K U M U D A M   N E W S

Author : Vasuki

கனவா.. கனவா.. நான் காண்பது கனவா.. 70 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.185 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8,745 க்கும், சவரனுக்கு ரூ.1,480 உயர்ந்து ஒரு சவரன் ரூ.69,960க்கு விற்பனையாகிறது.

மசோதாக்கள் மீதான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு.. அரசின் சரியான நடவடிக்கைக்கு சான்று!

மசோதாக்கள் மீதான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு என்பது, தமிழக அரசு சரியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்பதை உறுதிபடுத்துவதற்கான சான்று என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

2 பேருந்துகள் ஒன்றோடொன்று மோதி விபத்து.. 15-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி!

கடலூர் மாவட்டம் ஆலப்பாக்கம் அருகே அரசு விரைவு பேருந்துடன் தனியார் பேருந்து மோதி விபத்து 15-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ள நிலையில், இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக ஆளுநர் விவகாரம்: எனக்கு காது கேட்க மாட்டேங்குது - நாகலாந்து ஆளுநர் பதில்

தமிழக ஆளுநர் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்த எழுப்பப்பட்ட கேள்விக்கு நாகலாந்து ஆளுநர் இல.கணேசன் எனக்கு இந்தக் காது வேலை செய்ய மாட்டேங்குது மிஷின் வைக்க வேண்டும் என்று கூறினார்.

சிறுவன் ஏற்படுத்திய கார் விபத்தில் முதியவர் பலி.. புதிய சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு!

14 வயது சிறுவன் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய சம்பவத்தில் 69 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து, அலட்சியமாக செயல்பட்டு மரணத்தை விளைவித்தல் என்ற புதிய சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

வீரபாண்டி ஆறுமுகம் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு.. மீண்டும் விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் அதிரடி!

மறைந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து, அவரது குடும்பத்தினரை விடுவித்து சேலம் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், வழக்கில் குற்றச்சாட்டுக்களைப் பதிவு செய்து, விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.

நீடிக்காத சந்தோஷம்.. மீண்டும் எகிறிய தங்கம் விலை.. இன்னைக்கு ரேட் என்ன தெரியுமா?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.150 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8,560 க்கு விற்பனையாகும் நிலையில், சவரனுக்கு ரூ.1200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.68,480க்கு விற்பனையாகிறது. கடந்த வாரத்தில் குறைந்த தங்கம் விலை, தற்போது மீண்டும் உச்சத்தை எட்டியுள்ளது. நேற்று ஒரே நாளில் தங்கத்தில் விலை இரண்டு முறை உயர்ந்தது. அதனைத்தொடர்ந்து இன்று ஒரே நாளில் ரூ.1200 உயர்ந்து மீண்டும் தங்கம் வாங்க காத்திருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சென்னையில் போதைப்பொருள் விற்பனை செய்யும் கும்பல் கைது.. போலீசார் அதிரடி

சென்னையில் மெத்தபெட்டமைன், ஹெராயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட வழக்கில் நைஜீரியா நாட்டு கும்பல், திரிபுரா மாநில கும்பலை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

ராகிங் கொடுமையால் மாணவன் விபரீத முடிவு...பள்ளியின் அலட்சியத்தால் பறிபோன உயிர்!

சென்னை சேத்துப்பட்டு தனியார் பள்ளியில் சக மாணவர்கள் கேலி கிண்டல் செய்ததால் பனிரெண்டாம் வகுப்பு மாணவன் நான்காவது மாடியில் உள்ள வீட்டிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு: கே.என். ரவிச்சந்திரனிடம் 10 மணி நேரம் விசாரணை!

சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில், கே.என். நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் 10 மணி நேரமாக விசாரணை நடத்தினர்.

ராஜஸ்தானை வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அபார வெற்றி.. புள்ளிப்பட்டியலில் GT முதலிடம்!

ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடரில், நேற்று நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 58 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

பாஜக தலைவர் யார்? பரபரப்பான அரசிலயல் சூழலில் மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று சென்னை வருகை!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று ( ஏப்.10 ) தமிழகம் வருகிறார். பாஜக மாநில தலைவர் மற்றும் சட்டசபை தேர்தல் கூட்டணி தொடர்பான முக்கிய தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாம்பன் பாலமா ? திராவிட மாடல் பாலமா ? சட்டப்பேரவையில் காரசார விவாதம்

பாம்பன் பாலமா ? திராவிட மாடல் பாலமா ? எது பெரியது? என்று சட்டப்பேரவையில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி ஸ்ரீனிவாசன் மற்றும் திமுக அமைச்சர்களிடையே காரசார விவாதம் நடைபெற்றது.

ரெப்போ வட்டி விகிதம் 6% ஆக குறைப்பு: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

வங்கிகளின் குறுகியகால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 6.25% லிருந்து 6% ஆக குறைக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதனைத்தொடர்ந்து, ரெப்போ வட்டு விகிதம் 0.25% குறைந்துள்ளதால், தால் வீடு, வாகன கடன்களுக்கான வட்டி விகிதம் குறைகிறது.

அமெரிக்காவின் வர்த்தக வரிவிதிப்பு - இணைந்து எதிர்கொள்ள இந்தியாவிற்கு சீனா அழைப்பு!

இந்தியா, சீனா மீதான அமெரிக்காவின் வர்த்தக வரிவிதிப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில், வரி விதிப்பு இணைந்து எதிர்ப்பு தெரிவிக்க இந்தியாவுக்கு சீனா அழைப்பு விடுத்துள்ளது.

கபாலீஸ்வரர் கோயில் கோலாகலமாக தொடங்கிய தேரோட்டம்.. அரோகரா கோஷங்களுடன் தேரை இழுத்த பக்தர்கள்!

சென்னையில் பங்குனி பெருவிழாவை முன்னிட்டு பிரசித்தி பெற்ற மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் தேரோட்டம் தொடங்கியது. திரளான பக்தர்கள் கூடி அரோகரா கோஷங்களுடன் தேரை வட்டம் பிடித்து இழுத்தனர்.

Gold Rate Today: தங்கம் விலை திடீர் ஏற்றம்..எவ்வளவு தெரியுமா?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.65 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8,290 க்கும், சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ஒரு சவரன் ரூ.66,320க்கு விற்பனையாகிறது.

குமரி அனந்தன் மறைவு: மகிழ்ச்சியோடு போய் வாருங்கள் அப்பா.. தமிழிசை சௌந்தரராஜன் உருக்கம்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவரான தமிழிசையின் தந்தை குமரி அனந்தன் (வயது 93) இன்று அதிகாலை வயது மூப்பு காரணமாக சென்னையில் காலமானார். குமரி அனந்தனின் உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது மகள் தமிழிசை சௌந்தரராஜன் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ள நிலையில், தந்தையின் உடலை பார்த்து தமிழிசை கதறி அழுத காட்சிகள் காண்பேரை கலங்கச் செய்தது.

காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் மறைவு.. அரசியல் தலைவர்கள் இரங்கல்!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தன் மறைவிற்கு, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சேப்பாக்கம் மைதானத்தில் செல்போன்கள் திருட்டு..74 செல்போன்கள் பறிமுதல்.. தின்பாஹாரியா கும்பல் கைது!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற IPL போட்டியை மையமாகக் கொண்டு, வடமாநில தின்பஹாரியா கும்பல் செல்போன்கள் திருட்டில் ஈடுபட்டது ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கும்பலின் 11 பேர் கைது செய்யப்பட்டு, 74 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர் மழையால் நெற்பயிர்கள் சேதம்.. விவசாயிகள் கவலை!

மதுரை அலங்காநல்லூர் பகுதியில் தொடர் மழையால் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்ததல் விவசாயிகள் கவலை ஆழ்ந்துள்ளனர்.

ஆளுநர் தனது விருப்பப்படி செயல்பட முடியாது - உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

ஆளுநர் தனது விருப்பப்படி செயல்பட முடியாது, அரசியலமைப்பில் அதற்கு இடமில்லை என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மசோதாக்களை நிறுத்தி வைத்தது சட்டவிரோதம் என்று உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

பெரியார் பல்கலை., துணைவேந்தர் ஜாமின்... காவல்துறை மனுவிற்கு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு, சேலம் நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய உத்தரவை ரத்து செய்யக் கோரி, காவல் துறை தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, துணைவேந்தர் தரப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

PBKS Vs CSK: தோல்வியிலிருந்து மீளுமா CSK.. பஞ்சாப் அணியுடன் இன்று மோதல்!

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 22-வது லீக் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.

IPL 2025: 3-வது வெற்றியை பெறப்போவது யார்? கொல்கத்தா - லக்னோ இன்று மோதல்!

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 21-வது லீக் போட்டியில், நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.