உலகம்

பெருவெள்ளத்தில் மூழ்கிய நைஜீரிய நகரம்... 88 பேர் உயிரிழப்பு!

நைஜீரியாவில் கடும் மழையால் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் 88 பேர் நாடு முழுவதும் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும், மற்றும் ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை இழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பெருவெள்ளத்தில் மூழ்கிய நைஜீரிய நகரம்... 88 பேர் உயிரிழப்பு!
பெருவெள்ளத்தில் மூழ்கிய நைஜீரிய நகரம்... 88 பேர் உயிரிழப்பு!
நைஜீரியா நாட்டின் முக்கிய சந்தை நகரத்தில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளத்தில் 88 பேர் பலியாகியுள்ளனர். நைஜீரியாவின் நைஜர் மாநிலத்தின் மோக்வாவில் இடைவிடாது பல மணி நேரமாகப் பெய்த கனமழையால் பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளது.

நைஜீரியாவின் நைஜர் மாநிலத்தில், அமைந்துள்ள அணை ஒன்று உடைந்து மோக்வா எனும் சந்தை நகரத்தில் வெள்ளம் கரைபுரண்டோடியுள்ளது. இதனால், அங்குள்ள ஏராளமான கட்டடங்கள் மற்றும் வீடுகள் மூழ்கியுள்ளன. இதில், தற்ப்போது வரை 88 பேர் பலியாகியது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், அங்கு வெள்ள நீரில் மூழ்கியுள்ள பகுதிகளில் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், பலியானோரது எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

வெள்ளம் கடுமையாக தாக்கியதால் ஏராளமான கட்டடங்கள் மற்றும் வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன. மக்கள் பலர் தங்கள் வீடுகளில் சிக்கிக்கொண்ட நிலையில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இன்னும் பலர் காணாமல் போயிருக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே, உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளில் நிவாரணப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. உணவு, குடிநீர் மற்றும் மருத்துவ உதவிகளை அரசு மற்றும் உள்ளூர் அமைப்புகள் வழங்கி வருகின்றன. இதனை தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மக்களுக்கு பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்து செல்ல அதிகாரிகள் அறிவுரை வழங்கியுள்ளனர்.

இத்தகைய பெருவெள்ளம் கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை காரணமாக பல மாநிலங்களில் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, வடகிழக்கு மற்றும் நடுப்பகுதி மாநிலங்கள் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஆறுகள் மற்றும் நீர்நிலைகள் நிரம்பி வழிந்ததன் விளைவாக, பல கிராமங்கள் மற்றும் நகரங்கள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளன.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அதிகாரிகள், மீட்பு நடவடிக்கைகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர். தேசிய அவசரநிலை முகமை (NEMA) மற்றும் உள்ளூர் மீட்புப் படைகள் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றி வருகின்றன. இடம் பெயர்ந்த மக்களுக்கு தற்காலிக முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

நடைமுறை வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன, சேதமடைந்துள்ள வீடுகளும், கடைகளும் வியாபார நடவடிக்கைகளை முடக்கியுள்ளது. விவசாயத் துறைக்கும் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.

நைஜீரியாவில் காலநிலை மாற்றம் காரணமாக இந்தக் கனமழைகள் தொடர்ச்சியாக ஏற்படுவதாக வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த பேரழிவுக்கு அரசும், சர்வதேச அமைப்புகளும் ஒத்துழைத்து உடனடி உதவிகளை வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.