உலகம்

போர் நிறுத்தத்தில் அமெரிக்காவுக்கு எந்தப் பங்கும் இல்லை.. அதிபரிடம் தெரிவித்த பிரதமர்!

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தத்தில் அமெரிக்கா எந்தப் பங்கும் வகிக்கவில்லை என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பிடம் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

போர் நிறுத்தத்தில் அமெரிக்காவுக்கு எந்தப் பங்கும் இல்லை.. அதிபரிடம் தெரிவித்த பிரதமர்!
போர் நிறுத்தத்தில் அமெரிக்காவுக்கு எந்தப் பங்கும் இல்லை.. அதிபரிடம் தெரிவித்த பிரதமர்!
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உடன் பிரதமர் மோடி தொலைபேசியில் 35 நிமிடங்கள் உரையாடினார். அப்போது, தீவிரவாதத்துக்கு எதிராக போரிட அமெரிக்கா துணை நிற்கும் என மோடியிடம் டிரம்ப் உறுதி அளித்தார் என்று கூறப்படுகிறது. மேலும், சிந்தூர் நடவடிக்கை தொடர்பாக டிரம்ப்பிடம் பிரதமர் மோடி விரிவாக எடுத்துரைத்தார் என்றும் வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல்-ஈரான் இடையேயான மோதல் அதிகரித்து வரும் நிலையில், கனடாவில் இருந்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அமெரிக்காவிற்கு அவசர அவசரமாக புறப்பட்டுச் சென்றார். இதனால், ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடி மற்றும் டிரம்ப்பின் சந்திப்பு நடைபெறவில்லை . இதனால், ஜி7 மாநாட்டின்போது நேரில் சந்திக்காத நிலையில், தொலைபேசியில் இரு நாட்டுத் தலைவர்களும் பேசினர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புடன் பிரதமர் நரேந்திர மோடி 35 நிமிடம் தொலைபேசியில் உரையாடியதாகவும், அதில் ஆபரேஷன் சிந்தூர் குறித்து விளக்கியதாகவும் வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது வர்த்தக ரீதியான எந்த மத்தியஸ்தமும் நடைபெறவில்லை என்றும், பாகிஸ்தான் கேட்டுக் கொண்டதாலே மோதல் கைவிடப்பட்டதாகவும் கூறினார். இந்த சண்டை நிறுத்தத்தில் அமெரிக்காவுக்கு எந்தப் பங்கும் இல்லை என்று பிரதமர் மோடி திட்டவட்டமாக கூறியதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த உரையாடலின் போது, ​​கனடாவிலிருந்து திரும்பியவுடன் பிரதமர் மோடி அமெரிக்காவிற்கு வர அதிபர் ட்ரம்ப் அழைப்பு விடுத்ததாகவும், பிரதமர் மோடி அந்த அழைப்பை நிராகரித்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.