இஸ்ரேலில் போர் பதற்றத்திற்கான சூழல் நிலவி வருகிறது. ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள ராணுவ தளவாடங்கள், அலுவலகங்கள், அணுசக்தி கட்டமைப்புகளை ஆபரேஷன் ரைசிங் லயன் என்னும் பெயரிட்டு இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. அதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஈரானும் அதிரடியாக தாக்குதலை தொடர்ந்துள்ளது.
டெல் அவீவ் நகரில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகத்திற்கு அருகே ஈரான் மேற்கொண்ட தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் மீது ஈரான் திடீரென ஏவுகணைகளை செலுத்திய நிலையில், அவற்றில் ஒன்று அமெரிக்க தூதரகம் அருகில் வெடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தாக்குதலில் தூதரகத்தின் கட்டிடங்கள் சில சேதமடைந்துள்ளன. ஆனால் இதில் எந்த உயிர்ச்சேதமும் அல்லது காயங்களும் ஏற்படவில்லை என அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதர் மைக் ஹக்கபி வெளியிட்டுள்ள அறிக்கையில், "பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக தூதரகம் இன்றுடன் தற்காலிகமாக மூடப்படுகிறது. பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். பொதுமக்கள் அமைதியை கடைபிடிக்க வேண்டுகிறோம் என தெரிவித்துள்ளார்.
ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரித்தால், அது இஸ்ரேலுக்கு ஆபத்து என அந்நாடு கருதும் நிலையில், ஈரானின் அணு ஆயுதம் தயாரிப்பதைத் தடுக்கும் வகையில், அந்நாட்டின் அணுசக்தி கட்டமைப்புகளைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியது.
இதைத் தொடர்ந்து, இஸ்ரேல் மீது ஈரானும் தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இந்தத் தாக்குதல் 4-ஆவது நீடித்து வரும் நிலையில், இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானில் உள்ள பெண்கள், குழந்தைகள் உள்பட 406 பேர் உயிரிழந்தனர். அதேபோல் இஸ்ரேலின் ஹைஃபா நகரில் ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் ஏராளமானோர் பலியானதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதனைத் தொடர்ந்து, இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் மற்றும் அமெரிக்க விசேஷ அம்சங்கள் தூதரகத்தைச் சுற்றி பாதுகாப்பை தீவிரப்படுத்தியுள்ளன. மேலும், இந்த தாக்குதல் ஈரான்-இஸ்ரேல் இடையிலான பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் அமையக்கூடும் எனத்தகவல் வெளியாகியுள்ளது.
சமீபகாலமாக, ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே மோதல் சூழ்நிலை அதிகரித்து வரும் நிலையில், இத்தகைய தாக்குதல் மேற்கொள்ளப்படுவதால், மேற்கு ஆசியா பகுதியில் அமைதிக்கு கடுமையான சவாலாக உருவெடுக்கிறது.
டெல் அவீவ் நகரில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகத்திற்கு அருகே ஈரான் மேற்கொண்ட தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் மீது ஈரான் திடீரென ஏவுகணைகளை செலுத்திய நிலையில், அவற்றில் ஒன்று அமெரிக்க தூதரகம் அருகில் வெடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தாக்குதலில் தூதரகத்தின் கட்டிடங்கள் சில சேதமடைந்துள்ளன. ஆனால் இதில் எந்த உயிர்ச்சேதமும் அல்லது காயங்களும் ஏற்படவில்லை என அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதர் மைக் ஹக்கபி வெளியிட்டுள்ள அறிக்கையில், "பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக தூதரகம் இன்றுடன் தற்காலிகமாக மூடப்படுகிறது. பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். பொதுமக்கள் அமைதியை கடைபிடிக்க வேண்டுகிறோம் என தெரிவித்துள்ளார்.
ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரித்தால், அது இஸ்ரேலுக்கு ஆபத்து என அந்நாடு கருதும் நிலையில், ஈரானின் அணு ஆயுதம் தயாரிப்பதைத் தடுக்கும் வகையில், அந்நாட்டின் அணுசக்தி கட்டமைப்புகளைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியது.
இதைத் தொடர்ந்து, இஸ்ரேல் மீது ஈரானும் தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இந்தத் தாக்குதல் 4-ஆவது நீடித்து வரும் நிலையில், இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானில் உள்ள பெண்கள், குழந்தைகள் உள்பட 406 பேர் உயிரிழந்தனர். அதேபோல் இஸ்ரேலின் ஹைஃபா நகரில் ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் ஏராளமானோர் பலியானதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதனைத் தொடர்ந்து, இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் மற்றும் அமெரிக்க விசேஷ அம்சங்கள் தூதரகத்தைச் சுற்றி பாதுகாப்பை தீவிரப்படுத்தியுள்ளன. மேலும், இந்த தாக்குதல் ஈரான்-இஸ்ரேல் இடையிலான பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் அமையக்கூடும் எனத்தகவல் வெளியாகியுள்ளது.
சமீபகாலமாக, ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே மோதல் சூழ்நிலை அதிகரித்து வரும் நிலையில், இத்தகைய தாக்குதல் மேற்கொள்ளப்படுவதால், மேற்கு ஆசியா பகுதியில் அமைதிக்கு கடுமையான சவாலாக உருவெடுக்கிறது.