ்ரேலின் இந்தத் தாக்குதலுக்குப் பதிலடியாக, ஈரான் இஸ்ரேலை நோக்கி சுமார் 100 டிரோன்களை ஏவியுள்ளது. வான் பாதுகாப்பு அமைப்பு மூலம் இந்த டிரோன்களை இடைமறிக்கும் பணியில் இஸ்ரேல் ராணுவம் ஈடுபட்டுள்ளது. முன்னெச்சரிக்கையாக இஸ்ரேல் வான்பரப்பு மூடப்பட்டு நாடு முழுவதும் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் வான்பரப்பும் மூடப்பட்டுள்ளது. இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் புரட்சிகர காவல்படைத் தலைவர் ஹொசைன் சலாமி, ஈரானிய முப்படை ராணுவத் தளபதி முகமது பாகெரி உட்பட பல உயர் ராணுவ அதிகாரிகள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும், இந்தத் தாக்குதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 50 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம், ஈரான் – இஸ்ரேல் இடையிலான நிலவும் நட்புறவற்ற சூழ்நிலையை மேலும் தீவிரமாக்கியுள்ளது. ஈரான் ஆதரவாளர்களான ஹெஸ்பொல்லா மற்றும் ஹமாஸ் அமைப்புகளும் பதிலடி நடவடிக்கையில் ஈடுபடலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், முழு பகுதியில் மோதல் தீவிரமடையும் அபாயம் உருவாகியுள்ளது.
ஐக்கிய நாடுகள் மற்றும் உலக நாடுகள் அமைதியை வலியுறுத்தி இருதரப்புகளையும் கட்டுப்பாடு கடைபிடிக்க அழைத்துள்ளன. ஆனால் நிலைமை ஒரு பெரும் போர் பிராந்தியமாக மாறக்கூடிய பாதையில் செல்லும் வகையில் உள்ளது.
இந்நிலையில், இஸ்ரேலின் எதிர்வினை என்னவாக இருக்கும் என்பதை உலக நாடுகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றன. இஸ்ரேல்- ஈரான் இடையே நடைபெற்று வரும் தாக்குதலால் மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்த தாக்குதல் கடந்த இரவில் நடைபெற்றதாகவும், ஏராளமான ட்ரோன்கள் உள்நுழைந்ததைக் கண்டறிந்த இஸ்ரேலிய வான்வெளி பாதுகாப்பு அமைப்புகள் அவற்றில் பெரும்பாலானவை முறியடிக்கப்பட்டதாகவும் இஸ்ரேல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், சில ட்ரோன்கள் பாதுகாப்பை தாண்டி சில முக்கிய இலக்குகளை தாக்கியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ஈரான் தலைநகர் தெஹ்ரானில் அணுநிலையங்களை குறிவைத்து ஆபரேஷன் 'ரைசிங் லயன்' எனும் தாக்குதலை இஸ்ரேல் நடத்தியுள்ளது. இதனையடுத்து, ஈரானின் அச்சுறுத்தல் நீங்கும் வரை தாக்குதல் நடவடிக்கை தொடரும் எனவும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து, இஸ்ரேலின் இந்தத் தாக்குதலுக்குப் பதிலடியாக, ஈரான் இஸ்ரேலை நோக்கி சுமார் 100 டிரோன்களை ஏவியுள்ளது. வான் பாதுகாப்பு அமைப்பு மூலம் இந்த டிரோன்களை இடைமறிக்கும் பணியில் இஸ்ரேல் ராணுவம் ஈடுபட்டுள்ளது. முன்னெச்சரிக்கையாக இஸ்ரேல் வான்பரப்பு மூடப்பட்டு நாடு முழுவதும் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் வான்பரப்பும் மூடப்பட்டுள்ளது. இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் புரட்சிகர காவல்படைத் தலைவர் ஹொசைன் சலாமி, ஈரானிய முப்படை ராணுவத் தளபதி முகமது பாகெரி உட்பட பல உயர் ராணுவ அதிகாரிகள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும், இந்தத் தாக்குதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 50 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம், ஈரான் – இஸ்ரேல் இடையிலான நிலவும் நட்புறவற்ற சூழ்நிலையை மேலும் தீவிரமாக்கியுள்ளது. ஈரான் ஆதரவாளர்களான ஹெஸ்பொல்லா மற்றும் ஹமாஸ் அமைப்புகளும் பதிலடி நடவடிக்கையில் ஈடுபடலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், முழு பகுதியில் மோதல் தீவிரமடையும் அபாயம் உருவாகியுள்ளது.
ஐக்கிய நாடுகள் மற்றும் உலக நாடுகள் அமைதியை வலியுறுத்தி இருதரப்புகளையும் கட்டுப்பாடு கடைபிடிக்க அழைத்துள்ளன. ஆனால் நிலைமை ஒரு பெரும் போர் பிராந்தியமாக மாறக்கூடிய பாதையில் செல்லும் வகையில் உள்ளது.
இந்நிலையில், இஸ்ரேலின் எதிர்வினை என்னவாக இருக்கும் என்பதை உலக நாடுகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றன. இஸ்ரேல்- ஈரான் இடையே நடைபெற்று வரும் தாக்குதலால் மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.