K U M U D A M   N E W S
Kumudam Ad

Author : VASUKI RAVICHANDHIRAN

சென்னையில் இருந்து இலங்கைக்கு சென்ற தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

சென்னையில் இருந்து இலங்கை சென்ற ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பஹல்காமில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் தப்பிச் சென்றார்களா? என்று இலங்கை விமான நிலையத்தில் பாதுகாப்பு படையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

சித்திரை திருவிழா... தங்ககுதிரை வாகனத்தில் எழுந்தருளிய மீனாட்சி சுந்தரேஸ்வரர்!

உலகப் புகழ்பெற்ற சித்திரை திருவிழா ஐந்தாம் நாள் நிகழ்வான தங்ககுதிரை வாகனத்தில் எழுந்தருளிய மீனாட்சியம்மன் சுந்தரேஸ்வரரை வழிநெடுகிலும் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

சஞ்சு சாம்சனுக்கு ஆதரவு.. ஸ்ரீசாந்த்-க்கு 3 ஆண்டுகள் தடை!

இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் விஜய் ஹசாரே தொடரில் விளையாடி இருந்தால் சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் இடம் பிடித்திருப்பார் என்று ஸ்ரீசாந்த் கூறியதால், கேரள கிரிக்கெட் சங்கம் 3 ஆண்டுகள் அவரை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.

கோடிக்கணக்கில் சம்பாதித்த இந்திய யூடியூபர்கள்! CEO வெளியிட்ட தகவல்!

இந்திய யூடியூபர்கள் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் ரூ.21 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளதாகவும், அவர்களுக்காக மேலும், ரூ.850 கோடி ஒதுக்க உள்ளதாகவும் யூ-டியூப் CEO நீல் மோகன் தெரிவித்துள்ளார்.

மூடப்பட்ட அட்டாரி-வாகா எல்லையை மீண்டும் திறந்த பாகிஸ்தான் ராணுவம்!

பஹல்காமில் கடந்த வாரம் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து, மூடப்பட்ட அட்டாரி-வாகா எல்லையை பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் திறந்துள்ளது.

விராட் கோலியுடன் இணையும் STR.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில், இந்தியாவின் முன்னணி பேட்ஸ்மானான விராட் கோலி, STR நடித்த பத்து தல படத்தில் இருந்து “நீ சிங்கம் தான்” என்ற பாடலை தான் மீண்டும் மீண்டும் கேட்பதாக கூறியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில், வைரலானதைத் தொடர்ந்து, இப்போது இந்தப் பாடல், பல கிரிக்கெட் அடிப்படையிலான ரீல்ஸ்கள் மற்றும் சமூக வலைதள வீடியோக்களில் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

'சர்பத் ஜிகாத்' சர்ச்சை: பாபா ராம்தேவை கடுமையாக சாடிய உயர்நீதிமன்றம்!

ரூஹ் அஃப்சாவுக்கு எதிரான சர்பத்-ஜிஹாத் தொடர்பாக கருத்து தெரிவித்த பாபா ராம்தேவ் வகுப்புவாத அவதூறுகளைப் பயன்படுத்தக் கூடாது என்று டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விசாரணைக்கு பின்னரே சாதிச்சான்றிதழ்கள் வழங்கவேண்டும் - தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

முழுமையான விசாராணைக்கு பிறகே சாதிச்சான்றிதழ்கள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் - டிடிவி தினகரன் பேச்சு

தேசிய ஜனநாயக கூட்டணி வலு பெற்று தமிழகத்தில் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று தமிழகத்தில் உள்ள திமுக ஆட்சியை விரட்ட அனைத்து கட்சிகளும் இணைய வாய்ப்பிருப்பதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

வயது முதிர்ந்த தம்பதி படுகொலை - அரசியல் தலைவர்கள் கண்டனம்!

ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே வயதான தம்பதி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.