K U M U D A M   N E W S
Kumudam Ad

Author : VASUKI RAVICHANDHIRAN

விமான பயணியிடம் துப்பாக்கி தோட்டா பறிமுதல்.. கோவை விமான நிலையத்தில் பரபரப்பு!

கோவை விமான நிலையத்தில் ஒரு பயணியிடம் இருந்து துப்பாக்கி தோட்டா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து பீளமேடு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்

ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றிக்கு மரியாதை: பாஜகவினர் கொட்டும் மழையில் பேரணி!

ஆப்ரேஷன் சிந்தூர் போர் வெற்றியை கொண்டாடும் வகையில் போரில் ஈடுபட்ட ராணுவத்திற்கு மரியாதை செலுத்தும் விதமாக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் நடிகை நமீதா கொட்டும் மழையில் தேசிய கொடியை ஏந்தி பாஜகவினர் பேரணியில் ஈடுபட்டனர்.

போனி கபூரின் புதிய முயற்சி.. உத்தரப்பிரதேசத்தில் உயர்தர திரைப்பட நகரம்!

போனி கபூரின் முயற்சியால், உத்தரப்பிரதேசத்தின் யமுனா எக்ஸ்பிரஸ் வே வழியில், ஜெவார் விமான நிலையத்திற்கு அருகில், உலகத் தரத்திலான திரைப்பட நகரம் உருவாகிறது. இந்த திட்டம், மாநிலத்தின் திரைப்படத் துறையை உலகளாவிய மையமாக மாற்றும் நோக்கில் ஜூன் மாதம் ஆரம்பிக்கப்பட உள்ளது.

செம்மரக்கட்டை கடத்தல் வழக்கு.. நாக்பூரில் அமலாக்கத்துறை கிடுக்கிப்பிடி விசாரணை..!

இந்தியாவில் இருந்து துபாய்க்கு செம்மரக்கட்டைகளை கடத்தும் முக்கிய நபரை அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்னையில் வைத்து கைது செய்துள்ளனர்.

பொறுமையா வருமான வரி தாக்கல் பண்ணுங்க.. கால அவகாசம் நீட்டிப்பு!

வருமான வரி தாக்கல் செய்ய வரும் ஜூலை 15 ஆம் தேதி கடைசி நாளாக இருந்த நிலையில், கூடுதலாக 45 நாட்கள் அவகாசம் அளித்து செப்டம்பர் 15 ஆம் தேதி வரை மத்திய நிதியமைச்சகம் நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

மதுபோதையில் டீக்கடையில் ரகளை.. 5 சிறுவர்கள் உள்ளிட்ட 9 பேர் கைது!

மதுபோதையில் டீக்கடையில் புகுந்து மூன்று பேரை அடித்து ரகளையில் ஈடுபட்ட 5 சிறார்கள் உட்பட 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கன்னியாகுமரிக்கு ரெட் அலர்ட்.. 4வது நாளாக கடலுக்கு செல்லாத நாட்டு படகு மீனவர்கள்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருவதால், நாட்டு படகு மீனவர்கள் 4வது நாளாக கடலுக்கு செல்லாததால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

14 நாள் தனிமைப்படுத்தப்பட்ட இந்திய விண்வெளி வீரர்.. நாசா கொடுத்த முக்கிய அப்டேட்..!

சர்வதேச விண்வெளி நிலையம் செல்லும் முதல் இந்திய வீரர் ஷுபான்ஷு சுக்லா, 14 நாள் தனிமைக்கு அனுப்பப்பட்டுள்ளார். விண்வெளி செல்லும் 3 வீரர்களையும், நாசா குழுவினர் உடல்நிலையை தகுதிப்படுத்தும் குவாரண்டைனுக்கு அனுப்பிவைத்து வாழ்த்து தெரிவித்தனர்.

தவெக பெண் நிர்வாகி மீது காவல்துறை தாக்குதல்.. தமிழ்நாடு முஸ்லிம் லீக் கண்டனம்!

தமிழக வெற்றிக் கழக பெண் நிர்வாகி மீது காவல்துறை தாக்குதல் நடத்தியதாக செய்திகள் வெளியான நிலையில், தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சியின் நிறுவனத் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதிகனமழையினால் நீலகிரியில் ரெட் அலர்ட்.. சுற்றுலாத்தலங்கள் மூடல்..!

நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், நீலகிரி மாவட்டத்திற்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், சுற்றுலாத்தலங்கள் மூடப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.